Wednesday 8 July 2015

நடுவீட்டுக் கோலம்

கோலமீது கோலமீது அழகான கோலமீது
பச்சருசி மாவுகொண்டு தீட்டும்  கோலமீது
நகரத்தாரின்  தனித்துவ கவின்மிகு கோலமீது
ஆச்சிகள் கைவண்ணத்தில்  மிளிரும் கோலம்
மங்கள நிகழ்வுக்கு முந்திவரும் கோலமீது
பாங்குடனே பொட்டிகட்டி சிறப்புறவே அதை
சுற்றி  அழகுடனே முத்துமுத்தாய் புள்ளிகுத்திட
திருவும் கண்டுமகிழ மங்கலங்கள் கூடியதே !!!


காவடிப் பூசையிலும் பிள்ளையார் நோன்பினிலும்
தைதிங்கள்  பங்குனியில் பிறக்கும் பொங்கலிலும்
வீட்டுப் படைப்பின்போதும் சித்திரை முழுமதியன்றும்
திருமணம்  சொல்லையிலும் வேவுயிறகையின் போதும்
மருந்து குடிகையிலும் பிள்ளைபேற்றிலும்  என்று
குடும்பத்தில் ஒற்றுமையில்  உருக்கொண்ட  கோலமீது
செட்டிமகன் வாழ்வோடு கலந்துநிற்கும் கோலமீது
செட்டிநாட்டவர் தனித்துவ அடையாளக் கோலமீது !!!



- ஆ.தெக்கூர் கண. இராம. நா. இராமநாதன்






No comments: