Saturday 13 December 2014

அழகிய மார்கழித் திங்கள்



மார்கழிமாத நிகழ்வு பற்றி ஒரு சிறு கிறுக்கல் . அழகிய இந்த குளிர்காலத்தின் தொடக்கத்தின் தமிழகத்தில் நிகழ்பவைகள்


மாதமீது மாதமீது
கன்னியர்கள் போற்றுமாதம்
கண்ணனின்  மாதம்

வீடெங்கும் வாயிலில்
வண்ணக்கோலங்கள்   நிரம்பும்
மார்கழி  மாதம்

திருப்பள்ளியெழுச்சி பார்பதற்கும்
திருப்பாவை திருவெம்பாவை
ஓதிடவே  உவந்தமாதம்

மாலையிலே முத்தாய்கோலமிட்டு
பெண்கள் போற்றித்தொழும்
செவ்வாப்  பிள்ளையாரின்மாதம்

வைணவர்கள் கண்விழிக்கும்
ஏகாதசியும் ஆதிரையான்
மகிழ்ந்திட முழுமதியுடையமாதம்

நகரத்தாரும் ஈழத்தாரும்
கொண்டாடிமகிழ பிள்ளையார்
நோன்புடைய மாதமீது

உழுதுவிதைத்த உழவனுக்கு
மகிழ்வூட்டும் அறுவடைகள்
துவங்குகின்ற மாதம்

சிறப்புறவே  இல்வாழ்வுபுரியும்
மகளைதேடி வரும்பொங்கட்
பானைகளின்  மாதம்

---ஆ.தெக்கூர் கரு.கண.இராம.நா.இராமு

No comments: