Friday, 21 November 2014

பொன்னனும் துறவியின் சுருக்கு பையும்

                                 ஒரு ஊரில் பொன்னன் என்ற ஒரு செல்வந்தன் வாழ்ந்து வந்தான் அவனுக்கும் திடிரென ஒரு சந்தேகம் எழுந்துதது. நம் ஊரில் மக்கள் மூன்று பிரிவாக வாழ்கிறார்கள்  வறியவன் , செல்வந்தன் மற்றும் ஓர் பிரிவு இரண்டிற்கும் இடையில் உள்ள நடுதரமானனவர்கள் இவர்களில் யார் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள விரும்பினான். பொன்னன் மனதில் ஒரு எண்ணம் வந்தது இரவு மக்கள் தூங்குவதை  வைத்து முடிவுக்கும் வரலாம் என்று நினைத்தான்  

                   பொன்னன் அன்று இரவு அந்த ஊரை சுற்றி பார்த்தான். முதலில் செல்வந்தர்கள் குடியிருக்கும் பகுதிக்குள் சென்றான் அங்கு அவர்கள  மாளிகைகள் விளக்கொளியில் மின்னியது . அங்கு வீட்டில்  ஏற்றி வைக்கப் பட்டிருந்த ஊதுபத்தி வாசனை தெருவரைக்கும் வீசியது.மற்றும் விருந்து உணவு சமைக்கும் வாடை கமகமத்தது உடன் நாட்டியம் இசை யென கலைகட்டியது அங்கு இதையெல்லாம் மனதில் கணக்கும் பொட்டுவைத்துக்கொண்டார்.



                    
                     அடுத்து உள்ள  வீதி நடுத்தர மக்கள் வாழும் வீதிக்கும் சென்றான்.அங்கு வீடுகள் மிகப்பெரிய ஆளவில் இல்லாமல் சற்று நடுத்தரமான அளவில் இருந்தன ஓரிரு தீபங்கள் ஏற்றப்பட்டும் சற்று ஆரவாரம் குறைந்து காணப்பட்டது . இவற்றையும் பொன்னன் மனதில் வைத்துக்கொண்டு அடுத்த பகுதிக்கும் சென்றான் . 

                           மூன்றாவது பகுதி வறியவர்கள் வாழும் பகுதிக்கும் சென்றான் .அங்கு வீடுகள் புனையோலை , தென்னை ஓலையால் முடியப்பட்ட வீடுகள் மிகவும் எளிய வாழ்க்கையை வாழ்ந்தனர். இவற்றையும் மனதில் எற்றிகொண்டான் . பொன்னன் இந்த மூன்று காட்சியையும் கண்டுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது  அங்கு வழியில் ஒரு மரத்தடியில் ஒரு துறவியை கண்டான் .
  
                        பொன்னன் அந்த துறவியை பார்த்து தனக்கு வந்த சந்தேகத்தை கூறினான்.உடன் அவன் கண்ட காட்சியையும் துறவியிடம் கூறினான். நீங்கள் தான் விளக்கம் தரவேண்டும் என்றான் .துறவி  பொன்னனிடம் நீ எனக்கும்  ஒரு உதவி செய்யவேண்டும் என்றான். பொன்னன் என்ன உதவி நான்  செய்கிறேன் என்றான் .துறவி தன் பையில் வைத்திருந்த ஒரு கைப்பையை எடுத்து இதில் 5 கை பிடி மண்ணை நிரப்பி தரவேண்டும்  என்று  சொன்னார் .  பொண்ணா நீ பையை பிடித்துக்கொள் நான் மண்ணை நிரப்புகிறேன் என்றார் . 

                      ஒரு கைப்பிடி மண்ணை நிரப்பினர் உள்ளே சென்றது. அடுத்த கைப்பிடி மண்ணை நிறப்ப பை நிரம்பியது . மூன்றாவது கை மண்ணை நிரப்பினார் கீழே கொட்டியது. அடுத்து நான்காவது கை மண்ணையும் பையில் போட முயன்றார் மண் கீழே சிந்தியது . இதை கன்னட பொன்னன் துறவியை பார்த்து  பை தான் கொள்ளவில்லையே ஏன் மீண்டும் முயற்சி செய்துகொண்டு நேரத்தை விரையமாக்குகிறோம் என்றான் பொன்னன்.

                                துறவி  சிரித்த படியே சொன்னார் நீ தெரிந்துகொள்ள நினைக்கும் கேள்விக்கு  பதில் நீயே ஒன்றை மனதில் இதுதான் என்று  நினைத்துக்கொண்டு என்னிடம் பதில் கேட்பது அது எப்படி ஏற்புடையதாக இருக்கும் . சிலரிடம் கலந்து ஆலோசனை செய்து விட்டு முடிவுசெய்தால் சிறப்பான ஒன்று .ஆனால் நீயே  ஒரு கருத்தை மனதில் வைத்துகொண்டு மற்றவரிடம் நீ யூகித்து வைத்தது சரியென்ற மனநிலையில் பிறரிடன் கேட்கும் அவர்கள் பதில் எப்படி உள்ளே உனக்கு சென்றடையும் என்றார் .



           உங்கள் கருத்து முற்றிலும் உண்மை தான் இனி இது போல் யாரிடமும் நடந்து கொள்ள மாட்டேன்  மன்னியுங்கள் என்றான் பொன்னன் . சரி ஐயா பதில் சொல்லுங்கள் என்றான் .அதற்கு துறவி நீ மக்களை மூன்று வகையாக பிரித்து பார்க்காதே . அனைவரும் ஒன்று தான் .அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்கின்றார்கள் என்றால் செல்வந்தன் மேலும் செல்வதை சேர்க்கவும் பாதுகாக்கவும் நினைப்பு . வறியவன் செல்வம் சேரக் ஆசைபடுகிறான் . இரண்டிற்கும் இடையில் உள்ளவன் தான் தாழ்ந்துவிடக்கூடாது மேலே உயரிய நிலைக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறான் . இருப்பதை வைத்து எவன் ஒருவன் வைத்து நிறைவா வாழ்கிறானோ அவனே மகிழ்ச்சியுடன் வாழ்கிறான் என்றார் துறவி .   
                                                                                                     ---- ஆ.தெக்கூர் கரு.கண.இராம.நா.இராமு

                                                                                    

Thursday, 20 November 2014

மாலியும் அவனது சிந்தனையும்



              கருப்பையாவும் அவரது பேரன் மாலி என்ற மாகலிங்கமும்  தினமும் மாலையில் தனது பேரனை அழைத்துக்கொண்டு கருப்பர் கோயிலுக்கும் சென்று வழிபட்டுவிட்டு வரும்போது தன் பேரனை வழியில் உள்ள ஒரு ஆலமரத்தின் அடியில் உள்ள திண்ணையில் அவர் அமர்ந்து கொண்டு தன் பேரனை சிறிது நேரம் விளையாட விட்டு தன் பேரன் விளையாடும் அழகை ரசித்துக்கொண்டு இருப்பார் தினமும் அவர் தன் பேரனுக்கும் அறவுரைகள் நீதிக்கதைகள் , பக்திகதைகள் , தன் வெளிநாட்டு பயண அனுபவங்களை சொல்லி கொண்டு அழைத்துச் 
செல்வார் .






தினமும் மாலி பள்ளியில் இருந்து வந்ததும் அவன் அப்பாதா சாலியாச்சி உடை மாற்றிவிட்டு தன் கையால் தேநீர் கலக்கி கொடுப்பாள் .மாலியின் அத்தா வள்ளியம்மை மாலையில் தேன்குழல் , வெள்ளைப்பணியாரம் , கந்தரப்பம் என்று மகன் வரும் போது செய்துதருவாள் . மாலையில் இடைப்பலகாரமும் தேதீர் (தேத்தண்ணீ ) குடித்ததும் தன் பேரனை அழைத்துக்கொண்டு கோயிலுக்கும் கிளம்புவார்.


                  அன்று வழக்கம்போல் கருப்பையாவும் பேரன் மாலியும் வழக்கமாக கோயிலுக்கும் செல்லும் வழியில் மாலிவிளையாடும் ஆலமரத்தின் அருகில் உள்ள திண்ணையை அடைந்தனர். அந்த பருவத்தில் ஆலமரத்தில் ஆலம்பழம் பழுது கொத்து கொத்தாக காய்த்து தொங்கியது . மாலியும் வழக்கமாக விளையாடிக்கொண்டு இருந்தான் . அப்போது அங்கு சற்று தொலைவில் கண்மாய் கரை அருகில் ஒரு சுமைதாங்கி கல் இருந்தது அதன் பின்புறம் ஓரமாக ஒரு பெரிய பரங்கிகோடியில் பரங்கிக்காய்கள் பெரிது பெரிதாக காய்த்து மண்ணில் கிடந்தன. அதை கண்ட மாலி உடனே மரத்தடியில் அமர்ந்திருந்த ஐயாவை நோக்கி ஓடிவந்தான் .

ஐயா அவன் வருவதை கண்டு பதை பதைத்து போனார் . என்னடா மாலி பூச்சி போட்டு கடுட்சுடிச்சா என்ன டா என்று வினவினார் அதற்கு அவன் எனக்கு ஒரு சந்தேகம் ஐயா என்றான்

என்னடா என்றார் அவன் உடனே ஐயா இந்த உலகை படைத்தது யார் என்றான் ??
அதற்கும் ஐயா உலகை ஈசன் படைத்தான் என்றார் ஐயா .
மாலி உடனே அவர் படைத்ததில் தவறு உள்ளது அவர் தப்பு செய்துள்ளார் என்றான்

என்ன தப்பு என்று சொல் என்றார் ஐயா

                     மாலி உடனே இந்த ஆலமரம் ரொம்பவும் பெருசா உள்ளது ஆனா இதோட பழங்களோ ரொம்பவும் சின்னதா இருக்கும் இதுக்கும் மரத்துக்கும் சம்பந்தமேயில்லாமல் படைத்ததுவிட்டார் . அதோ பாருங்கள் அந்த பரங்கி கொடியை அந்த செடியோ தரையில் கிடைக்கிறது அந்த செடிக்கும் பரங்கிப் பழத்திற்கும் சற்றும் பொருந்தவில்லை என்றான் . இந்த பரங்கிப்பழம் ஆலமரத்தில் காயத்தால் பொருத்தமாக இருக்கும் . இந்த ஆலம்பழம் பரங்கிக்கொடியில் காயத்தால் அதற்கும் ஏதுவாக இருக்கும் இப்படி ஈசன் தவறு செய்துவிட்டான் என்றான் மாலி

                             மாலியின் கேள்வியை கேட்டு மனதில் நகைத்தபடியே தன் பேரனின் கேள்வி ஞானத்தை பார்த்து மிகிழ்ந்து தன் பேரனுக்கும் பதில் சொல்ல முற்பட்டார். தன் பேரன் மாலியை பார்த்து கருப்பையா ஒரு கேள்வியை தன் பேரன் மாலியிடம் கேட்டார் ஈசன் தன் படைப்பில் தவறு செய்தார் என்றே வைத்துக் கொள்வோம் . இந்த மரத்தில் பரங்கிப்பழங்கள் காய்த்து தொங்கட்டும் பரங்கிக்கொடியில் ஆலம்பழம் பழுத்துதொங்கட்டும் . இப்போது இந்த மரத்தில் ஆலம்பழம் மரத்தில் பழுத்து கீழ் விழுகின்றது . பழம் பழுத்தால் கீழே விழும் என்பதை ஒத்துக்கொள்கிறாயா மாலி என்றார் .

                                        ஆம் ஐயா பழம் பழுத்தால் அதன் எடை அதிகம் மற்றும் காம்பினால் பாரம் தாங்காமல் கீழே விழும் என்றான் . சரி நீ சொன்னது போல் இந்த மரத்தில் பரங்கிக்காய்கள் அளவில் பழம் பழுத்தால் என்னவாகும் என்றார் . மாலியுடனே கிழே விழும் என்றான் .இப்பொது நாம் இங்கு ஆலமரத்தின் கீழ் அமர்ந்துகொண்டுளோம் . இப்பொது நீ சொன்ன பரங்கிப்பழம் பழுது கீழ் விழுந்தால் அல்லது மந்திகள் பரித்து போட்டால் என்னவாகும் என்றார் . நம் மீது விழும் என்றான் மாலி . விழுந்தால் என்னவாகும் என்று ஐயா சற்றும் பொறுமையாக கேட்டார் . நமக்கு வலிக்கும் அடிபடும் என்றான் மாலி


                                இப்போது ஐயா பேரனை பார்த்து ஈசன் படைப்பில் தவறு உள்ளதா என்றார் . மாலி இல்லை என்றான் . ஐயா மாலியை பார்த்து நீ சொன்னது போல் இருந்தால் நமக்கும் அடிபடும் இங்கு யாரும் ஓய்வுபெற்று செல்லவும் முடியாது . இந்த மர நிழல் யாருக்கும் உதவாது போயிருக்கும் .நீ பரங்கிக்கொடியின் நிழலில் யாரும் ஓய்வு எடுக்கப்போவதில்லை அதன் காய்கள் மண்ணில் கிடக்கின்றன. இதனால் யாருக்கும் ஆபத்தும் இல்லையென்றார் . இந்த உலகில் உள்ள இயற்கையின் படைப்பின் பின்னும் ஒரு காரணம் இருக்கும் . நாம் இயற்கையை போற்றி பாதுகாக்க வேண்டும் . பாதுகாக்க முடியாவிட்டாலும் அழிக்கக்கூடாது என்றார் .

                     ஈசன் படைப்பில் எந்த குறையும் உள்ளதா இப்போது சொல்லு மாலி என்றார் ஐயா . இல்லை ஐயா என்றான் . மாலி ஐயாவிடம் இயற்கையை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்றான் மாலி .ஐயா மரம் நடவேண்டும் என்றார் .மாலி உடனே நான் மரம் நடவேண்டும் என்று கேட்டான் . ஐயா நட்ட பத்தாதுடா தினமும் பராமரிக்க வேண்டும் தண்ணீ உத்தனும் என்றார் . மாலி உடனே அதற்கும் என்ன ஐயா தினமும் நாம் தான் கருப்பர் கோயிலுக்கு போகும் போது தண்ணீர் உத்துவோம் என்றான் . நீங்களும் நானும் சேர்ந்து மரம் இப்போவே வைச்சுட்டு கருப்பர் கோயிலுக்கும் போயிட்டு வீட்டுக் போவோம் என்று அழுத்தமாக சொல்லி அங்கேயே சுற்றி தேடி ஒரு வேப்பமரக்கன்றையும் , மாமரக்கன்றையும் தேடிப்பார்த்து பிடுங்கி வந்தான் மாலி. இன்று ஐயாவை விடுவதாக இல்லை மாலி . சரி பேரன் பிடுங்கி வந்த மரக்கன்றுகளை கண்மாய்க்கும் அருகிலே அங்கு கிடந்த சரட்டையும் குச்சியில் உதவி கொண்டு ஓரமாக குழி தோண்டி கன்றுகளை ஊணி வைத்தனர் .மாலியும் ஐயாவும் அருகில் இருந்த அடிபைபில் அடித்து கை கால்களை சுத்தம் செய்து கொண்டு சரட்டையில் நீர் கொண்டு வந்து ஊற்றி விட்டு கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினர்


                      வீட்டுக்கு வந்ததும் தன் சாளியாச்சி அப்பத்தாவிடம் நடந்ததை கூறினான் மாலி அப்பாதா உடனே மகிழ்ச்சியுடன் சிரித்துகொண்டே எம்புட்டு மாலியா சமத்தா என்று சொல்லி கட்டி தழுவி முதம்மிட்டால் சாலியாச்சி. உடனே போசஹாளுக்கு போய் உத்திரத்தில் தொங்கவிட்டு இருந்த அதிரச தூக்குசட்டியையும் மாவுருண்டை வைத்திருந்த பரங்கிக்காய் சட்டியையும் எடுத்து ரெண்டும் அதிரசமும் ரெண்டு மாவுருண்டையும் எடுத்து ஒரு கிண்ணியில் வைத்து பேரனுக்கும் கொடுத்தாள் சாலியாச்சி . மாலிஉடனே நாளைக்கு அப்பாதா நீங்களும் வாங்க நானும் ஐயாவும் வச்ச செட்டியகட்டுறேன் என்றான் . அப்பத்தா சிருசுகிட்டே அதுக்கு என்ன அப்பச்சி நாளைக்கும் நானும் ஐயாவோட வரே மூணு பெரும் பொய்த்து வருவோம் என்று சொன்னார் சாலியாச்சி. மாலி நாளை போகைல ஒரு ரப்பர் போனியும் கொண்டுபோகணும் அப்பாதா செடிக்கு தண்ணி ஊத்த என்றான் மாலி .


                       இதுபோல் எல்லோரும் தங்கள் ஊர்களில் அல்லது வீட்டுக்கு அருகில் மரம் நட்டு பராமரிப்போம். நம வீட்டுப் பிஞ்சுகள் மனதில் மரம் நடுவது பற்றி விதை விதைப்போம். இப்படி ஒவ்வொரு வீட்டிலும் கருப்பையாவும் ஒரு மாலியும் இருந்தால் நன்றாக இருக்கும் . நாம் நடும் மரங்கள் எல்லாம் ஒரு அடையாள சின்னம் . நாம் இந்த மண்ணை விட்டு சென்றாலும் நம் மரங்கள் நமது புகழ் பாடும் அடையாள சின்னமாக திகழும்.


Wednesday, 19 November 2014

ஆவணம்


ஆவணப்படுத்துவோம் என்ற தலையில் சில நாட்கள் முன்பு எழுதிய ஒரு பதிவு இந்த பதிவு முலம் தற்போது உள்ள நகரத்தார் இல்லதையாவது அவற்றின் வரலாற்றை அறிந்து ஆவணம் செய்து பாத்துக்காபடும் என்று நம்புகிறேன் .



ஆவணப்படுத்துவோம்


அனைத்து நகரத்தார்கள் வணக்கம் .

நகரத்தார்கள் அதிகம் வசிக்கும் பகுதி செட்டிநாட்டு .நம் பகுதியை நம் வீடுகளை unsico பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது . இது நகரத்தார்களுக்கு பெருமை சேர்க்கும் செய்தி . இன்று பல வெளிநாட்டவர்களும் பார்த்து வியக்கும் வகையில் அமைப்புகள் கொண்ட வீடுகள் கொண்டுள்ளோம் . அது மட்டும் இல்லது நம் கொண்டுவிற்றது பல எண்ணற்ற தேசங்கள் சென்று செல்வங்களை ஈட்டினர். அதுமட்டும் இல்லது அவர்களை தங்களது நேர்மையையும் நாணயத்தையும் நிலைநாட்டினர் . உடன் சைவத்தையும் தங்கள் சென்ற தேசத்திற்கும் கொண்டு சென்றனர் .


நம் ஐயாக்கள் கட்டிவைத்த வீடுகள் தான் நம் வீடுகள் நம் செட்டிநாட்டில் உள்ளன. நம் வீடுகளையும் நம் ஐயாக்கள் அப்பத்தாகள் பார்த்து பார்த்து கட்டிய வீடுகள் . அவற்றை பற்றி இன்று நாம் பலர் கவனிக்காமல் விட்டுவிடுகிறோம் . நம் வீடுகளையும் நம்மையும் நம் வீட்டின் வரலாற்றையும் ஆவணப்படுத்தி வைக்க வேண்டும் . இன்று ஆவணப்படுத்துவதால் நம் நாம் வரலாற்றை வரும்கால நம் பிள்ளைகளுக்கும் பொய்சேரும் . இன்று நம் ஒரு வீட்டின் ஆவணம் நாளை ஒரு சமுகத்தின் வரலாற்றை எடுத்து பேசும் . நம் குடி தமிழ் சமுகத்தின் ஆலமரமாக திகழ்ந்தது . ஒவ்வொரு நகரத்தாரும் சற்று நேரம் ஒதுக்கி இவற்றை நாம் செய்தால் நாளை வரும் நம் தலைமுறை தன் வீட்டின் வரலாறு தெளிவாக அறிந்துகொள்ள உதவும் . ஆவணப்படுத்து போது இவற்றையும் நாம் தெளிவாக முடிந்த வரை வீட்டுப் பெரியவர்கள் மூலமாக தெரிந்து வெறும்வாய்மொழிச் செய்தியாக மட்டும் அறிந்து கொள்ளாமல் அவற்றை நாம் எழுத்துப் பூர்வம்மாக ஆவணம் செய்யுங்கள் .

கண்ணப்ப செட்டியார் வளவு ஆ.தெக்கூர்

ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு பெருமையுண்டு . ஒவ்வொரு வீட்டிற்கு பின்பும் ஒரு வரலாறு கண்டிப்பாக இருக்கும் .

வீட்டை யார் கட்டினார் . எப்படி கட்டினார் ???
நம் ஐயாக்கள் பெயர்கள் ??? அவர்களின் குடிகளே நாம் பங்காளிகளாக கொள்கிறோம் ஆற்றையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்
நம் பாட்டி ஆயாள் பிறந்த ஊர் எது ?? கோயில் எது ???
எங்கு கொண்டு விற்க சென்றாகள் ???
என்னென்ன கொண்டு விற்றார்கள் ???
இந்த கோயிலை புனரமைத்தார்கள் ???
ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு விலாசம் உண்டு
அது என்ன ???
ஏன் அந்த விலாசம் ஏற்பட்டது ???
வீட்டிற்கு ஒரு புனை பெயர் உண்டு (பட்டை பெயர் ) அது என்ன ??? எப்படி வந்தது ஏன் ???
நகர சிவன்கோயிலில் ஏதேனும் நிகழ்விற்கு பொறுப்பு ஏற்று கொண்டார்களா ??
ஊரின் போது விழாக்களில் எவற்றுகாவது பொறுப்பேற்று செய்தார்களா ( வடித்து போடுதல் / தண்ணீர்பந்தல் ) ???
நம் வீட்டில் படைப்பு யாருக்காக படைக்கபடுகிறது ??
ஏன் படைக்கப்படுகிறது ???
என்ன பொருட்கள் வைத்து படைகபடுகிறது ???




இவற்றை எல்லாம் உடனே ஆவணம் செய்வது சற்று கடினம்தான் ஆனால் முயற்சி திருவினையாக்கும் என்பதற்கும் இணங்க நாம் முடிந்தவரை ஆவணம் படுத்தோம் .
சிறுதுளி பெருவெள்ளமாக மாறும் அதுபோல நாமும் நம் வீட்டை பற்றி பொறுமையாக சேகரித்து வைப்பது அவசியம்.நம் வீட்டில் ஐயாக்கள் எழுதிய கணக்கு புத்தகங்கள் , வரவு செலவு சிட்டைகள் , கல்யாணம் செலவு செய்த சிட்டைகள் , கொண்டு விற்ற பொருட்களின் வரவு செலவுகள் , லேவாதேவி தோழி செய்தபோது எழுதிய கணக்குகள் எல்லாம் கேட்பாரற்று மூலையில் சில வீடுகலில் கிடக்கின்றன் இன்னும் சில வீடுகளில் கரையான்கள் அரித்துக்கொண்டிருக்கின்றன .சில வீடுகளில் இவற்றை பத்திரமாக பாதுகாத்தும் வைத்துள்ளனர் . இவைகள்தான் நம் வரலாற்றை பற்றி பேசும் ஆதாரங்கள் . இவற்றை பாதுகாக்க வேண்டும் .நம் ஐயாக்கள் வாழ்ந்தன் வாழ்விற்கும் அர்த்தமுள்ளதாக இருந்ததற்கும் கட்டிய வீடுகளும் செய்த கோயில் திருப்பணிகளும் , ஊருக்கும் பயணாக வெட்டிவைத்த ஊரணிகளும் அவர்களின் புகழை பேசும். அனால் நாமோ அவர்கள் புகழை வீட்டின் புகழையும் மட்டும் பேசிவிட்டுச் செல்லாமல் நாமும் நம்மால் இயன்றதை செய்து நம் புகழையும் நாளை பேசும் வண்ணம் செய்துவிட்டு செல்வோம் .





இன்று நாம் பொருளாதார அடிப்படையில் நாம் விழுந்துவிட்டது உண்மை . ஆனால் நம்மால் முடிந்ததை செய்து நம் செட்டிநாட்டு கிராமத்தையும் நம் வீடுகளையும் பாதுகாப்போம் . நகரத்தார்கள் பற்றிய வரலாற்றையும் திருப்பணியையும் பலர் எழுதிவிட்டனர் பின் ஏன் நாம் ஆவணம் செய்ய வேண்டும் என்று கேள்வி எழும் எழுப்புவர் அதற்கும் பதில் இதோ நகரத்தார்கள் என்று பொதுவில் நகரத்தார்கள் பலர் எழுதியுள்ளனர் . இது நம்மை நம் வீட்டை பற்றிய வரலாறு . நம் ஐயாக்கள் அப்பத்தா , பாட்டிஆயாக்கள் வாழ்ந்தது . ஒவ்வொரு வட்டகையிலும் ஒவ்வொரு வழக்கம் உண்டு அவற்றை பல தொகுத்து வெளியிட்டிருப்பர்.ஒவ்வொரு ஊரிலும் சில சடங்குககளில் மாற்றங்கள் கண்டிப்பாக இருக்கும் . அதுபோல் வீட்டின் வழக்கங்களும் இருக்கும் .உதாரணமாக 6௦ 7௦ , 80 என்று கலியாணம் நகரத்தார்கள் வெகுசிறப்பாக செய்துகொள்வர் என்று அனைவருக்கும் தெரியும் . சில வீடுகளில் இந்த முறை செய்யமாட்டார்கள் .காரணம் அவர்களுக்கு ராசி இல்லாமல் இருக்கலாம் அல்லது வேறு சில காரணங்கள் இருக்கும் . மற்றொரு உதாரணம் நகரத்தார்கள் திருமணத்தில் முதல் நாள் மதியம் அல்லது இரவு கசாப்பு சமைத்து விருந்து வைப்பது வழக்கம் . சில வீடுகளில் இது போன்ற வழக்கம் இருக்காது காரணம் . அங்கு வேல் பூசை ,முருகவழிபாடு போன்றவைகள் நிகழும் அதனால் இங்கு சைவம் மட்டும் தான் உண்ணுவர் இதுபோன்ற பல செய்திகள் நம் வீடுகளையும் நம் குடும்பம் பற்றி ஆவணம் செய்யும்போது தெரியவரும் .


யாம் இட்ட இந்த பதிவின் நோக்கம் தங்கள் விருப்பங்கலையும் பாராட்டையும் பெரும் நோக்கில் பதிவிடவில்லை . இந்த பதிவை கண்டு யாரேனும் தங்கள் வீட்டையும் தங்களது வரலாற்றை ஆவணமாக பதிவு செய்தலே யான் இட்ட பதிவின் நோக்கத்திற்கும் கிடைத்த உண்மையான வெற்றியாகும் . அல்லது இவற்றை பற்றி நகரத்தார்கள் கூடும் இடத்தில இவற்றை பற்றி எடுத்து கூறி பிற நகரத்தார்களிடம் இந்த செய்தி சேருவது இந்த பதிவிற்கும் கிடைத்த அளவில்லா வெற்றியாகும் . இந்த பதிவி யாரையும் புன்படும் படி யான் இப்பதிவை இயற்றவில்லை .அப்படி இருப்பின் மன்னிக்கவும் . எல்லாம் சுப்பையன் அருளால் எல்லாம் இனிதே நிகழட்டும் .

http://nnagarathars.blogspot.in/

*** நன்றி***

வேணும்
தொட்டியதுத் கருப்பர் துணை


- ஆ.தெக்கூர் கரு.கண.இராம.நா.இராமு

Monday, 17 November 2014

வீடு



செட்டிநாட்டு வீடுகள் :

செட்டிநாட்டு வீடு


மண்டிப்போன காடுகளையும் மரங்களையும் வெட்டி
நிலத்தையும் பக்குவமா சமபடுத்திக்
கடல் கடந்து நாடுவிட்டு நாடுசென்று
சிக்கனமாய் பொருள் சேர்த்து
பக்குவமாய் வீடுகட்டிக் கொண்டடிருக்கு செட்டியாரும்
மோப்பினிலே பலபலக்கும் பளிங்குத்தூணும்
இத்தாலிய டைல்சும் பெல்ஜியம் கண்ணாடியும் கொண்டு
பார்த்து பார்த்து பதிச்சுவச்சு
கலைநயமிக்க வாசலுக்கோ பர்மாதேக்கு கொண்டு
ஆளுயர சன்னளுடன் கதவுமிட்டு
உட்புறத்து திண்ணையிலே பிரும்மாண்ட தூண்களுடன்
வழுவழுப்பான பளிங்கு தரைகளுடன்
வளவசுத்தி ஓரத்தில் பட்டியக்கல்லும் பதிச்சி
மத்தியிலே ஆணடிக்கல்லும் ஒட்டி
நல்லதொரு விசாலமாய் முதற்கட்டும் கட்டியதை
தாங்கிநிற்கும் கல்லுத் தூண்களுமே
கட்டினிலே சுத்தியுள்ள அறைகளிலே ஒன்றைப்
படைக்கவே ஒதிக்கி கொண்டனரே
மேற்படியா ஆச்சிகளுக்கே பட்டாசாளையும் ஜன்னல்களில்
பிரித்தானிய கம்பிகொண்டு மேருகேற்றினரே
அதன்மேற்புறத்தில் வண்ணஓவியமும் தீட்டிசுற்றி சீனப்போம்மைகளுடன்
விளக்கு வைக்க மாடமும் அமைச்சாக
ஊருக்கே விருந்து வைக்க அகலமான
போசன் ஹாலும் எழுபிவச்சு
மேங்கோப்பு கூரையுமே தட்டோடும் சீமையோடும்
கொண்டு சென்சு பதிச்சுவச்சாக
ஆச்சிகளும் புழங்கிடவே சுருக்கமாய் இரண்டாங்
கட்டும் கட்டிவச்சு மகிழ்ந்தாக
உக்குரான அறையயுமே ரெண்டாங்கட்டுக்குள் ளேயமைத்து
பக்குவமாய் தானியமும் சேர்த்துவைத்தார்
வந்தவரும் பசியாற வக்கனையாய் சமைபதர்க்கு
கூடமுமே மூன்றங் கட்டினிலே
அதிலமைத்து சுள்ளிகளும் விரகுகளும் பதமாகக்
அடைவதற்கே சாளையையும் சேர்தமைதார்
பின்கட்டில் மாடுகட்ட தொழுவமும் கூட்டுவண்டி
நிற்பதற்கே ஒட்டுக்கூடமும் அமைத்து
புழங்குவதற்கே வற்றாத கிணறும் வெட்டிவைத்துச்
சலவைக்கல்லும் ஊன்றி வைத்தார்
பறந்து கிடக்கும் தோட்டமுடன் வண்டிமாடு
வந்துசெல்ல வழியும் அமைத்தனரே
காரைச்சுவர்கள் டாலடிக்க வெள்ளைக் கருவுடன்
சுண்ணாம்பும் சேர்த்து பூசிவித்தோம்
வாயிலுக்கு மேற்புறத்தில் புடைசூழத் சுதயாக
திருவா னவலும் நின்றாலே
அலங்கம் அலங்கமாய் கோட்டைபோல் வீடு
கட்டையிலே திருமகளும் வந்தால்
குளம்போல தேங்காமல் கடல்போலப் பெருகி
வாழ்வில் வளம் சேர்த்து நின்றாள்
கோட்டைபோல் வீடமைத்து வாழ்ந்தாலே நாட்டுக்
கோட்டையார் எனப்பெயரும் பெற்றோம்




வாயிலுக்கும் மேல் உள்ள திரு 

பாரம்பரிய உடையணிந்து வளவுக்கும் மத்தியில் வண்ணப் புள்ளி மயில் போல நடனம் புரியும் பெண்பாவைகள்

ஆறுமாதம் முன்பு என் சிந்தனையில் உதித்த இந்த கவிதையை இங்கு இன்று பகிர்ந்ததில் மையற்ற மகிழ்ச்சி .

                                                                 -- ஆ.தெக்கூர் கரு.கண.இராம.நா.இராமு

Friday, 14 November 2014

என்னுல்லம் கவர்ந்த மலர்கள் 1

                 

                சிலநாட்களும் முன் மருவத்தூர் , விக்கிரவாண்டி  ஆகிய பகுதிகளில் பயணத்தின் போது வழியில் இந்த மலர்களை காண முடிந்தது.  இந்த மலர் பொதுவாக மலைபகுதிகளில் காட்டுப்பகுதியில் வளரும் ஆனால்  இந்த மலரை சமவெளியில் புல் மண்டிய பகுதியில் இந்த செடியை கண்டதும் அதிசயித்தே.
 அதுஒரு கொடிவகை தாவரம் . அதுதான் செங்காந்தள் . செங்காந்தள் என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கும் வருவது ஈழத்தின் தேசியமலர் என்று . இந்த செங்காந்தள் மலர் நம் தமிழகத்தின் மாநில மலரும் கூட . இந்த தாவரம் மலையும் மலைசார்ந்த பகுதிகளில் அதிகம் காணப்படும் . இந்த தாவரவகை செம்மண் பாங்கான நிலங்களிலும் வளரும் தன்மைகொண்டது. இந்த மலர் இலங்கை, இந்தியா, சீனா, மலாக்கா தீபகற்பம், சிங்கபூர் ,அயனமண்டல ஆபிரிக்கா முதலான பகுதிகளிலும்காணப்படும்.மற்றும் இந்த மலர் ஜிம்பாபே நாட்டின் தேசியமலர்.



செங்காந்தள் மலரின் வேறு பெயர்கள் :        
            
           செங்காந்தள் மலருக்கும் வழங்கப்படும் சில பெயர்கள் தமிழகத்தில் இந்த  மலரை கார்த்திகை மலர் என்று  சங்ககாலத்தில் வழங்கப்பட்டதன் காரணம்  இந்த மலர் கார்த்திகை திங்களில் அதிகம் மலரும் அதனால் இவற்றுக்கும்  இப்பெயர் வந்தது .கார்த்திகைச் செடியானது வேலிகளிலும்,  பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் சுடர்கள் போலவும் காணப்படும். இதன் பூ தீச்சுவாலை போலக் காணப்படுவதால் அக்கினிசலம் என அழைக்கப்படுகிறது.பூவின் நிறம் இருவேறாக மாறுபடுவதால் இதனை வெண்காந்தள் அல்லது செங்காந்தள் என்ற இரு வேறு வகைகளாக வருணிப்பார்கள். இந்த மலரை போற்றி கவிதை பாடாத புலவர்களே இல்லை. காந்தள் மலர்களை புலவர்கள் பெண்களின் விரல்களுக்கு உவமையாக கூறுவர். இத்தாவரம் வளைந்து பற்றுவதால் கோடல், கோடை என்றும் அழைக்கப்படும். நாட்டு மருத்துவத்திலே இதனை வெண்தோண்டி எனவும் அழைப்பர்.பூவின் நிறம் இருவேறாக மாறுபடுவதால் இதனை வெண்காந்தள், செங்காந்தள் என்ற இரு வேறு வகைகளாக வருணிப்பார்கள். கிழங்கு பிரிந்து கணுக்கள் உள்ளதை ஆண்காந்தள் என்றும் கணுக்களில்லாததைப் பெண்காந்தள் என்றும் குறிப்பிடுவர்.



தாவரத்தின் தோற்றம் (அமைப்பு ):
               
     இந்த தாவரத்தின்  அமைப்பானது  இது ஒரு கொடிவகை தாவரம் பசுமையானது வலுவில்லாதது இந்த தாவரம் மற்ற செடிகளின் மீதும் மற்றும் வேலிகளின் மீது புதர்கள் மீது படர்ந்து வளரும் தன்மை கொண்டது .இந்ததாவரம் 1௦ முதல் 2௦ அடி உயரம் வளரும் தாவரம் .இந்த தாவரம் கிளைவிட்டு வளரும் வகை இது ஒரு கிழங்கு வைக்கும் தாவரம் , இதன் கிழங்கு கலப்பை போன்ற அமைப்பில் இருக்கும் .இத்தாவரத்தின்  இலைகளுக்கு காம்புகள் இல்லை
பூவின் அமைப்பு சற்று வேறுபட்டு இருக்கும் . இதன் பூ இலைக்கக்கத்தில் தனியாக இருக்கும். அல்லது கிளைகளின் நுனியில் இலைகள் நெருங்கியிருப்பதால் சமதள மஞ்சரி போலத் தோன்றும். அகல் விளக்குப் போன்ற, ஆறு இதழ் கொண்ட இப்பெரிய பூக்கள் செப்டம்பர் தொடக்கம் முதல் ஜனவரிவரியிலும் , மற்றும் மார்ச் மாதத்திலும் மலர்கின்றன. இதன் இதழ்கள் குறுகி நீண்டு ஓரங்கள் அலைபோல நெளிந்திருக்கும். தளை அவிழ்ந்த மலர் ஏழு நாட்கள் வாடாமல் இருக்கும். இதழ்களில் நிறம் முதலில் பச்சை, பிறகு வெண்மை கலந்த மஞ்சள். பிறகு மஞ்சள், பிறகு செம்மஞ்சள், பிறகு துலக்கமான சிவப்பு (Scarlet) நீலம் கலந்த சிவப்பாக மாறிக்கொண்டு போகும்.
இதழ்கள் விரிந்து அகன்றோ, பின்னுக்கு மடங்கிக் கொண்டோ இருக்கும்.





மருத்துவகுணம் :

இந்த தாவரம் இந்திய சித்தமருத்துவத்திலும் யுனானி மருத்துவத்திலும்  முக்கியமாக பயன்படுத்தபடுகிறது . இந்த தாவரத்தின் கிழங்கு சற்று விஷத்தன்மை கொண்டதாகும் இதை நேரடியாக உட்கொள்ள கூடாது  .  இத்தாவரத்தில் சுபர்பின் மற்றும் கோல்சிசின் ஆகிய மருந்துப் பொருட்கள் இதில்கிடைக்கின்றன .இந்த கிழங்கில் உள்ள நஞ்சு ஆங்கிலமருத்துவத்திலும் பயன்படுத்தபடுகிறது.
          வாதம், மூட்டுவலி, தொழுநோய் குணமாக்கப் பயன்படுவதுடன் பேதி, பால்வினை நோய் வெண்குட்டம் ஆகியவற்றிக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. பிரசவ வலியைத் தூண்டும் மருந்தாகவும், ஆற்றலூட்டும் குடிப்பானாகவும் இருப்பதுடன், தலையில் வரும் பேன்களை ஒழிக்கவும் பயன்படுகிறது. குடற்புழுக்கள், வயிற்று உபாதைகள் மற்றும் தேள், பாம்புக்கடிகளுக்கு நல்லதொரு மருந்து. இக்கொடியினைக் காட்டிலும் விதைகளில் தான் அதிக அளவு கோல்சிசின் மருந்து காணப்படுவதால் விதைகள் மிகுதியான உள்ளன. அதனால் இந்த தாவரத்தை பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கின்றனர் .முன்பு இந்த தாவரத்தை நம் சித்தவைத்தியத்தில் பயன்பாடு அதிகம் இருந்தது .இதன் இலை மற்றும் தண்டு நம்மேல் பட்டால் தோலில் அரிப்பு உண்டாகும்

தற்போது இந்த தாவரம் அழிந்து வரும் இனங்களில் சேர்கப்பட்டுள்ளது . இந்த தாவரத்தை பாதுகாக்க வேண்டியது நம் கடமையே . முடிந்தவரை இந்த தாவரத்தை நாமும் நம் வீட்டில் வளர்ப்போம் .இன்று இந்த தாரவரத்தை மலைபகுதிகள் வனப்பகுதியில் காணலாம் . 


எங்கள் தமிழ் தாயின்  கை விரல்கள் இந்த செங்காந்தள் மலர்களின் இதழ்கள் போன்று அழகுடன் அவள் கையில் இட்டு மருதாணி சிவந்து காணப்படுவது இந்த மலரை ஒத்து இப்படி ஒரு கோவை பழம்போல் இப்படிதான் சிவந்து இருந்திருக்கும் போலும்
மலைபகுதில் காடுகளில் பூத்துக் குலுங்கிய மலரில் இந்த பூக்கள் தற்போது நகரங்களில் சாலையோரங்களில் பூத்து குலுங்குகின்றன . இதை காணும போது  மனதில் தமிழனுக்கும் இத்தனை ஆண்டுகள் இழைக்கப்பட்ட அநீதியானது தற்போது மங்கி மறைந்து மீண்டும் நம் தமிழீழம் புத்துயிர் பெறும் மற்றும் வந்தேறிய அன்னியர் கையில் சிக்கிக் தவிக்கும் தமிழர் வாழ்வும் மீண்டும் புத்துயிர் பெரும் என்ற நம்பிக்கை மேலோங்கியது
வாழ்க தமிழர்  !!!                                                             வாழ்க தமிழினம் !!!
                    தமிழன்னையின் புகழ் பாரெங்கும் ஓங்கி பரவட்டும் 

                                                      - ஆ.தெக்கூர் காண.இராம.நா.இராமநாதன்


Saturday, 1 November 2014

மருதமும் அந்த நிலத்தின் தெய்வமும் ( இந்திர விழா ):







சில நாட்களுக்கும்  முன்பு ஒரு பதிவை முகநூல் வலைத்தளத்தில்  காண நேர்ந்தது . சோழர்கள் காலத்தில் பொங்கல் திருநாள் என்பதை கொண்டாமல் அவர்கள் இந்திர விழாவை தான் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது . சோழர்கள் உழவர் திருநாள் என்று வெகு விமர்சையாக கொண்டாடி விவசாயிகளை பெருமை படுத்தாமல் விட்டுவிட்டனர் . ஆனால் நாயக்க மன்னர்கள் தான் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி ஊக்குவிக்கும் வகையில் அமைத்தனர் என்றும் சோழர்களை இகழ்த்திடும் வகையில் இருத்தது அதனால் இந்த பதிவு தோன்றிட வழிவகை செய்தது .
சோழர்கள் ஆண்ட சோழதேசம் மருத நிலம் . தமிழன் தங்கள் வாழ்ந்த பகுதியை ஐந்தாகப் பிரித்து வாழ்ந்தான் அதுமட்டுமா அந்த ஐந்து நிலத்திற்கும் கடவுள்கள் , தொழில் , இசை என்று எல்லாம் பிரித்து வாழ்ந்தனர் . அதன்படி சோழதேசம் மருத நிலமும் நெய்தல் நிலமும் சார்ந்த பகுதியாக விளங்கியது . அதனால் சோழர்கள் தங்கள் நிலத்தின் தெய்வமான இந்திரனையும் , நீரின் தெய்வமான வருணனையும் போற்றி வழிபாடு செய்வதே தமிழர் விழா . இதை சோழன் மட்டும் செய்யவில்லை இது மதுரையிலும் பாண்டியர்கள் நிகழ்த்தினர் . இந்த விழா சோழதேசத்தில் வெகு சிறப்பாக சித்திரை மாதத்தில் 28 நாட்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள் . தமிழர்க்கு சித்திரை மாதமே முதல் மாதம் வருடப்பிறப்பும் ஆகும் . இன்றும் இந்த சித்திரையை தமிழ் வருடப்பிறப்பு இல்லை என்று புரியாத மூடர்கள் பொய்யுரை செய்து மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டனர் . இந்த இந்திரவிழா தமிழர்கள் மழைக்கடவுளான இந்திரனையும் வருணனையும் வழிபட்டு தங்களுக்கு பிறந்திருக்கும் இந்த வருடத்தில் சிறப்பாகவும் போதிய மழை தங்கள் விவசாயத்திற்கும் வேண்டி வழிபாடு செய்வது வழக்கமாக கொண்டு வாழ்ந்துவந்தனர் . இந்திர விழாவில் இந்திரனையும் வருணனை மட்டும் வழிபாடு செய்யாது . கொற்றவை தங்கள் ஊர் காவல் தெய்வங்கள் போன்ற எல்லாத் தெய்வங்களையும் அரசு சார்பாகவும் தங்கள் அவரவர் விருப்பு வெறுப்பு இன்றி அனைவரும் ஒன்றாக இணைந்து பொங்கல் வைத்து சிறப்பாக பலி கொடுத்ததும் வழிபட்டனர் . இறுதியாக இந்திராணியும் வருணனையும் போற்றி வழிபாடுகள் செய்தும் இந்திரனை போற்றி ஆடியும் பாடியும் பட்டிமன்றங்கள் போன்றவைகள் சிறப்பாக நிகழ்த்தி வழிபாடுகள் செய்தனர் . இந்த விழாக்களை சான்று கூறும் வகையில் சிலம்பு மணிமேகலை, தொல்காப்பியம் போன்ற நூல்கள் கூறுகின்றனர் .
முன்பும் தை மாதத்தில் அறுவடைத் திருநாள் விழாவும் நிகழ்ந்தது, இந்த விழாவையும் கொண்டாடினர் . தமிழர் தங்கள் நிலத்தின் தெய்வத்தை போற்றியே வழிபட்டனர் . சூரியன் பொதுத் தெய்வம் . அவனையும் போற்றித்தான் வழிபட்டனர் .
ஆரியர்களும் விஜயநகர அரசர்களும் வந்தேறிய பின் ஐந்து நிலத்தின் அமைப்பும் பல குழப்பங்களும் உட்பட்டு பல மாற்றங்கள் ஏற்பட்டது . ஆசுவிகக் கொள்கையில் வாழ்ந்தவர்கள் நம் தமிழர்கள் . இதில் இருந்து தான் திரிந்தது சமணம். சோழதேசத்தில் சமணம் , ஆசுவிகம் , சைவம் போன்ற மதங்கள் இருந்தன . ஆரியர் வந்த பின் பல மாற்றங்கள் நிகழ்ந்தது . நாம் இன்று செய்யும் எல்லை தெய்வ வழிபாட்டில் உள்ள ஐயனார், கருப்பர் போன்ற தெய்வங்கள் இந்திரன் பெயர் திரிவே ஐந்திரன் ஆனது பின் அது ஐயனார் ஆனது . நாம் செய்யும் கருப்பர் வழிபாடுஇவ்வாறு கூறுகின்றனர்
சிலப்பதிகாரத்தில் வரும் “தேவர் கோமான் ஏவலிற் போந்த காவற் பூதத்துக் கடைகெழு பீடிகை” எனக் குறிக்கப்பட்டிருப்பது யாரை? அநேகமாக கருப்பண்ணசாமியைக் குறிக்கலாம் என்றே தெரிகின்றது. அந்த பூதம் இந்திரனின் ஏவலால் பூமிக்கு வந்ததாகவும், நிணத்துடன் பொங்கல் முதலிய படையல்களை ஏற்றுக் கொள்வதாகவும் சிலம்பு கூறுகின்றது. மேலும் மறக்குலத்தினர் அந்த பூதத்திற்கு அவரை, துவரை போன்ற பயிர்வகைகளையும் படைத்து, மலர் தூவி, புகை எழுப்பி வாழ்த்தினர் எனக் குறிப்பிடுகின்றது. சாம்பிராணிப் புகையும், பலியும் கருப்பண்ணசாமிக்கே சிறப்பாக உரித்தானதாகும் (அவரைப் போன்ற சில சிறுதெய்வங்களுக்கும் உண்டு). மேலும் வீரர்கள், வில், வேல், வாள், ஈட்டி போன்றவற்றை அந்த பூதம் முன் வைத்து வெற்றி வேண்டி வழிபட்டதாகவும் சிலப்பதிகாரம் கூறுகின்றது. இப்பொழுதும் கருப்பண்ணசாமி வில், வேல், வாள், ஈட்டி பலவேறு ஆயுதங்களைத் தாங்கியவராகத் தான் காட்சி அளிக்கின்றார். அதே போன்று சாம்பிராணி தூபம் போட்டே வழிபாடுகள் நடக்கின்றது.
மேற்கொண்ட தகவல்களை எல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது அந்தப் பூதம் தான் பிற்காலத்தில் கருப்பண்ணசாமியாக மாறி இருக்க வேண்டும் என்றும் அந்த பூதத்தை ஏவலாகக் கொண்ட, யானை வாகனம் உடைய இந்திரன் தான் பிற்காலத்தில் ஐய்யனார் ஆனார் . இந்த வழிபாடு தற்போதும் இந்த வழிபாடு தற்போதும் திருச்சி ,புதுகோட்டை , சிவகங்கை , விருதுநகர் , மதுரை போன்ற பகுதிகளில் எல்லைத் தெய்வங்களுக்கும் மதுக்குடம் எடுப்பு , புரவிஎடுப்பு ( குதிரை , காளை) போன்ற மண் பொம்மைகளை கொண்டு சென்று காணிக்கையாக செலுத்தப்படும் இந்த விழா வைகாசி மற்றும் ஆணி மாதத்தில் இன்றும் நம் தென்மாவட்டங்களில் நிகழ்கிறது .
மேலும் ஒரு தவறான கருத்து நம் தமிழர்களிடம் நிலவுகிறது .ஐயனார் வழிபாடு என்பது சாஸ்தா வழிபாட்டில் இருந்து மருவியதே என்று கூறுகின்றனர் . இது முற்றிலும் ஏற்கத்தக்க வகையில் உள்ளது அல்ல . இது நம் தமிழர் வழிபாடே . எப்படி எணில் மலையாளம் தமிழில் இருந்து திரிந்ததே . ஆரியர்கள் அதிகம் அரேபியக் பெருங்கடல் பகுதில் ஆதிகம் குடியேறிய பின் தமிழும் சம்ஸ்க்ருதமும் கலப்பே மலையாளம் . நாம் செய்த இந்திர வழிபாடுதான் இன்று ஐய்யனார் வழிபாடு அதை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் . சாஸ்தா வழிபாடும் ஐய்யனார் வழிபாடும் ஒன்றுதான் . அதற்காக மலையாள தேசத்தில் இருந்துதான் ஐய்யனார் மற்றும் கருப்பர் வழிபாடு அங்குகிருந்து தான் வந்தது என்பது ஏற்புடையது அல்ல . நாம் நம் வரலாற்றை தெளிவாக ஆராய்ந்து தெரிந்து கொள்ளவேண்டும் .



இன்று இந்திர விழா இல்லாமல் வழக்கொழிந்து விட்டது . இன்று இந்த விழா சில சிவாலயங்களில் நிகழ்கிறது . புதன் ஸ்தலம் என்று அழைக்கப்படும் திருவெண்காடு மற்றும் சாயவனம் போன்ற சில தலங்களில் நிகழ்கிறது .

இந்திரவிழாவின் திரிவாக தென்மாவட்டங்களில் இன்று  ( நம் செட்டிநாட்டில் ) வைகாசி ஆணி மாதத்தில் எல்லை தெய்வாமாக உள்ள ஐய்யனார் மற்றும் கருப்பர் போன்ற தெய்வங்களுக்கும் பொங்கல் வைத்தும் புரவிகளை கொண்டு சென்று விட்டுவிட்டும் ஐயனார் ( இந்திரனுக்கும் ) சைவப் படையல் இட்டும் கருப்பருக்கும் புள்ளி ( பலி காணிக்கை ) கொடுத்ததும் வழிபாடுகள் இன்றும் இவை நிகழ்கிறது. இந்த விழாவின் நோக்கம் நல்ல மழை வேண்டும் என்றும் பிறந்துள்ள புத்தாண்டில் எல்லாம் நன்றாகா அமையவேண்டும் . விவசாயம் நல்ல முறையில் அமோகமாக நிகழ வேண்டும் என்பதேயாகும் .



வாழ்க தமிழர் !!!! வாழ்க தமிழர் !!!!

                                                           - ஆ.தெக்கூர் . கண. இராம. நா.இராமநாதன்

Thursday, 30 October 2014

என் முதல் கட்டுரை

முகநூல்( www.facebook.com/nnagarathar ) நகரத்தார் பக்கத்திற்காகவும் அந்த பக்கத்தின் வலைபக்கதிர்காகவும்   சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான் எழுதிய முதல் கட்டுரை . இந்த கட்டுரை எமக்கும்  நிறைய செய்திகளையும் நகரத்தார்களின்  செல்வசெழிப்பையும் எமக்கும் தெரியப்படுத்தியது . இத்தனை நகைகள் இவற்றின் தனித்துவமான பெயர்கள் இவைகளில் அழகான தமிழ் பெயர்கள் போன்றவைகள் இவற்றை இன்றும் நகரத்தார்கள் இவ்வாரே தமிழ் பெயர்கள் கொண்டே அழைகின்றனர்.





செட்டிநாட்டு நகைகள் ஒருதொகுப்பு :

நமது செட்டிநாட்டு பகுதிகளில் நாம் பயன்படுத்து சில நகைகளின் பெயர்களும் அதை பற்றியும் இங்கு நாம் பார்போம் . வைர நகைகளும் தங்க நகைகளும் நமவர்களில் இருபாலரும் அணியகுடியவையே .
முதலில் நம் ஆண்கள் அணியும் நகைகளை பற்றி பார்போம்
அரும்புதடை - மோதிரம்
சங்கிலி
குருமாத்து - கைசங்கிலி
கால்மோதிரம் - ஆண்கள் அணியும் மிஞ்சி ( மெட்டி )
தண்டை - காலில் அணியப்படும் வெள்ளியால் செய்த ஒருவித வளையம்
கௌரி சங்கம் - கௌரி சங்கம் என்பது ஒரு உருத்திராட்ச மாலையாகும். இந்த கௌரிசங்கத்தில் உருத்திராட்சங்களை ஒன்றுடன் ஒன்றாக இணைக்கும் இணைப்புகள், தொங்கட்டான் (பெண்டன்ட்) போன்றவை தங்கத்தில் அமைக்கப்படுகிறது. இந்தத் தொங்கட்டானில் ரிசபாருடர் எனும் ரிசப வாகனத்தில் சிவசக்தி சமேதராக அமர்ந்திருக்கும் வடிவம் பொறிக்கப்பட்டிருக்கும்
நட்சத்திர தோடு - இது சிறு பிள்ளை களுக்கு அணிவிகபடும் நகை ஆகும் . எதில் சில்லர் வைரக் கற்கள் அல்லது வெள்ளை பூகற்கள் பதித்து வைத்திருப்பர் . இது ஆண் / பெண் இரு குழந்தைகளுக்கும் அணியபெரும் நகையாகும்

நமது ஆச்சிகள் பயன்படுத்து / பயன்படுத்திய சில நகைகளின் பெயர்களை அதை பற்றியும் இங்கு பார்போம்.
கழுத்திரு - இது செட்டிநாட்டு அணிகலன்களுள் ஒன்றாகும். நகரத்தார் தாலி என்றும் அழைக்கப்படுகிறது. திருமணம் அல்லது சாந்திக் கல்யாண (சஷ்டியப்த பூர்த்தி) நாளன்று மணமகனால் மணமகளுக்கு அணிவிக்கப்படும் ஒரு வகையான கழுத்து அணிகலன் ஆகும்.
கண்டசரம் - வைரகற்கள் பதிக்கப்பட்ட கழுத்தை ஒட்டி அணிவிக்கப்படும் ஒரு வகையான கழுத்து அணிகலன் .
மங்களச்சரம் - தாலி மற்றும் தாலி சங்கிலி முழுவதும் வைரகற்கள் பதிக்கப்பட்ட ஒரு வகை அணிகலன் .
பூச்சரம் - இது பூ வேலைப்பாடுகலுடன் கூடிய தங்கச்சங்கிலி முழுவதும் வைரகற்கள் பதிக்கப்பட்ட ஒரு வகை அணிகலன் .
முத்து மாலை - இது தங்கச்சங்கிலியில் முழுவதும் உயர்ரக முத்துகலால் கோர்க்கபட்ட மாலை . இது ஒரு வகை கழுத்து அணிகலன் .
பாசிமாலை - இது தங்கச்சங்கிலியில் கருகுமணி என்று அழைக்கப்படும் பாசி மணிகளால் கோர்க்கபட்ட மாலை . இது ஒரு வகை கழுத்து அணிகலன் .
வைரக்காப்பு - இது தங்கத்தால் ஆன வளையலின் வெளிப் பகுதிகளில் வைரக்கற்கள் கொண்டு பதிக்கப்பட்ட ஒரு வகையான கையில் அணியகுடிய அணிகலன் .
நெளிகாப்பு - இது தங்கத்தால் ஆன வளையைல் போன்ற அமைப்பில் நெளி நெளி யாக வளைந்து காணப்படும் . இது சாதாரணமாக வீட்டில் உள்ளபோது அணிந்து கொள்ளப்படும் நகைகளில் ஒன்று .
கல்லுக்காப்பு - இது தங்கத்தால் ஆன வளையைல் போன்ற அமைப்பில் வெளிப்புறத்தில் வண்ணக்கற்கள் பதிகபட்டிருகும் .ஒரு வகையான கையில் அணியகுடிய அணிகலன் . ( நீலகல்லுக்காப்பு , சிவப்புகல்லுக்காப்பு , பச்சைகல்லுக்காப்பு )
முத்துக்காப்பு - இது தங்கத்தால் ஆன வளையைல் போன்ற அமைப்பில் வெளிப்புறத்தில் உயர்ரக முத்து பதிகபட்டிருகும் .
பாசிக்காப்பு - இது தங்கத்தால் ஆன வளையைல் போன்ற அமைப்பில் வெளிப்புறத்தில் கருகுமணி என்று அழைக்கப்படும் பாசி பதிகபட்டிருகும் .
வைரத்தோடு - தங்கத்தால் செய்த தோட்டில் முழுவது வைரக்கற்கள் பதிகபட்டிருகும் . ( இதில் ஏழு கல்லு , பதிமுனு கல்லு பதித்தது என்று கணக்குகள் உள்ளன )
வெள்ளகல்லு தோடு - தங்கத்தால் செய்த தோட்டில் வெள்ளை கற்கள் பதிகபடிருகும் . இது சாதரணமாக வீட்டில் உள்ளபோது அணியப்படும் நகையாகும்
பாசித்தோடு - தங்கத்தால் செய்த தோட்டில் இடையில் கருகுமணி பதிகபட்டிருகும் . இதுவும் சாதரணமாக வீட்டில் உள்ளபோது அணியப்படும் நகையாகும்


முத்துத்தோடு - தங்கத்தால் செய்த தோட்டில் இடையில் உயர்ரக முத்து பதிகபட்டிருகும் .
முத்துமோதிரம் / முத்து அரும்புதடை - தங்கத்தால் ஆன அரும்புதடையில் முத்து பதிக்கபட்டிருகும் .
அரும்புதடை - வைரவேட்டு வரிகள் அல்லது பூ நெளிகள் கொண்டு செய்யபட்டிருக்கும் . இதில் யனை முடி பதிக்க பட்டிருக்கும் . இரண்டு வரி அமைப்புகள் கொண்டிருக்கும் . இது கை விரல்களில் அணியப்படும் ஆபரணம் ஆகும் .
மிஞ்சி - இது வெள்ளியால் செய்த ஆபரணம் ஆகும்
( மெட்டி ). கால் விரல்களில் அணியகுடிய ஒன்று . இதில் ஒரு தனி சிறப்பு என்னவென்றால் நம் ஆச்சிகள் மட்டும் கால் விரல்களில் மூன்று வலயங்கள் அணிதிருபர்கள்
இரட்டவடசங்கிலி - இது இரண்டு சங்கிலிகள் ஒன்றோடு ஒன்று சிறிது இடைவெளி விட்டு பினைகபட்டிருக்கு இதில் தாலியை கோர்த்து அணிவர்
ஒற்றை வட சங்கிலி - இது சாதாரணமான தங்க சங்கில்லியாகும் . எதில் தாலியை கோர்த்து அணிவர்
மாங்கா மாலை - இது தங்கத்தால் செய்யப்பட்ட ஒன்று . இது மங்காய் வடிவில் சிறிதாக இருக்கும் . சங்கிலியின் இடையில் சிறு மாங்காய் வடிவ அமைப்புகள் கொர்கபட்டிருகும்


முற்காலத்தில் நமது ஆச்சிகள் தலையில் குத்தும் கொண்டை உசி , உக்கு , சேலையில் குத்த கூடிய உக்குகள் கூட தங்கத்தில் பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது . மற்றும் செட்டியார்கள் தங்கள் சட்டையில் குத்திக் இருந்த பதக்கம் போன்றவைகை வைரம் , சிவப்பு கற்கள் ,நவரத்தினம் போன்ற கற்கள் கொண்ட பாதகங்களை பயன்படுத்தினர் .

செட்டிநாட்டின் தனிச்சிறப்பு ஆச்சிகள் முன்பு காலில் சிலம்பு , கொலுசுகள் போன்றவைகளை அணிய மாட்டார்கள் . திருமணத்திற்கும் முன்பு அணிவர் . திருமணத்திற்கும் பின் முன்பு அணியமாட்டார்கள் . பின் பிள்ளைகள் பிறந்த உடன் இவற்றை தவிர்த்து வந்தனர் . தற்போது சிலர் இவற்றை இன்று அணிகின்றனர் . பலர் கொலுசுகளை அணிவதில்லை . இதற்கும் காரணம் நகரத்தார்கள் கண்ணகியின் வழிவந்தவர்கள் . கார்சிலம்பால் கண்ணகி கோவலனை இழந்ததன் நினைவாக கொலுசு , சிலம்பு போன்றவைகளை ஆச்சிகள் திருமணத்திற்கும் பின் அணிவதில்லை .

. நமது வழக்கத்தில் கட்டயமாக பெண் பிள்ளைக்கு திருமணத்தின் பொது கட்டாயமாக வைரைத் தோடும் அதற்கு மாற்று தோடும் தருவர் .அதே போன்று மணமகனுக்கு வைர மோதிரமுன் வழங்குவது கட்டயமாக உள்ளது . இதை நகைகளில் கணக்கு எடுத்தது கொள்ளபடமார்கள்
ஒருநகை என்றால் பெண்ணுக்கு கன்டசரம் மட்டு கொடுப்பார்கள்
இரண்டு நகை என்றால் பெண்ணுக்கு கன்டசரமும் வைரக்காப்பும் தருவார்கள் அல்லது பூச்சரமும் கன்டசரமும் தருவார்கள் ( கன்டசரம், பூச்சரம் , வைரக்காப்பு , மங்களச்சரம் இவைகளில் எதேனும் இரண்டு தருவார்கள் )
முன்று நகை என்றால் பெண்ணுக்கு கன்டசரம் ,மங்களச்சரம் வைரக்காப்பும் தருவார்கள் அல்லது (கன்டசரம், பூச்சரம் , வைரக்காப்பு , மங்களச்சரம் இவைகளில் எதேனும் மூன்றை தருவார்கள் )

                                                            - ஆ.தெக்கூர் கண. இராம. நா. இராமநாதன்


Wednesday, 29 October 2014

யாழ்


யாழ் : 

அழிந்து போன தமிழனின் பழந்தமிழ் இசைக்கருவிகளுள் இதுவும் ஒன்று . இந்த யாழ் இந்த யாழ் பற்றி நம் தமிழ் குடிமக்கள் காப்பியங்களான சிலம்பும் மேகலையிலும் பல எண்ணற்ற செய்திகள் உள்ளன . இதுமட்டும் இல்லாது திருக்குறளிலும்,சீவகசிந்தாமணி ,கலித்தொகை, பரிபாடல் , போன்ற நூல்களும் இது பற்றி உறைகின்றனர்

யாழின் அமைப்பு

யாழ் ஒரு மீட்டி வாசிக்கக்கூடிய நரம்புக்கருவி. இதன் இசையொலி பெருக்கி (resonator) தணக்கு எனும் மரத்தால் செய்யப்பட்டது. இது படகு வடிவமாய் இருக்கும். மேலே தோலால் மூடப்பட்டிருக்கும். இந்தத் தோலுக்குப் போர்வைத்தோல் என்று பெயர். போர்வைத்தோலின் நடுவிலுள்ள மெல்லிய குச்சியின் வழியாக நரம்புகள் கிளம்பி மேலே உள்ள தண்டியுடன் பிணைக்கப்பட்டிருக்கும். சில யாழ்களில் மாடகம் அல்லது முறுக்காணிகள் இருந்தன. அத்தகைய யாழ்களில் நரம்புகள் தண்டியின் துவாரங்களின் வழியாகச் சென்று முறுக்காணிகளில் சுற்றப்பட்டிருக்கும். சிலவற்றில் நரம்புக்கட்டு அல்லது வார்க்கட்டு தண்டியில் வரிசையாகக் காணப்படும். வார்க்கட்டுகளை மேலும் கீழுமாக நகர்த்தி நரம்புகளைச் சுருதி கூட்டினர்.

சங்க நூல்கள் யாழின் உறுப்புகளாக;

பத்தல் ,வறுவாய் ,யாப்பு ,பச்சை ,போர்வை ,துரப்பமை ஆணி ,உந்து ,நரம்பு, கவைக்கடை,மருப்பு ,துவவு

ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றன.. 



இந்த யாழிலும் பல வகைகள் உள்ளன . அவற்றில் சில வகைகள்

வில்யாழ்(21 நரம்புகளை உடையது)
பேரியாழ் (21 நரம்புகளை உடையது)
மகரயாழ் (17 அல்லது 19 நரம்புகளை உடையது)
சகோடயாழ் (16 நரம்புகளை உடையது)
கீசக யாழ் (14 நரம்புகளை உடையது)
செங்கோட்டியாழ் (7 நரம்புகளை உடையது)
சீறியாழ் (7 நரம்புகளை உடையது)
மகர வேல்கொடி யாழ்
மகர யாழ் / காமன் கொடி யாழ்
மகர யாழ் / வர்ணர் ஊர்தி யாழ்


இவற்றைவிட நாரதயாழ், தும்புருயாழ், மருத்துவயாழ், ஆதியாழ் (100 நரம்புகளை உடையது)
மகர யாழ் யவன தேசத்திலிருந்து எடுத்துவரப்பட்டதாகக் கூறப்படுகிறது

யாழ் இசைத்து பாணர்கள் இறைவனையும் மன்னர்களையும் வேண்டி பாடுவார் . இலங்கையில் யாழ்பாணம் என்ற ஒரு நகரம் உண்டு அதற்கு அப்பெயர் வர காரணம் . இதுவும் ஒன்று . யாழ் இசைத்து பாடும் பாணர்கள் அதிகம் இங்கு வாழ்ந்தனர். யாழ் + பாணர் = யாழ்பாணர் என்ற பெயர் மருவி யாழ்பாணம் என்றானது . இன்று பாணர்களும் மறைத்து போயினர் . சில அருங்காட்சியகங்களில் இந்த யாழ் இசை கருவியை காண முடியும் . இந்த யாழை மீட்டு பண் அமைத்து பாட பாணர்களும் இல்லை இந்த இசைக்கருவி கிபி 9 ஆம் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்தது . அதற்கு பின் இதன் புழக்கம் மெல்ல மங்கத் தொடங்கி இன்று மறைத்து விட்டது .


                                                         - ஆ.தெக்கூர் கண.இராம.நா.இராமநாதன்

Tuesday, 28 October 2014

இன்றைய நீர்நிலைகளின் (கண்மாய்கள் ) நிலை

தமிழகத்தில் கனமழையால் ஏரிகள் குளங்கள் நிரம்பி வழிகின்றன என்று கூறுகின்றனர் . சற்று சிந்திக்க வேண்டும் . நம் தமிழகத்தில் பாதிக்கும் மேற்பட்ட ஏரிகள் குளங்கள் துர்வாராமல் அப்படியே விட்டுவிட்டு மண் மூடி மைதானாக மாறியது . சில கம்மாய்கள் குட்டையாகவும் மாறியது . இன்று அந்த குட்டையாக மாறியுள்ள கம்மாய்கள் நிரம்பியது என்று நாம் நிம்மதி கொள்ளமுடியாது . காரணம் இவற்றில் தேங்கும் நீர் ஓரிரு மாதங்கள் தான் தாகுப்பிடிக்கும் . நாம் வறட்சியையும் போதியளவு மழை இல்லாத காலத்தில் நாம் நம் நீர் தேக்கங்களை ஆழப்படுத்தி தூர்வாரி வைத்திருந்தால் நாம் நம் மழைநீரை வீணாக்காமல் சேமித்திருக்கலாம் . இன்று நாம் நீர்நிலைகள் கரையோரமாக உள்ள பகுதிகளை குப்பைதொட்டியாக மாற்றாமல் பாத்துக்க வேண்டும் . நீர்நிலைகள் வெறும் நீர் தேக்கங்கள் மட்டும் அல்ல. இந்த நீர்நிலைகள் எல்லாம் வெறும் மழைநீர் வடிகால்கள் அல்ல என்பதை என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும் .நீரிநிலைகள் இந்த உலகின் உணவுச் சங்கிலியின் முக்கியமான ஒரு பங்கு வகிக்கிறது . இன்று நீர் நிலைகள் இல்லை என்றால் அதில் வாழும் நுண்னுயிர்கள் இல்லை அவற்றை உணவாக உண்ணும் பூச்சிகள் இல்லை , அந்த பூச்சிகள் நம்பி உள்ள தவளை , மீன்கள் இல்லை இவற்றை உணவாக உண்ணும் பாம்பு கழுகு போன்ற உயிரினங்கள் உணவு ??? இப்படி நம் உலகின் உணவு சங்கிலியில் ஒன்றை ஒன்று சார்ந்து தான் உள்ளோம் . இந்த சுழற்சியில் ஒன்று பாதிக்கபட்டால் பாதிப்பு அனைவருக்கும் தான் .இந்த உணவு சங்கலியை பாதுகாக்கும் பொறுப்பு நாம் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக இருக்கவேண்டும். வெறும் மரம் நட்டால் மட்டும் போதாது . அந்த மரத்தால் நமக்கு கிடைக்கும் மழையை சேமிப்பது எப்படி ??? சற்று சிந்தியுங்கள் ???? நமக்கு இந்த இயற்கை அன்னையை பாதுகாக்க உரிமைமட்டும் தான் உண்டு அந்த இயற்கை அன்னையை சேதப்படுத்தி அழிக்க நமக்கு உரிமை இல்லை . அப்படி செய்தால் அழிவு நமக்கும் நம் சங்கதிகளுக்கும் தான் . இயற்கையை பாத்துக்காஅரசைமட்டும் தான் நம்பி இருக்கவேண்டும் என்பதில்லை நாமும் நம் கடமையை இயற்கை அளித்த கோடையை நாம் நம்மால் முடிந்ததை செய்யவேண்டும்.

பிள்ளையார்பட்டி குளம்

ஊரணி

                                                                                                                                                                இன்று குடிக்கும் நீரை கூட காசு கொடுத்து வாங்கும் அவலநிலையில் உள்ளோம். அன்று நம் தமிழகத்தில் பெய்யாதா மழையா இன்று பெய்துவிட்டது . இதை நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் மழைநீர் நீரை நாம் சேமிப்பு செய்து நிலத்தின் நீர்மட்டத்தை பாதுகாப்போம் அன்று கட்டாய மழைநீர் சேமிப்பு திட்டத்தை அரசு கட்டாயமாகியது அன்று நாம் பெயரளவில் இதை நாமும் செய்தோம் .இன்று பல வீடுகளில் மாலை நீர் சேமிப்பு தொட்டிகள் இல்லாமல் செய்து விட்டோம் . சில வீடுகளில் சிறப்பாக இந்த முறையை பராமரித்து மழைநீரை சேமித்தும் வருகின்றனர் .



காஞ்சிபுரம் , திருவள்ளூர் , சென்னை ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டும் 1200 நீரி தேக்கம் ஏரிகள் இருந்தன அவற்றை எல்லாம் பிளாட்டு போட்டு ஏரிகளுக்கும் மூடுவிழா நடத்திவிட்டு இன்று எங்கள் நகருக்குள் வெள்ளம் வந்துவிட்டது . பாம்பு மீன் தவளைகள் நீரில் அடித்துக்கொண்டு வீடுகளுக்கும் முன் வருகின்றன என்று புலம்பி என்ன பயன் . அன்று தெரிந்து வினை விதைத்தீர்களோ தெரியாமல் விதைத்தீர்களோ இன்று அவற்றைஅறுவடை அறுவடை செய்தே ஆகவேண்டும் . புலம்பி பயனில்லை . அன்று அமைத்து வைத்த ஏரிகளை நீரி தேக்கங்களாகவும் வடிகால்களாக விளங்கின அவற்றின் மீது வீட்டை கட்டி குடியேறினால் யார் என்ன செய்ய முடியும் ???? 1200 ஏரிகள் இருந்த இந்த மூன்று மாவட்டத்தில் இவற்றை பாதுகாத்து வைக்காமல் அவற்றை இன்று நாம் இழந்து விட்டோம் .இன்று சென்னைக்குள் இருக்கும் ஏரிகளை விரல்விட்டு எண்ணி விடலாம்

சிந்திப்போம் செயல்படுவோம்

Sunday, 26 October 2014

நம் தமிழ்

நம் தமிழ் அன்னையின் அணிமணிகள் இவைகளே அணிந்து சிறப்பாக காட்சி தருகிறாள்
நம் தமிழ் அன்னையின் அணிமணிகளாகவும் தமிழின் பெருங்காப்பியமாகவும் விளங்குகிறது . இந்த காப்பியங்கள் எல்லாமே அணிமணிகள் பெயரை கொண்டே விளங்குகிறது. பாண்டிய மன்னன் சங்கமன் வைத்து எம்  தமிழ் அன்னையை போற்றி புகழ் பாடினான்.

சிலப்பதிகாரம்(சிலம்பு - கால்களில் அணியும் அணிகலன்)
மணிமேகலை (மேகலை -ஆடை நழுவாமலிருக்க மகளிர் இடுப்பில் அணியும் அணி)
குண்டலகேசி - (குண்டலம் என்பது மகளிர் அணியும் காதுவளையம்) குண்டலமும் கூந்தல் அழகும் கொண்டவள் குண்டலகேசி
வளையாபதி - வளையல் அணிந்த பெண் வளையாபதி
சீவகசிந்தாமணி - சிந்தாமணி என்பது அரசன் முடியில் (கிரீடத்தில்) பதிக்கப்படும் மணிக்கல்.




வாழ்க தமிழ் !! வாழ்க தமிழன்னை !! வாழ்க தமிழ் குலம் !!




கீழுள்ள இந்த பாடல் இலங்கை , மலேசிய , சிங்கை போன்ற நாடுகளில் இந்த பாடலே தமிழ்த்தாய் வாழ்த்தாக உள்ளது . இந்த பாடல் நாம் இன்று பாடும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை விட மிகவும் சொற்சுவையும் பொருட்சுவையுடையதாக உள்ளது .

காதொளிரும் குண்டலமும்,கைக்குவளை
-யாபதியும்,கருணை மார்பின்
மீதொளிர்சிந் தாமணியும், மெல்லிடையில்
மேகலையும், சிலம்பார் இன்பப்
போதொளிர்பூந் தாமரையும், பொன்முடிசூ
ளாமணியும் பொலியச் சூடி,
நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
தாங்கு தமிழ் நீடு வாழ்க !
நால்வரிசை அமுதிருக்க, நம்மாழ்வார்
மொழியிருக்கச் சேக்கி ழாரின்
பால்வடிசெந் தமிழிருக்கக் கம்பச்சித்
திரமிருக்கப் பகலே போன்று
ஞாலத்தி லறம்விளங்கும் நாயனார்
குறளிருக்க, நமது நற்றாய்,
காலத்தை வென்றோங்கும் கற்பகம்போற்
கனிபெருகக் கண்டி லோமோ !
                                                  -சுத்தானந்த பாரதியார்

இந்த பாடல் மிகவும் சிறப்பாககவும் தமிழ் மொழியின் உள்ள காப்பியங்கள் புலவர்கள் போன்றவைகைகளையும் தமிழ் அன்னையை பற்றியும் சிறப்பாக கூறுகிறது இந்த பாடல் 

Friday, 24 October 2014

என் கற்பக விநாயகர்



ஆரியர்களும் வடநாட்டவர்கள் கொண்டுவந்த கணபதிக்கோ நான்கு கரங்கள் எங்கள் தமிழர்கள் கொண்டாடி தொழுத விநாயகருக்கோ இரண்டே கரங்கள் எங்கள் கற்பகக்தருவிற்கும்  என் முதல் வணக்கங்கள் உலகின் மிகப்பழம்பெரும் கணபதி எங்கள் கற்பகவிநாயகரே பிள்ளையார்பட்டி கற்பகம் அல்ல அல்ல குறையாத வரங்களை தரும் வள்ளல்

கற்பகக் தெய்வத்தின் மீது என் முதல் கவிப்பா





               அண்ட சராசரதிற்கு முழுமுதற் பொருளே 
               ஆற்றங்கரை ஓரத்திலும் இருப்போனே 
               இன்னல்களை போக்க வல்லவனே 
               ஈடு இணை இல்ல முதற்பொருளே 
               உலகிற்கு திருமுறைகளை தந்தவனே 
               ஊழ்வினை போக்க வல்லவனே 
               எலியையும் வாகனமாய் கொண்டோனே 
               ஏழைமை போக்கும் எளியோனே 
               ஐம்புலன்களையும் அடக்கி வாழ்த்திட அருள்போனே 
               ஒன்பது கோள்களையும் அடக்கி அல்பவனே
               ஓம் கார பிரணவத்தின் வடிவானவனே  
               ஒளவையை தும்பிக்கையால் கயிலையில் விட்டோனே 



                                                               - ஆ.தெக்கூர் கண.இராம.நா.இராமு