Saturday 1 August 2020

பொன்னியின் வருகை

பொன்னியின் வருகை


#புதுவெள்ளமென நீரினிலே-நாம்
ஆடி வந்து மகிழ..
#பொன்னியின் வரவால் வளமுடைய
காலமும் இன்று கனிந்ததே..
கழனி போல எங்கள் வாழ்வும்
கதிர்விட்டு #செழுமை சேர்திடுவாய்..
கரைமருங்கில் கழியெல்லாம் பொன்
கொழிக்க செய்திடுவாய் !
#காவிரித்தாய் மடியினிலே மனக்
கவலையெல்லாம் மறப்போம்..
களிப்புடனே நின்மடியில் ஆடிப்பாடி
காதல் கூடச் செய்வோம்..
நிலவரிக்கும் வேலையிலே #குடமலைபாவையோடு 
முழுமனதாய் அமர்திடுவோம்..
முப்பொழுதும் அருசுவையுண்டு -பழங்
கதைகள்பேசி மகிழ்வோம்..
#தந்தமிழ்ப்_பாவை நின்வரவாலெங்கள்
வாழ்வில் நற்பேறுதந்திடுவாயே
மனங்களில் வேற்றுமையைக் களைந்தெறிந்து
ஒற்றுமையில் திளைத்திடசெய்க..
பல்லுயிர்ஓம்புப் செய்திடும் பொன்ரிசே
நீ என்றென்றும் வாழி ! வாழியவே !! 

பாவாக்கம் : று.நா.இராமு


No comments: