Showing posts with label குட்டிகதை. Show all posts
Showing posts with label குட்டிகதை. Show all posts

Thursday, 16 March 2017

குருவும் சீடனும்




ஒரு ஊரில் ஒரு சீடன்  தன்  குருவிடம் தனது நெடுநாள் சந்தேகத்தை கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ள முற்பட்டான்  அவன் தன் குருவிடம் பகுத்தறிவுக்கும் விதிக்கும் என்ன வித்தியாசம்என்ன என்று கேட்டான். 


 அதற்கு குரு சீடனைபாத்து உனது வலதுகாலை  மட்டும் ஊனாது நில் என்றார் அதன் படி அவனும் நின்றான். அடுத்து  சில நொடியில் குரு சீடனிடம்வலதுகாலை கீழே ஊனாது இடதுகாலையும் தூக்கு என்றார் அவனும் சற்றும் சிந்திக்காது தூக்க முற்பட்டான். அதன் விளைவாக கீழே விழுந்தான்.

அதன் பின் குரு சீடனிடன் பகுத்தறிவு என்பது ஊன்னால் ஒருகாலை தூக்க முடிந்தது அதுதான் பகுத்தறிவு. இரண்டு காலையும் ஒரு சேர தூக்கினால் அடிபடும் அது தான் விதி இப்போது புரிகிறதா என்று சீடனின்  சந்தேகத்திற்கு விளக்கம் கொடுத்தார். சீடனோ விதியை நினைத்து நொந்து கொண்டு இடுப்பை பிடித்து கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்றான்.