Showing posts with label பா. Show all posts
Showing posts with label பா. Show all posts

Saturday, 11 July 2015

ஆ.தெக்கூர் மீனாட்சி சுந்தரர்



எங்கள் ஆ.தெக்கூர் நகரில் உறைகின்ற மீனாட்சி சுந்தரரின் மீதும் எழுதிய என்தன் சிறுகவிதை 

தெக்கூர் நகரசிவன் கோவில்

தெக்கூர் நகரின் தெய்வமே  திங்களணிந்தொனே
கலகங்கள் நீக்கும் கயிலையின் கருணாமூர்த்தியே !
தெக்கூரின்  மையத்தில் குடிகொண்ட தென்னவனே !
மங்கலங்கள் அருளிடும் மங்கையொருபாகநாதா !
தெக்கூர் நகரில் உறைகின்ற கோமகனே !
வேள்வணிகர் குடியது விளங்கிடவே வந்தமர்ந்தாள்
மீனாளும் மாங்காத புகழுடன் மேன்மையும் நல்க
ஊரினழகில் மயங்கியே சொக்கருடன் மீனாளும்
நித்தியமாய் இப்பதி யதனில் உறைந்தனரே !!!
ஊரின் ஆச்சிமாருக்கும் நாச்சிமாருகும் வாவரசியாய்
வாழ்ந்திடவே உச்சிதிலகத்தில் மீனாளும் நின்றாள் !!!
இப்பதியில் நாட்டாரும் நகரத்தாரும் நலமுடன்வாழ
மதுரையம்பதி தன்னைவிட்டு தெக்கூர் புகுந்தகோவே !!!
தானதருமங்கள் செய்திடவே நித்தியத்தை நல்கும்நாதா
பஞ்சாச்சரம் உரைக்க பிறவாநிலை நல்கும்ஈசனே !!!
மீனாட்சிசுந்தரர் பெயரதைநாளும் சொல்ல திருமகளும்
இல்லத்தில் உறைய இல்லாமையுடன் இருளதுவையும்
அகற்றியேயங்கு ஒளியத்தை நிலைபெறச் செய்வாளே !!!
தெக்கூர்நகரில் மும்மாரியுடன் முப்போக வெள்ளாமை
விளைந்து வறுமைகள் ஒழித்திடவே நீங்காதக்
மீன்விழியாள் மீனாள்கடைக்கண் பார்வை வைத்தாள் !!!
கன்னியர்கள் கைதொழ நல்லமணவாழ்வை கோடையாய்
சொக்கர்மீனாள் அருள்மழையை பொழியும் தெக்கூர்
காளையர்கள் நாடிவந்தால் இந்திரப்பதிவி நல்கும்
சோமேசனின் கடைக்கண் பார்வை பட்டதனாலே !!!
காலத்தே நல்லமண வாழ்க்கை நல்கிடும்
சொக்கர் மகிழ் பிரியாவிடையாளின் அருளாலே
இப்பத்தியில் தம்பதியர் பிரதோஷ பூசையில்வழிபட  
நந்திதேவரின் அருளாலே குலமதுவும் தழைக்கும் !!!
காலத்தேயெங்கள் தேவையை பூர்த்தியாகும் தெக்கூர்நாதன்
கொஞ்சும் கிளியுடைமீனாளும் நித்தியமாய் உறையும்
எங்கள் தெக்கூரின் புகழதுதிக்கெட்டும் பரவுமே !!!!

       ------ஆ.தெக்கூர் லெனா.கண.இராம.நா.இராமநாதன்


  






Wednesday, 8 July 2015

நடுவீட்டுக் கோலம்

கோலமீது கோலமீது அழகான கோலமீது
பச்சருசி மாவுகொண்டு தீட்டும்  கோலமீது
நகரத்தாரின்  தனித்துவ கவின்மிகு கோலமீது
ஆச்சிகள் கைவண்ணத்தில்  மிளிரும் கோலம்
மங்கள நிகழ்வுக்கு முந்திவரும் கோலமீது
பாங்குடனே பொட்டிகட்டி சிறப்புறவே அதை
சுற்றி  அழகுடனே முத்துமுத்தாய் புள்ளிகுத்திட
திருவும் கண்டுமகிழ மங்கலங்கள் கூடியதே !!!


காவடிப் பூசையிலும் பிள்ளையார் நோன்பினிலும்
தைதிங்கள்  பங்குனியில் பிறக்கும் பொங்கலிலும்
வீட்டுப் படைப்பின்போதும் சித்திரை முழுமதியன்றும்
திருமணம்  சொல்லையிலும் வேவுயிறகையின் போதும்
மருந்து குடிகையிலும் பிள்ளைபேற்றிலும்  என்று
குடும்பத்தில் ஒற்றுமையில்  உருக்கொண்ட  கோலமீது
செட்டிமகன் வாழ்வோடு கலந்துநிற்கும் கோலமீது
செட்டிநாட்டவர் தனித்துவ அடையாளக் கோலமீது !!!



- ஆ.தெக்கூர் கண. இராம. நா. இராமநாதன்