Sunday 31 May 2020

வசந்தத்தில் வந்துதித்த #வாலை!!!

பட்டுப்போல் நிலவறிக்க வந்துதித்த பொன்திருவே !
கண்ணோ கமலப்பூ கண்மணியோ ஏலம்பூ கையிரண்டும் காந்தள்பூ காலிரண்டும் தாழம்பூ
காதிரண்டும் பிச்சிப்பூவாம் மேனியோ செண்பகப்பூவாம்
சிரித்தால் பொன்னுதிரும் பேசிடவோ பாண்டிமுத்துதிரும்
பத்துவர்ண பட்டுகொண்ட மேல்விதானமாம் #தில்லையிலே
தேரோடும் வீதியெங்கும் சிலம்பதிர ஓடித்திரிந்தாயோ ?!
வண்டுகள் கவிபாட பூமரங்கள் கூத்தாடிமகிழ
செண்டுகள் தானாட தேசங்களும் கொண்டாட
அரும்பாய் உதித்துவந்த #வாலைபெண் இவளோ ?!
வசந்தருதுவில் வந்துதித்த எங்கள் குஞ்சலமே!
உத்தமியாள் பெருமை கொள்ளும் மரகதவடிவே !
வாரிபடியளக்கும் மகிமை உள்ளார் புத்திரியோ ?!
சங்கு முழங்குதடி பாண்டிநாட்டு எல்லையிலேயே
சொக்கன் மகிழ்மீனாளும் உன்னை தந்தாளோ ?!
அம்மான்கள் குடியுயர வந்துதித்த புதுமலரே !!

வேணும் மலையாளத் தொட்டியத்து கருப்பர் துணை


#அன்புடைய__அம்மான்
இராம.நா.இராமநாதன்..

#birthday #poorani #vasantha #valai #blessed  #வைகாசி18 #wishes  #cutee

No comments: