Thursday 20 November 2014

மாலியும் அவனது சிந்தனையும்



              கருப்பையாவும் அவரது பேரன் மாலி என்ற மாகலிங்கமும்  தினமும் மாலையில் தனது பேரனை அழைத்துக்கொண்டு கருப்பர் கோயிலுக்கும் சென்று வழிபட்டுவிட்டு வரும்போது தன் பேரனை வழியில் உள்ள ஒரு ஆலமரத்தின் அடியில் உள்ள திண்ணையில் அவர் அமர்ந்து கொண்டு தன் பேரனை சிறிது நேரம் விளையாட விட்டு தன் பேரன் விளையாடும் அழகை ரசித்துக்கொண்டு இருப்பார் தினமும் அவர் தன் பேரனுக்கும் அறவுரைகள் நீதிக்கதைகள் , பக்திகதைகள் , தன் வெளிநாட்டு பயண அனுபவங்களை சொல்லி கொண்டு அழைத்துச் 
செல்வார் .






தினமும் மாலி பள்ளியில் இருந்து வந்ததும் அவன் அப்பாதா சாலியாச்சி உடை மாற்றிவிட்டு தன் கையால் தேநீர் கலக்கி கொடுப்பாள் .மாலியின் அத்தா வள்ளியம்மை மாலையில் தேன்குழல் , வெள்ளைப்பணியாரம் , கந்தரப்பம் என்று மகன் வரும் போது செய்துதருவாள் . மாலையில் இடைப்பலகாரமும் தேதீர் (தேத்தண்ணீ ) குடித்ததும் தன் பேரனை அழைத்துக்கொண்டு கோயிலுக்கும் கிளம்புவார்.


                  அன்று வழக்கம்போல் கருப்பையாவும் பேரன் மாலியும் வழக்கமாக கோயிலுக்கும் செல்லும் வழியில் மாலிவிளையாடும் ஆலமரத்தின் அருகில் உள்ள திண்ணையை அடைந்தனர். அந்த பருவத்தில் ஆலமரத்தில் ஆலம்பழம் பழுது கொத்து கொத்தாக காய்த்து தொங்கியது . மாலியும் வழக்கமாக விளையாடிக்கொண்டு இருந்தான் . அப்போது அங்கு சற்று தொலைவில் கண்மாய் கரை அருகில் ஒரு சுமைதாங்கி கல் இருந்தது அதன் பின்புறம் ஓரமாக ஒரு பெரிய பரங்கிகோடியில் பரங்கிக்காய்கள் பெரிது பெரிதாக காய்த்து மண்ணில் கிடந்தன. அதை கண்ட மாலி உடனே மரத்தடியில் அமர்ந்திருந்த ஐயாவை நோக்கி ஓடிவந்தான் .

ஐயா அவன் வருவதை கண்டு பதை பதைத்து போனார் . என்னடா மாலி பூச்சி போட்டு கடுட்சுடிச்சா என்ன டா என்று வினவினார் அதற்கு அவன் எனக்கு ஒரு சந்தேகம் ஐயா என்றான்

என்னடா என்றார் அவன் உடனே ஐயா இந்த உலகை படைத்தது யார் என்றான் ??
அதற்கும் ஐயா உலகை ஈசன் படைத்தான் என்றார் ஐயா .
மாலி உடனே அவர் படைத்ததில் தவறு உள்ளது அவர் தப்பு செய்துள்ளார் என்றான்

என்ன தப்பு என்று சொல் என்றார் ஐயா

                     மாலி உடனே இந்த ஆலமரம் ரொம்பவும் பெருசா உள்ளது ஆனா இதோட பழங்களோ ரொம்பவும் சின்னதா இருக்கும் இதுக்கும் மரத்துக்கும் சம்பந்தமேயில்லாமல் படைத்ததுவிட்டார் . அதோ பாருங்கள் அந்த பரங்கி கொடியை அந்த செடியோ தரையில் கிடைக்கிறது அந்த செடிக்கும் பரங்கிப் பழத்திற்கும் சற்றும் பொருந்தவில்லை என்றான் . இந்த பரங்கிப்பழம் ஆலமரத்தில் காயத்தால் பொருத்தமாக இருக்கும் . இந்த ஆலம்பழம் பரங்கிக்கொடியில் காயத்தால் அதற்கும் ஏதுவாக இருக்கும் இப்படி ஈசன் தவறு செய்துவிட்டான் என்றான் மாலி

                             மாலியின் கேள்வியை கேட்டு மனதில் நகைத்தபடியே தன் பேரனின் கேள்வி ஞானத்தை பார்த்து மிகிழ்ந்து தன் பேரனுக்கும் பதில் சொல்ல முற்பட்டார். தன் பேரன் மாலியை பார்த்து கருப்பையா ஒரு கேள்வியை தன் பேரன் மாலியிடம் கேட்டார் ஈசன் தன் படைப்பில் தவறு செய்தார் என்றே வைத்துக் கொள்வோம் . இந்த மரத்தில் பரங்கிப்பழங்கள் காய்த்து தொங்கட்டும் பரங்கிக்கொடியில் ஆலம்பழம் பழுத்துதொங்கட்டும் . இப்போது இந்த மரத்தில் ஆலம்பழம் மரத்தில் பழுத்து கீழ் விழுகின்றது . பழம் பழுத்தால் கீழே விழும் என்பதை ஒத்துக்கொள்கிறாயா மாலி என்றார் .

                                        ஆம் ஐயா பழம் பழுத்தால் அதன் எடை அதிகம் மற்றும் காம்பினால் பாரம் தாங்காமல் கீழே விழும் என்றான் . சரி நீ சொன்னது போல் இந்த மரத்தில் பரங்கிக்காய்கள் அளவில் பழம் பழுத்தால் என்னவாகும் என்றார் . மாலியுடனே கிழே விழும் என்றான் .இப்பொது நாம் இங்கு ஆலமரத்தின் கீழ் அமர்ந்துகொண்டுளோம் . இப்பொது நீ சொன்ன பரங்கிப்பழம் பழுது கீழ் விழுந்தால் அல்லது மந்திகள் பரித்து போட்டால் என்னவாகும் என்றார் . நம் மீது விழும் என்றான் மாலி . விழுந்தால் என்னவாகும் என்று ஐயா சற்றும் பொறுமையாக கேட்டார் . நமக்கு வலிக்கும் அடிபடும் என்றான் மாலி


                                இப்போது ஐயா பேரனை பார்த்து ஈசன் படைப்பில் தவறு உள்ளதா என்றார் . மாலி இல்லை என்றான் . ஐயா மாலியை பார்த்து நீ சொன்னது போல் இருந்தால் நமக்கும் அடிபடும் இங்கு யாரும் ஓய்வுபெற்று செல்லவும் முடியாது . இந்த மர நிழல் யாருக்கும் உதவாது போயிருக்கும் .நீ பரங்கிக்கொடியின் நிழலில் யாரும் ஓய்வு எடுக்கப்போவதில்லை அதன் காய்கள் மண்ணில் கிடக்கின்றன. இதனால் யாருக்கும் ஆபத்தும் இல்லையென்றார் . இந்த உலகில் உள்ள இயற்கையின் படைப்பின் பின்னும் ஒரு காரணம் இருக்கும் . நாம் இயற்கையை போற்றி பாதுகாக்க வேண்டும் . பாதுகாக்க முடியாவிட்டாலும் அழிக்கக்கூடாது என்றார் .

                     ஈசன் படைப்பில் எந்த குறையும் உள்ளதா இப்போது சொல்லு மாலி என்றார் ஐயா . இல்லை ஐயா என்றான் . மாலி ஐயாவிடம் இயற்கையை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்றான் மாலி .ஐயா மரம் நடவேண்டும் என்றார் .மாலி உடனே நான் மரம் நடவேண்டும் என்று கேட்டான் . ஐயா நட்ட பத்தாதுடா தினமும் பராமரிக்க வேண்டும் தண்ணீ உத்தனும் என்றார் . மாலி உடனே அதற்கும் என்ன ஐயா தினமும் நாம் தான் கருப்பர் கோயிலுக்கு போகும் போது தண்ணீர் உத்துவோம் என்றான் . நீங்களும் நானும் சேர்ந்து மரம் இப்போவே வைச்சுட்டு கருப்பர் கோயிலுக்கும் போயிட்டு வீட்டுக் போவோம் என்று அழுத்தமாக சொல்லி அங்கேயே சுற்றி தேடி ஒரு வேப்பமரக்கன்றையும் , மாமரக்கன்றையும் தேடிப்பார்த்து பிடுங்கி வந்தான் மாலி. இன்று ஐயாவை விடுவதாக இல்லை மாலி . சரி பேரன் பிடுங்கி வந்த மரக்கன்றுகளை கண்மாய்க்கும் அருகிலே அங்கு கிடந்த சரட்டையும் குச்சியில் உதவி கொண்டு ஓரமாக குழி தோண்டி கன்றுகளை ஊணி வைத்தனர் .மாலியும் ஐயாவும் அருகில் இருந்த அடிபைபில் அடித்து கை கால்களை சுத்தம் செய்து கொண்டு சரட்டையில் நீர் கொண்டு வந்து ஊற்றி விட்டு கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினர்


                      வீட்டுக்கு வந்ததும் தன் சாளியாச்சி அப்பத்தாவிடம் நடந்ததை கூறினான் மாலி அப்பாதா உடனே மகிழ்ச்சியுடன் சிரித்துகொண்டே எம்புட்டு மாலியா சமத்தா என்று சொல்லி கட்டி தழுவி முதம்மிட்டால் சாலியாச்சி. உடனே போசஹாளுக்கு போய் உத்திரத்தில் தொங்கவிட்டு இருந்த அதிரச தூக்குசட்டியையும் மாவுருண்டை வைத்திருந்த பரங்கிக்காய் சட்டியையும் எடுத்து ரெண்டும் அதிரசமும் ரெண்டு மாவுருண்டையும் எடுத்து ஒரு கிண்ணியில் வைத்து பேரனுக்கும் கொடுத்தாள் சாலியாச்சி . மாலிஉடனே நாளைக்கு அப்பாதா நீங்களும் வாங்க நானும் ஐயாவும் வச்ச செட்டியகட்டுறேன் என்றான் . அப்பத்தா சிருசுகிட்டே அதுக்கு என்ன அப்பச்சி நாளைக்கும் நானும் ஐயாவோட வரே மூணு பெரும் பொய்த்து வருவோம் என்று சொன்னார் சாலியாச்சி. மாலி நாளை போகைல ஒரு ரப்பர் போனியும் கொண்டுபோகணும் அப்பாதா செடிக்கு தண்ணி ஊத்த என்றான் மாலி .


                       இதுபோல் எல்லோரும் தங்கள் ஊர்களில் அல்லது வீட்டுக்கு அருகில் மரம் நட்டு பராமரிப்போம். நம வீட்டுப் பிஞ்சுகள் மனதில் மரம் நடுவது பற்றி விதை விதைப்போம். இப்படி ஒவ்வொரு வீட்டிலும் கருப்பையாவும் ஒரு மாலியும் இருந்தால் நன்றாக இருக்கும் . நாம் நடும் மரங்கள் எல்லாம் ஒரு அடையாள சின்னம் . நாம் இந்த மண்ணை விட்டு சென்றாலும் நம் மரங்கள் நமது புகழ் பாடும் அடையாள சின்னமாக திகழும்.





                                                                                             ---- ஆ.தெக்கூர் கரு.கண.இராம.நா.இராமு

No comments: