Showing posts with label பா மஞ்சுவிரட்டு தொழுவு புகுத்தல். Show all posts
Showing posts with label பா மஞ்சுவிரட்டு தொழுவு புகுத்தல். Show all posts

Wednesday, 15 January 2020

மஞ்சுவிரட்டு காளை!!

நாள்தோறும் உனை சீராட்டி பாராட்டி, 
பசும்புல் பருத்தி துவரை ஊட்டி, 
தொய்வின்றி  பசியாற்றி, 
 உடல் நலம் பேண பதறி பிதற்றி, 
காலாண்டில் சத்துருண்டை ஊட்டி, 
ஊர் உறவு காணாது, ஊண் உறக்கமின்றி, உனை சீராட்டி காத்து பாங்காக உனை சிங்காரித்து ,கொம்புக்கு காவி பூசி , நெற்றிக்கு பட்டம் சூட்டி , கழுத்துக்கு கச்சை,சலங்கை,பூமாலை என பூட்டி அழகுபார்த்து!! 

வாடிவாசல் வழி திறந்து, 
விருட்டெனவே  சீறிப்பாய்ந்து , 
குளம்படிகள் ஆழமாய் பதிந்து, 
வாடியிலே நீ விளையாடும் அழகும்  
உன் மிடுக்கும் சொல்லும் உன் திறனை!!
உன் திமில் அணைக்க தயங்கிடும் தருனமே கூறிடும்  உந்தன் வெற்றி,  இவை சொல்லுமடா உன்னை எப்படி போற்றி வளர்த்தோம் என்று! நீ எங்கள் மழலை செல்வதினும் மேலான நடமாடு தெய்வமடா!!!

இனிய மாட்டுபொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!!

---இராம.நா.இராமு