Wednesday 19 November 2014

ஆவணம்


ஆவணப்படுத்துவோம் என்ற தலையில் சில நாட்கள் முன்பு எழுதிய ஒரு பதிவு இந்த பதிவு முலம் தற்போது உள்ள நகரத்தார் இல்லதையாவது அவற்றின் வரலாற்றை அறிந்து ஆவணம் செய்து பாத்துக்காபடும் என்று நம்புகிறேன் .



ஆவணப்படுத்துவோம்


அனைத்து நகரத்தார்கள் வணக்கம் .

நகரத்தார்கள் அதிகம் வசிக்கும் பகுதி செட்டிநாட்டு .நம் பகுதியை நம் வீடுகளை unsico பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது . இது நகரத்தார்களுக்கு பெருமை சேர்க்கும் செய்தி . இன்று பல வெளிநாட்டவர்களும் பார்த்து வியக்கும் வகையில் அமைப்புகள் கொண்ட வீடுகள் கொண்டுள்ளோம் . அது மட்டும் இல்லது நம் கொண்டுவிற்றது பல எண்ணற்ற தேசங்கள் சென்று செல்வங்களை ஈட்டினர். அதுமட்டும் இல்லது அவர்களை தங்களது நேர்மையையும் நாணயத்தையும் நிலைநாட்டினர் . உடன் சைவத்தையும் தங்கள் சென்ற தேசத்திற்கும் கொண்டு சென்றனர் .


நம் ஐயாக்கள் கட்டிவைத்த வீடுகள் தான் நம் வீடுகள் நம் செட்டிநாட்டில் உள்ளன. நம் வீடுகளையும் நம் ஐயாக்கள் அப்பத்தாகள் பார்த்து பார்த்து கட்டிய வீடுகள் . அவற்றை பற்றி இன்று நாம் பலர் கவனிக்காமல் விட்டுவிடுகிறோம் . நம் வீடுகளையும் நம்மையும் நம் வீட்டின் வரலாற்றையும் ஆவணப்படுத்தி வைக்க வேண்டும் . இன்று ஆவணப்படுத்துவதால் நம் நாம் வரலாற்றை வரும்கால நம் பிள்ளைகளுக்கும் பொய்சேரும் . இன்று நம் ஒரு வீட்டின் ஆவணம் நாளை ஒரு சமுகத்தின் வரலாற்றை எடுத்து பேசும் . நம் குடி தமிழ் சமுகத்தின் ஆலமரமாக திகழ்ந்தது . ஒவ்வொரு நகரத்தாரும் சற்று நேரம் ஒதுக்கி இவற்றை நாம் செய்தால் நாளை வரும் நம் தலைமுறை தன் வீட்டின் வரலாறு தெளிவாக அறிந்துகொள்ள உதவும் . ஆவணப்படுத்து போது இவற்றையும் நாம் தெளிவாக முடிந்த வரை வீட்டுப் பெரியவர்கள் மூலமாக தெரிந்து வெறும்வாய்மொழிச் செய்தியாக மட்டும் அறிந்து கொள்ளாமல் அவற்றை நாம் எழுத்துப் பூர்வம்மாக ஆவணம் செய்யுங்கள் .

கண்ணப்ப செட்டியார் வளவு ஆ.தெக்கூர்

ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு பெருமையுண்டு . ஒவ்வொரு வீட்டிற்கு பின்பும் ஒரு வரலாறு கண்டிப்பாக இருக்கும் .

வீட்டை யார் கட்டினார் . எப்படி கட்டினார் ???
நம் ஐயாக்கள் பெயர்கள் ??? அவர்களின் குடிகளே நாம் பங்காளிகளாக கொள்கிறோம் ஆற்றையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்
நம் பாட்டி ஆயாள் பிறந்த ஊர் எது ?? கோயில் எது ???
எங்கு கொண்டு விற்க சென்றாகள் ???
என்னென்ன கொண்டு விற்றார்கள் ???
இந்த கோயிலை புனரமைத்தார்கள் ???
ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு விலாசம் உண்டு
அது என்ன ???
ஏன் அந்த விலாசம் ஏற்பட்டது ???
வீட்டிற்கு ஒரு புனை பெயர் உண்டு (பட்டை பெயர் ) அது என்ன ??? எப்படி வந்தது ஏன் ???
நகர சிவன்கோயிலில் ஏதேனும் நிகழ்விற்கு பொறுப்பு ஏற்று கொண்டார்களா ??
ஊரின் போது விழாக்களில் எவற்றுகாவது பொறுப்பேற்று செய்தார்களா ( வடித்து போடுதல் / தண்ணீர்பந்தல் ) ???
நம் வீட்டில் படைப்பு யாருக்காக படைக்கபடுகிறது ??
ஏன் படைக்கப்படுகிறது ???
என்ன பொருட்கள் வைத்து படைகபடுகிறது ???




இவற்றை எல்லாம் உடனே ஆவணம் செய்வது சற்று கடினம்தான் ஆனால் முயற்சி திருவினையாக்கும் என்பதற்கும் இணங்க நாம் முடிந்தவரை ஆவணம் படுத்தோம் .
சிறுதுளி பெருவெள்ளமாக மாறும் அதுபோல நாமும் நம் வீட்டை பற்றி பொறுமையாக சேகரித்து வைப்பது அவசியம்.நம் வீட்டில் ஐயாக்கள் எழுதிய கணக்கு புத்தகங்கள் , வரவு செலவு சிட்டைகள் , கல்யாணம் செலவு செய்த சிட்டைகள் , கொண்டு விற்ற பொருட்களின் வரவு செலவுகள் , லேவாதேவி தோழி செய்தபோது எழுதிய கணக்குகள் எல்லாம் கேட்பாரற்று மூலையில் சில வீடுகலில் கிடக்கின்றன் இன்னும் சில வீடுகளில் கரையான்கள் அரித்துக்கொண்டிருக்கின்றன .சில வீடுகளில் இவற்றை பத்திரமாக பாதுகாத்தும் வைத்துள்ளனர் . இவைகள்தான் நம் வரலாற்றை பற்றி பேசும் ஆதாரங்கள் . இவற்றை பாதுகாக்க வேண்டும் .நம் ஐயாக்கள் வாழ்ந்தன் வாழ்விற்கும் அர்த்தமுள்ளதாக இருந்ததற்கும் கட்டிய வீடுகளும் செய்த கோயில் திருப்பணிகளும் , ஊருக்கும் பயணாக வெட்டிவைத்த ஊரணிகளும் அவர்களின் புகழை பேசும். அனால் நாமோ அவர்கள் புகழை வீட்டின் புகழையும் மட்டும் பேசிவிட்டுச் செல்லாமல் நாமும் நம்மால் இயன்றதை செய்து நம் புகழையும் நாளை பேசும் வண்ணம் செய்துவிட்டு செல்வோம் .





இன்று நாம் பொருளாதார அடிப்படையில் நாம் விழுந்துவிட்டது உண்மை . ஆனால் நம்மால் முடிந்ததை செய்து நம் செட்டிநாட்டு கிராமத்தையும் நம் வீடுகளையும் பாதுகாப்போம் . நகரத்தார்கள் பற்றிய வரலாற்றையும் திருப்பணியையும் பலர் எழுதிவிட்டனர் பின் ஏன் நாம் ஆவணம் செய்ய வேண்டும் என்று கேள்வி எழும் எழுப்புவர் அதற்கும் பதில் இதோ நகரத்தார்கள் என்று பொதுவில் நகரத்தார்கள் பலர் எழுதியுள்ளனர் . இது நம்மை நம் வீட்டை பற்றிய வரலாறு . நம் ஐயாக்கள் அப்பத்தா , பாட்டிஆயாக்கள் வாழ்ந்தது . ஒவ்வொரு வட்டகையிலும் ஒவ்வொரு வழக்கம் உண்டு அவற்றை பல தொகுத்து வெளியிட்டிருப்பர்.ஒவ்வொரு ஊரிலும் சில சடங்குககளில் மாற்றங்கள் கண்டிப்பாக இருக்கும் . அதுபோல் வீட்டின் வழக்கங்களும் இருக்கும் .உதாரணமாக 6௦ 7௦ , 80 என்று கலியாணம் நகரத்தார்கள் வெகுசிறப்பாக செய்துகொள்வர் என்று அனைவருக்கும் தெரியும் . சில வீடுகளில் இந்த முறை செய்யமாட்டார்கள் .காரணம் அவர்களுக்கு ராசி இல்லாமல் இருக்கலாம் அல்லது வேறு சில காரணங்கள் இருக்கும் . மற்றொரு உதாரணம் நகரத்தார்கள் திருமணத்தில் முதல் நாள் மதியம் அல்லது இரவு கசாப்பு சமைத்து விருந்து வைப்பது வழக்கம் . சில வீடுகளில் இது போன்ற வழக்கம் இருக்காது காரணம் . அங்கு வேல் பூசை ,முருகவழிபாடு போன்றவைகள் நிகழும் அதனால் இங்கு சைவம் மட்டும் தான் உண்ணுவர் இதுபோன்ற பல செய்திகள் நம் வீடுகளையும் நம் குடும்பம் பற்றி ஆவணம் செய்யும்போது தெரியவரும் .


யாம் இட்ட இந்த பதிவின் நோக்கம் தங்கள் விருப்பங்கலையும் பாராட்டையும் பெரும் நோக்கில் பதிவிடவில்லை . இந்த பதிவை கண்டு யாரேனும் தங்கள் வீட்டையும் தங்களது வரலாற்றை ஆவணமாக பதிவு செய்தலே யான் இட்ட பதிவின் நோக்கத்திற்கும் கிடைத்த உண்மையான வெற்றியாகும் . அல்லது இவற்றை பற்றி நகரத்தார்கள் கூடும் இடத்தில இவற்றை பற்றி எடுத்து கூறி பிற நகரத்தார்களிடம் இந்த செய்தி சேருவது இந்த பதிவிற்கும் கிடைத்த அளவில்லா வெற்றியாகும் . இந்த பதிவி யாரையும் புன்படும் படி யான் இப்பதிவை இயற்றவில்லை .அப்படி இருப்பின் மன்னிக்கவும் . எல்லாம் சுப்பையன் அருளால் எல்லாம் இனிதே நிகழட்டும் .

http://nnagarathars.blogspot.in/

*** நன்றி***

வேணும்
தொட்டியதுத் கருப்பர் துணை


- ஆ.தெக்கூர் கரு.கண.இராம.நா.இராமு

No comments: