Tuesday 28 October 2014

இன்றைய நீர்நிலைகளின் (கண்மாய்கள் ) நிலை

தமிழகத்தில் கனமழையால் ஏரிகள் குளங்கள் நிரம்பி வழிகின்றன என்று கூறுகின்றனர் . சற்று சிந்திக்க வேண்டும் . நம் தமிழகத்தில் பாதிக்கும் மேற்பட்ட ஏரிகள் குளங்கள் துர்வாராமல் அப்படியே விட்டுவிட்டு மண் மூடி மைதானாக மாறியது . சில கம்மாய்கள் குட்டையாகவும் மாறியது . இன்று அந்த குட்டையாக மாறியுள்ள கம்மாய்கள் நிரம்பியது என்று நாம் நிம்மதி கொள்ளமுடியாது . காரணம் இவற்றில் தேங்கும் நீர் ஓரிரு மாதங்கள் தான் தாகுப்பிடிக்கும் . நாம் வறட்சியையும் போதியளவு மழை இல்லாத காலத்தில் நாம் நம் நீர் தேக்கங்களை ஆழப்படுத்தி தூர்வாரி வைத்திருந்தால் நாம் நம் மழைநீரை வீணாக்காமல் சேமித்திருக்கலாம் . இன்று நாம் நீர்நிலைகள் கரையோரமாக உள்ள பகுதிகளை குப்பைதொட்டியாக மாற்றாமல் பாத்துக்க வேண்டும் . நீர்நிலைகள் வெறும் நீர் தேக்கங்கள் மட்டும் அல்ல. இந்த நீர்நிலைகள் எல்லாம் வெறும் மழைநீர் வடிகால்கள் அல்ல என்பதை என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும் .நீரிநிலைகள் இந்த உலகின் உணவுச் சங்கிலியின் முக்கியமான ஒரு பங்கு வகிக்கிறது . இன்று நீர் நிலைகள் இல்லை என்றால் அதில் வாழும் நுண்னுயிர்கள் இல்லை அவற்றை உணவாக உண்ணும் பூச்சிகள் இல்லை , அந்த பூச்சிகள் நம்பி உள்ள தவளை , மீன்கள் இல்லை இவற்றை உணவாக உண்ணும் பாம்பு கழுகு போன்ற உயிரினங்கள் உணவு ??? இப்படி நம் உலகின் உணவு சங்கிலியில் ஒன்றை ஒன்று சார்ந்து தான் உள்ளோம் . இந்த சுழற்சியில் ஒன்று பாதிக்கபட்டால் பாதிப்பு அனைவருக்கும் தான் .இந்த உணவு சங்கலியை பாதுகாக்கும் பொறுப்பு நாம் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக இருக்கவேண்டும். வெறும் மரம் நட்டால் மட்டும் போதாது . அந்த மரத்தால் நமக்கு கிடைக்கும் மழையை சேமிப்பது எப்படி ??? சற்று சிந்தியுங்கள் ???? நமக்கு இந்த இயற்கை அன்னையை பாதுகாக்க உரிமைமட்டும் தான் உண்டு அந்த இயற்கை அன்னையை சேதப்படுத்தி அழிக்க நமக்கு உரிமை இல்லை . அப்படி செய்தால் அழிவு நமக்கும் நம் சங்கதிகளுக்கும் தான் . இயற்கையை பாத்துக்காஅரசைமட்டும் தான் நம்பி இருக்கவேண்டும் என்பதில்லை நாமும் நம் கடமையை இயற்கை அளித்த கோடையை நாம் நம்மால் முடிந்ததை செய்யவேண்டும்.

பிள்ளையார்பட்டி குளம்

ஊரணி

                                                                                                                                                                இன்று குடிக்கும் நீரை கூட காசு கொடுத்து வாங்கும் அவலநிலையில் உள்ளோம். அன்று நம் தமிழகத்தில் பெய்யாதா மழையா இன்று பெய்துவிட்டது . இதை நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் மழைநீர் நீரை நாம் சேமிப்பு செய்து நிலத்தின் நீர்மட்டத்தை பாதுகாப்போம் அன்று கட்டாய மழைநீர் சேமிப்பு திட்டத்தை அரசு கட்டாயமாகியது அன்று நாம் பெயரளவில் இதை நாமும் செய்தோம் .இன்று பல வீடுகளில் மாலை நீர் சேமிப்பு தொட்டிகள் இல்லாமல் செய்து விட்டோம் . சில வீடுகளில் சிறப்பாக இந்த முறையை பராமரித்து மழைநீரை சேமித்தும் வருகின்றனர் .



காஞ்சிபுரம் , திருவள்ளூர் , சென்னை ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டும் 1200 நீரி தேக்கம் ஏரிகள் இருந்தன அவற்றை எல்லாம் பிளாட்டு போட்டு ஏரிகளுக்கும் மூடுவிழா நடத்திவிட்டு இன்று எங்கள் நகருக்குள் வெள்ளம் வந்துவிட்டது . பாம்பு மீன் தவளைகள் நீரில் அடித்துக்கொண்டு வீடுகளுக்கும் முன் வருகின்றன என்று புலம்பி என்ன பயன் . அன்று தெரிந்து வினை விதைத்தீர்களோ தெரியாமல் விதைத்தீர்களோ இன்று அவற்றைஅறுவடை அறுவடை செய்தே ஆகவேண்டும் . புலம்பி பயனில்லை . அன்று அமைத்து வைத்த ஏரிகளை நீரி தேக்கங்களாகவும் வடிகால்களாக விளங்கின அவற்றின் மீது வீட்டை கட்டி குடியேறினால் யார் என்ன செய்ய முடியும் ???? 1200 ஏரிகள் இருந்த இந்த மூன்று மாவட்டத்தில் இவற்றை பாதுகாத்து வைக்காமல் அவற்றை இன்று நாம் இழந்து விட்டோம் .இன்று சென்னைக்குள் இருக்கும் ஏரிகளை விரல்விட்டு எண்ணி விடலாம்

சிந்திப்போம் செயல்படுவோம்

No comments: