Tuesday 22 September 2020

#கம்பரும்_செட்டிநாடும்



நாட்டரசன்கோட்டை அருகேயுள்ள கருதுப்பட்டி என்ற கிராமத்தில்தான் கம்பர் நினைவிடம் அமைந்துள்ளது. “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்பார்கள். கம்பர் இயற்றிய ராமாயணத்தில் காதல் தமிழ், வீரத் தமிழ், ஆன்மிகத் தமிழ் என அனைத்தும் இருக்கும். அதனால்தான் இன்றும் இந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு கம்பர் சமாதி உள்ள இடத்திலிருந்து மண் எடுத்து குழந்தையின் நாக்கில் வைப்பது வழக்கமாக உள்ளது. அப்படிச் செய்வதால், குழந்தை  நல்ல தமிழாற்றலுடனும் மிகுந்த தமிழ் அறிவுடனும் வளரும் என்பது காலங்காலமாக இருந்துவரும் நம்பிக்கை.
கம்பன் வாழ்ந்த காலம் கி.பி 11-ம் நூற்றாண்டு. தஞ்சை மாவட்டம் தேரெழுந்தூர் எனும் ஊரில் பிறந்தவர். தான் எழுதிய ராமாயணத்தை  திருவெண்ணெய் நல்லூரில் அரங்கேற்றினார் என்றும் திருவரங்கத்தில் அரங்கேற்றினார் என்றும் சொல்லப்படுகின்றது. அதன் பின்னரே அவர் 'கவிச் சக்கரவர்த்தி' என அழைக்கப்பட்டார். சோழ மன்னன் குலோத்துங்க சோழனின் மகளுக்கும் கம்பன் மகனுக்கும் காதல் ஏற்படவே சோழ மன்னன் கோபம் கொண்டான். குலோத்துங்க சோழனின் அரசவையில் கொடிகட்டிப் பறந்தவர் கம்பர். புலவரின் குடும்பத்தில் தன் மகளுக்கு ஏற்பட்ட காதலை மன்னன் ஏற்கவில்லையென்றதும், மனம் வெறுத்தநிலையில் கம்பர் நாடோடியாகப் பல்வேறு இடங்களிலும் சுற்றித்திரிந்தார். இறுதியாக, சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் மாடு மேய்க்கும் சிறுவனிடம் முடிக்கரைக்கு கம்பர் வழிகேட்க, அந்த சிறுவனோ, "அடிக்கரை போனால் முடிக்கரை சென்றடையலாம்" என்று கவிநயத்துடன் சொன்னதைக் கேட்டு, அச்சிறுவனின் பேச்சாற்றல், கவிநயத்தால் கவரப்பட்ட கம்பர், "நாம் தங்க வேண்டிய இடம் முடிக்கரை அல்ல; நாட்டரசன்கோட்டைதான்" என்று முடிவு செய்தார். இதையடுத்து அங்கேயே தங்கினார் கம்பர். தன் இறுதி காலத்தையும் அங்கு கழித்தார்.
"தாடியுடன் தள்ளாத வயதில் வந்திருப்பவர் கம்பர்" என்று தெரிந்துகொண்டார் ஆவிச்சி செட்டியார். அதன் பிறகு ஆவிச்சி செட்டியார் தோட்டத்திலேயே தங்கியிருந்தார் கம்பர். மிகக் கொடிய வறுமையில் வாடிய கம்பர், நாட்டரசன்கோட்டையின் எல்லைப்புறத்தில் உள்ள ஆவிச்சி செட்டியார் தோட்டத்திலேயே மரணமடைந்தார். அவர் இறந்த இடத்தில் கோயில் கட்டப்பட்டு இன்றளவும் அப்பகுதி மக்களால் வணங்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள நாட்டார் நகரத்தார்கள் தங்களுக்கு பிள்ளைகளை இங்கு கொண்டுவந்து கம்பர் சாமதியின் முன் போட்டு குழந்தைகளுக்கு நாக்கில் மண் தொட்டு வைப்பது வழக்கம். 

