Monday 10 April 2017

சுயம்பு காரனேஷ்வரர் காரணி (சுருட்டபல்லி)

 சுருட்டப்பல்லி என்றது நினைவுகக்கு வருவது பள்ளிகொண்டேசுவரர் இந்த கோவிலில் இருந்து ஒரு இரண்டரை கிலோமீட்டர் தொலைவில் காரணி என்னும் கிராமத்தில் ஆரணி ஆற்றங்கரையில் உள்ள குன்றின்மீது அமைந்துள்ளது இந்த சுயம்பு காரனேசுவர் கோவில். மிகச்சிறிய குன்றின் மீது இந்த சுயம்பு காரனேசுவர் அருள் செய்கின்றார். வனத்துறைக்கு உட்படது இந்த குன்று . அரசு அனுமதியுடன் இந்த கோவில் தனியார் அமைப்பின் மூலம் இந்த கோவில் நிர்வகிக்கப் படுகின்றது. ஆந்திர பயணத்தின் போது பலமுறை இந்த குன்றுக்கோவிலை கடக்கும் போது எல்லாம் என்ன இருக்கும் சென்றுப் பார்க்கலாம் என்று தோன்றும் ஆனால் அதற்கு சரியான வாய்ப்பு கிட்டவில்லை. 







இந்த முறை தற்செயலாக எதிர்பாராத விதமாக இந்த வாய்ப்பு கிட்டியது. தற்போது இந்த கோவிலுக்கு வாகனங்கள் செல்ல சிமிண்ட் சாலை அமைக்கும் பணி கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்ந்து கொண்டு உள்ளது. மிகவும் அமைதியான அழகான ஒரு சிறிய கோவில் குன்றுப் பகுதியில் உள்ளது. 






குன்றின் மீது இருந்து பார்த்தால் மனதுக்கு மிகவும் ரம்மியமான காட்சிகளாக பச்சை புல்வெளிகள் தோப்புகள் ஆற்றுப்பகுதிகள் என்று ரம்மியமான காட்சிகளை காண மிகவும் இதமாக இருக்கும். குன்றின் மீது தகரக்கூடத்தினுள் சுயம்பு மூர்த்தியாக ஈசன் நந்தியுடன் எழுந்தருளி இருகின்றார். அருகில் செல்வகனபதி மற்றும் பாலமுருகனுடன் ஈசன் .கோவிலை சுற்றி தற்போது வில்வம் ,வேம்பு, தென்னை , வெள்ளெருக்கு , மா , பலா , முந்தரி வாழை என்று பலவகை மரங்கள் அங்காங்கே நடப்பட்டு சோலையாக்கும் பணியை ஒரு தோட்டக்காரரை பணியமர்த்தி செய்து வருகின்றனர் . மிகவும் சிறப்பாக தோட்டத்தையும் ஆலயப்பகுதியையும் பராமரித்து வருகிறார் அந்த பெரியவர்.






காரனேசுவருக்கு இரண்டு கால பூசை நிகழ்த்தப்படுகின்றன. காலை 8.30 இருந்து 9.30 க்குள் ஒரு கால பூசையும் மாலை 5 மணிக்கு மேல் 6மணிக்குள்ளும் இரண்டாம் கால பூசை நிகழ்ந்தப்படுகின்றது. பிரதோஷ வழிபாடும் இங்கு நிகழ்த்தப்படுகின்றது. இந்த கோவிலுக்கு பூசகர் ஊத்துக்கோட்டையில் இருந்து வந்து சொல்லுகின்றார் . இங்கு அம்பாள் சன்னதி இல்லை . 









ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் உள்ள முந்திரி மரத்தின் அடியில் சிரிய திருவடியாகிய அனுமன் உரைவதாக நம்பப்படுகிறது. சிலர் இந்த இடத்தில் அனுமன் உரைவதை உணர்ந்ததாக சொல்லப்படுகின்றது. அந்த முந்திரி மரத்து அடியில் எந்த ஒரு கருங்கல் சிலைகள் கிடையாது ஆனால் ஒரு சிறு அனுமனின் மண் பொம்மை மட்டும் உள்ளது. அவ்விடத்தில் விளக்கு மட்டும் ஏற்றி வழிபடுகின்றனர் மக்கள். 



 

அனுமன் உறையும் முந்திரி மரம்



சுருட்டப்பல்லி வழியாக உங்கள் பயணத்தின் போது தவராது இந்த ஈசனை வழிபட்டு சொல்லுங்கள் மிகவும் அருகையான அமைதியான ஒரு இடம் .

No comments: