Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, 13 December 2014

அழகிய மார்கழித் திங்கள்



மார்கழிமாத நிகழ்வு பற்றி ஒரு சிறு கிறுக்கல் . அழகிய இந்த குளிர்காலத்தின் தொடக்கத்தின் தமிழகத்தில் நிகழ்பவைகள்


மாதமீது மாதமீது
கன்னியர்கள் போற்றுமாதம்
கண்ணனின்  மாதம்

வீடெங்கும் வாயிலில்
வண்ணக்கோலங்கள்   நிரம்பும்
மார்கழி  மாதம்

திருப்பள்ளியெழுச்சி பார்பதற்கும்
திருப்பாவை திருவெம்பாவை
ஓதிடவே  உவந்தமாதம்

மாலையிலே முத்தாய்கோலமிட்டு
பெண்கள் போற்றித்தொழும்
செவ்வாப்  பிள்ளையாரின்மாதம்

வைணவர்கள் கண்விழிக்கும்
ஏகாதசியும் ஆதிரையான்
மகிழ்ந்திட முழுமதியுடையமாதம்

நகரத்தாரும் ஈழத்தாரும்
கொண்டாடிமகிழ பிள்ளையார்
நோன்புடைய மாதமீது

உழுதுவிதைத்த உழவனுக்கு
மகிழ்வூட்டும் அறுவடைகள்
துவங்குகின்ற மாதம்

சிறப்புறவே  இல்வாழ்வுபுரியும்
மகளைதேடி வரும்பொங்கட்
பானைகளின்  மாதம்

---ஆ.தெக்கூர் கரு.கண.இராம.நா.இராமு

Monday, 17 November 2014

வீடு



செட்டிநாட்டு வீடுகள் :

செட்டிநாட்டு வீடு


மண்டிப்போன காடுகளையும் மரங்களையும் வெட்டி
நிலத்தையும் பக்குவமா சமபடுத்திக்
கடல் கடந்து நாடுவிட்டு நாடுசென்று
சிக்கனமாய் பொருள் சேர்த்து
பக்குவமாய் வீடுகட்டிக் கொண்டடிருக்கு செட்டியாரும்
மோப்பினிலே பலபலக்கும் பளிங்குத்தூணும்
இத்தாலிய டைல்சும் பெல்ஜியம் கண்ணாடியும் கொண்டு
பார்த்து பார்த்து பதிச்சுவச்சு
கலைநயமிக்க வாசலுக்கோ பர்மாதேக்கு கொண்டு
ஆளுயர சன்னளுடன் கதவுமிட்டு
உட்புறத்து திண்ணையிலே பிரும்மாண்ட தூண்களுடன்
வழுவழுப்பான பளிங்கு தரைகளுடன்
வளவசுத்தி ஓரத்தில் பட்டியக்கல்லும் பதிச்சி
மத்தியிலே ஆணடிக்கல்லும் ஒட்டி
நல்லதொரு விசாலமாய் முதற்கட்டும் கட்டியதை
தாங்கிநிற்கும் கல்லுத் தூண்களுமே
கட்டினிலே சுத்தியுள்ள அறைகளிலே ஒன்றைப்
படைக்கவே ஒதிக்கி கொண்டனரே
மேற்படியா ஆச்சிகளுக்கே பட்டாசாளையும் ஜன்னல்களில்
பிரித்தானிய கம்பிகொண்டு மேருகேற்றினரே
அதன்மேற்புறத்தில் வண்ணஓவியமும் தீட்டிசுற்றி சீனப்போம்மைகளுடன்
விளக்கு வைக்க மாடமும் அமைச்சாக
ஊருக்கே விருந்து வைக்க அகலமான
போசன் ஹாலும் எழுபிவச்சு
மேங்கோப்பு கூரையுமே தட்டோடும் சீமையோடும்
கொண்டு சென்சு பதிச்சுவச்சாக
ஆச்சிகளும் புழங்கிடவே சுருக்கமாய் இரண்டாங்
கட்டும் கட்டிவச்சு மகிழ்ந்தாக
உக்குரான அறையயுமே ரெண்டாங்கட்டுக்குள் ளேயமைத்து
பக்குவமாய் தானியமும் சேர்த்துவைத்தார்
வந்தவரும் பசியாற வக்கனையாய் சமைபதர்க்கு
கூடமுமே மூன்றங் கட்டினிலே
அதிலமைத்து சுள்ளிகளும் விரகுகளும் பதமாகக்
அடைவதற்கே சாளையையும் சேர்தமைதார்
பின்கட்டில் மாடுகட்ட தொழுவமும் கூட்டுவண்டி
நிற்பதற்கே ஒட்டுக்கூடமும் அமைத்து
புழங்குவதற்கே வற்றாத கிணறும் வெட்டிவைத்துச்
சலவைக்கல்லும் ஊன்றி வைத்தார்
பறந்து கிடக்கும் தோட்டமுடன் வண்டிமாடு
வந்துசெல்ல வழியும் அமைத்தனரே
காரைச்சுவர்கள் டாலடிக்க வெள்ளைக் கருவுடன்
சுண்ணாம்பும் சேர்த்து பூசிவித்தோம்
வாயிலுக்கு மேற்புறத்தில் புடைசூழத் சுதயாக
திருவா னவலும் நின்றாலே
அலங்கம் அலங்கமாய் கோட்டைபோல் வீடு
கட்டையிலே திருமகளும் வந்தால்
குளம்போல தேங்காமல் கடல்போலப் பெருகி
வாழ்வில் வளம் சேர்த்து நின்றாள்
கோட்டைபோல் வீடமைத்து வாழ்ந்தாலே நாட்டுக்
கோட்டையார் எனப்பெயரும் பெற்றோம்