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பதற்கேற்ப சீக்கிரம் பேச்சு வராத சிறு குழந்தைகளுக்கு கம்பன் சமாதி அடைந்த இங்கு ,மண் எடுத்து நாக்கில் வைக்கப்படுகிறது. இந்த வழக்கம் இப்பகுதி மக்களின் நம்பிக்கையாகும்.
மேலும் செட்டி நாட்டு பகுதியெங்கும் புரட்டாசி மாதத்தில் கம்பருக்கும் இன்தமிழுக்கும்  அணிசேர்க்கும் வகையில் கம்பராமாயணம் படித்தல் என்ற நிகழ்வு மிகவும் சிறப்புற நிகழ்த்தப்டுகின்றது. 1939 களில் இராமாயணம் வடவர் பண்பாட்டை முன்மொழிகிறது எனக்கூறி, பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கத்தினர் இராமாயணத்தை எரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
 அந்நிலையில் கம்பனது இலக்கிய ஆளுமையை தமிழர்களிடையே பரப்புவதற்காக திரு சா. கணேசன்  அவர்கள் 1939 ஏப்ரல் 2, 3 ஆகிய நாள்களில் இரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியார் தலைமையில் காரைக்குடியில் கம்பன் விழாவை நடத்தி, கம்பன் கழகத்தைத் தொடங்கினார்.
கம்பன், தான் இயற்றிய இராமகாதையை பங்குனி மாதம் அத்தத் திருநாளில் கவியரங்கேற்றினார் எனக்கூறும் தனிப்பாடல் ஒன்றைச் சான்றாகக் கொண்டு, கி.பி. 886 பிப்ரவரி 23 ஆம் நாளில்தான் அவ்வரங்கேற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும் என சா. கணேசன் கணித்தார். எனவே ஒவ்வோராண்டும் பங்குனி மாதம் அத்தத் திருநாளில் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் உள்ள கம்பன் சமாதி கோயிலில் கம்பன் விழாவின் நிறைவு நாளும் அந்நாளுக்கு முந்தைய பங்குனி மகம், பூரம், உத்திரம் ஆகிய நாள்களில் காரைக்குடியில் கம்பன் விழா தொடக்க நாளும் தொடரும் நாள்களும் காரைக்குடி கம்பன் கழகத்தால் இன்றுவரை கொண்டாடப்படுகிறது. அன்றுமுதல் இன்றுவரை செட்டிநாடு கம்பருக்கும் கம்பர் இயற்றிய கம்பராமாயணத்தையும் தொய்வின்றி போற்றி வருகின்றனர்.


--Ramu.Rm.N




Thursday 17 September 2020

கம்பராமாயணமும் நாகேசுவரன் கோவில் குறுஞ்சிற்பமும் 18


#Earlychola #Chola_miniatures  #panels #Ramayana #kamba_ramayana #comparison #nageswaran_temple #kumbakonam
Viradha was a Gandharva and was known as Tumburu, who served Kubera. He took a fancy for Rambha, the celestial nymph and failed in his duties. Kubera cursed him and it was by his curse that Tumburu turned into an ogre.Rama together with Sita saw in that forest full of wild animals a dreadful man-eating ogre of terrific voice. This fellow seems to have had an appetite that could never be appeased and carried ‘a store of food’ – bodies of animals that he killed – on his lance. Kamban, who is very fond of the gothic, soars high in his flight of imagination. And, here is his description of the very same lance of Viradha. ettodu ettu madha maa kari,’ sixteen elephants, ‘iratti arimaa’ thirty-two lions, ‘vatta vengaN aaLi padhinaaru’ and sixteen Yali – the legendary animal with the body of a lion and the trunk of an elephant – ‘kitta ittu idai kidandhana serindhadhu or kai thotta muththalai ayil’ were tied closely – like a string of flowers! – on his lance that he carried in one hand. From the continuing description, we understand that Viradha had used a python to string all the animals to his lance, as if he had decorated it with a string of flowers! And he carried them ever so lightly, in one hand.
#கம்பராமாயணம் #ஆரணிய_காண்டம்
 #விராதன்வதைப்படலம் 