வாயிலுக்கும் மேல் உள்ள திரு 

பாரம்பரிய உடையணிந்து வளவுக்கும் மத்தியில் வண்ணப் புள்ளி மயில் போல நடனம் புரியும் பெண்பாவைகள்

ஆறுமாதம் முன்பு என் சிந்தனையில் உதித்த இந்த கவிதையை இங்கு இன்று பகிர்ந்ததில் மையற்ற மகிழ்ச்சி .

                                                                 -- ஆ.தெக்கூர் கரு.கண.இராம.நா.இராமு

Friday, 24 October 2014

என் கற்பக விநாயகர்



ஆரியர்களும் வடநாட்டவர்கள் கொண்டுவந்த கணபதிக்கோ நான்கு கரங்கள் எங்கள் தமிழர்கள் கொண்டாடி தொழுத விநாயகருக்கோ இரண்டே கரங்கள் எங்கள் கற்பகக்தருவிற்கும்  என் முதல் வணக்கங்கள் உலகின் மிகப்பழம்பெரும் கணபதி எங்கள் கற்பகவிநாயகரே பிள்ளையார்பட்டி கற்பகம் அல்ல அல்ல குறையாத வரங்களை தரும் வள்ளல்

கற்பகக் தெய்வத்தின் மீது என் முதல் கவிப்பா





               அண்ட சராசரதிற்கு முழுமுதற் பொருளே 
               ஆற்றங்கரை ஓரத்திலும் இருப்போனே 
               இன்னல்களை போக்க வல்லவனே 
               ஈடு இணை இல்ல முதற்பொருளே 
               உலகிற்கு திருமுறைகளை தந்தவனே 
               ஊழ்வினை போக்க வல்லவனே 
               எலியையும் வாகனமாய் கொண்டோனே 
               ஏழைமை போக்கும் எளியோனே 
               ஐம்புலன்களையும் அடக்கி வாழ்த்திட அருள்போனே 
               ஒன்பது கோள்களையும் அடக்கி அல்பவனே
               ஓம் கார பிரணவத்தின் வடிவானவனே  
               ஒளவையை தும்பிக்கையால் கயிலையில் விட்டோனே 



                                                               - ஆ.தெக்கூர் கண.இராம.நா.இராமு