அரசர் மணிமுடி, வானவர் விமானம், வாடத்துக் கோள்கள் ஆகியவற்றைப் பாம்புக் கயிற்றால் கட்டி, சன்னவீரம் என்னும் அணிகலனாக மார்பில் அணிந்திருந்தான் 11
இந்திரனின் யானையினுடைய நெற்றி ஓடையைத் தோள்வளையாக அணிந்திருந்தான் 12
காளிமை, கொடுமை, பாதகம், விடம், கனல் தாங்கி வரும் எமன் போல வந்தான் 13
புலி, யானை – தோல் உடுத்திக்கொண்டு, மலைப்பாம்பைக் கச்சாக இழுத்துக் கட்டிக்கொண்டு வந்தான் 14
சங்குகளைக் கங்கணமாகக் கையில் கட்டிக்கொண்டிருந்தான் 15
வானிலும் மண்ணிலும் இருப்பது போல நடந்து வந்தான் 16
பூதங்கள் எல்லாம் ஓருருவம் கொண்டது போன்ற வலிமை படைத்தவன் அவன் 17
இராம இலக்குவர் முன் விராதன் இவ்வாறு வந்து தோன்றினான் 18
நில் நில் என்று சொல்லிக்கொண்டு தின்னுவதற்காகச் சீதையை ஒரு கையால் தூக்கினான் 19
பன்னகாதிபர் பணா மணி பறித்து, அவை பகுத்
தென்ன, வானவர் விமானம் இடையிட்டு அரவிடைத்
துன்னு கோளினொடு தாரகை, தொடுத்த துழனிச்
சன்னவீரம் இடை மின்னு தட மார்பினொடுமே. 11

பம்பு செக்கர், எரி, ஒக்கும் மயிர் பக்கம் எரிய,
கும்பம் உற்ற உயர் நெற்றியின் விசித்து, ஒளி குலாம்
உம்பருக்கு அரசன் மால் கரியின் ஓடை, எயிறு ஒண்
கிம்புரிப் பெரிய தோள்வளையொடும் கிளரவே. 12

தங்கு திண் கரிய காளிமை தழைந்து தவழ,
பொங்கு வெங் கொடுமை என்பது புழுங்கி எழ, மா
மங்கு பாதகம், விடம், கனல், வயங்கு திமிரக்
கங்குல், பூசி வருகின்ற கலி காலம் எனவே,   13

செற்ற வாள் உழுவை வன் செறி அதள் திருகுறச்
சுற்றி, வாரண உரித் தொகுதி நீவி தொடர,
கொற்றம் மேவு திசை யானையின் மணிக் குலமுடைக்
கற்றை மாசுணம் விரித்து வரி, கச்சு ஒளிரவே. 14

செங் கண் அங்க அரவின் பொரு இல் செம் மணி விராய்,
வெங் கண் அங்கவலயங்களும், இலங்க விரவிச்
சங்கு அணங்கிய சலஞ்சலம் அலம்பு தவளக்
கங்கணங்களும், இலங்கிய கரம் பிறழவே,     15

முந்து வெள்ளிமலை பொன்னின் மலையொடு முரண,
பந்து முந்து கழல் பாடுபட ஊடு படர்வோன்,
வந்து மண்ணினிடையோன் எனினும், வானினிடையோர்
சிந்தையுள்ளும் விழியுள்ளும் உளன் என்ற திறலோன்.     16

பூதம் அத்தனையும் ஓர் வடிவு கொண்டு, புதிது என்று
ஓத ஒத்த உருவத்தன்; உரும் ஒத்த குரலன்;
காதலித்து அயன் அளித்த கடை இட்ட கணிதப்
பாத லக்கம் மதவெற்பு அவை படைத்த வலியான்.   17
சார வந்து, அயல் விலங்கினன் - மரங்கள் தறையில்
பேர, வன் கிரி பிளந்து உக, வளர்ந்து இகல் பெறா
வீர வெஞ் சிலையினோர் எதிர், விராதன் எனும் அக்
கோர வெங் கண் உரும் ஏறு அன கொடுந் தொழிலினான். 18

'நில்லும், நில்லும்' என வந்து, நிணம் உண்ட நெடு வெண்
பல்லும், வல் எயிறும், மின்னு பகு வாய் முழை திறந்து,
அல்லி புல்லும் அலர் அன்னம் அனையாளை, ஒரு கை,
சொல்லும் எல்லையில், முகந்து உயர் விசும்பு தொடர,    19

----Ramu.Rm.N

கம்பராமாயணமும் நாகேசுவரன் கோவில் குறுஞ்சிற்பமும் 17


#கம்பராமாயணம் #கிட்கிந்தா_காண்டம் #நட்புக்கோட்படலம்

#வாலியின்_சிறப்பு

அவன் உள்ளத்தோடு ஒன்றியே உலகம் பிழைத்திருக்கிறது 46 அவன் இருக்குமிடத்தில் அச்சத்தால் இடி கூட இடிக்காது. 47 இராவணனைத் தன் வாலினால் கட்டிக்கொண்டு வந்தவன் 48 இந்திரன், சந்திரன் அவன் முன் வரவாட்டார்கள் 49


'வெள்ளம் ஏழு பத்து உள்ள, மேருவைத்
தள்ளல் ஆன தோள் அரியின் தானையான்;
உள்ளம் ஒன்றி எவ் உயிரும் வாழுமால்,-
வள்ளலே! - அவன் வலியின் வன்மையால், 46

'மழை இடிப்பு உறா; வய வெஞ் சீய மா
முழை இடிப்பு உறா; முரண் வெங் காலும் மென்
தழை துடிப்புறச் சார்வு உறாது; - அவன்
விழைவிடத்தின்மேல், விளிவை அஞ்சலால். 47


'மெய்க்கொள் வாலினால், மிடல் இராவணன்
தொக்க தோள் உறத் தொடர்ப்படுத்த நாள்,
புக்கிலாதவும், பொழி அரத்த நீர்
உக்கிலாத வேறு உலகம் யாவதோ? 48

'இந்திரன் தனிப் புதல்வன், இன் அளிச்
சந்திரன் தழைத்தனைய தன்மையான்,
அந்தகன் தனக்கு அரிய ஆணையான்,
முந்தி வந்தனன், இவனின் - மொய்ம்பினோய்! 49


#Earlychola #Chola_miniatures  #panels #Ramayana #kamba_ramayana #comparison #nageswaran_temple #kumbakonam

Vali, who was the son of Indra, was a devotee of Lord Shiva and was endowed with extraordinary strength. He assisted the Devas to churn the ocean of milk in their effort to obtain elixir – amrita. That is, even they depended on his strength in bring their effort to fruition. He was so valiant that he tied the mighty Ravana with his tail. Ravana was desirous of a single combat with Vali in order to establish his supremacy. 


Unfortunately he did not know that he was no match for Vali. He sneaked behind Vali when he sitting in an island, with closed eyes in preparation for meditation. Vali sensed this and tied Ravana in his tail, jumped over hills and scaled all the peaks, dipped in the oceans seven with Ravana hanging precariously from his tail. He reached home and tied Ravana over the cradle of Angada, as if he were a toy alive. Angada, the child in the cradle was so amused at the ‘ten headed insect.’ Angada uses this as a point of particular mention when he meets Ravana later, as the emissary of Rama before the commencement of war. Vali had other special boons as well. One such was that Vali would receive half the strength of his enemy, just as he encounters them. 

---- Ramu.Rm.N