Sunday 30 November 2014

கடற்கரையில் விந்தையா மாந்தர்கள்







 சென்னையின் முக்கியமான ஒரு பகுதியின்  வழியாக வாரத்தின் தொடக்க நாளான ஞாயிறு அன்று காலையில்  என் நண்பனுடன் ஈருருளியில் (பைக் ) துரைபாக்கத்தில் உள்ள நண்பர் வீட்டிற்கும் செல்லும் பயணத்தின் பொது சில காட்சிகள் மனதிலும் பதிந்து நின்றது . உலகின் மிக நீளமான கடற்கரையில் நம் மெரீனா கடற்கரை13கீமீ கொண்ட ஒரு கடற்கரை .உலகின் இரண்டாவது நீளமான கடற்க்கரை. சென்னையின் முக்கியமான அடையாளங்களில் இந்த பகுதியும் ஒன்று . மெரினா கடற்கரையை ஒட்டி புகழ்பெற்றோரின் உருவச்சிலைகள், நினைவிடங்கள், சமாதிகள் அமைந்து நாம் காணமுடியும் .தலைமைச்செயலகம் முதல் கலங்கரைவிளக்கம் வரை பயணத்தில் பொது  காலையில் கடந்தபோது இருருளியை வேகமாக ஒட்டாமல் மெதுவாக மெரினாவை கடந்தோம் .

 நடைமேடைகளில்ஆண் பெண் என்றுவேறுபாடுகள் இல்லமால் முதியோர்கள் , இளைஞர்கள் ,குழந்தைகள் என்று வேறுபாடுகள் கடந்தும் மக்கள் குழுமியிருந்தார்கள், தொளதொளவென பருத்தியுடைகள் அணிந்தும் , விளையாட்டு சீருடைகள் , முக்கால்ச்சட்டை ,கால்சட்டை போன்ற ஆடைகளில் , ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து காதுகளில் ஹீட்செட் போட்டுகொண்டு நடைபயிற்சி செய்கின்றனர் சிலர் தங்கள் செல்ப்பிராணிகளுடன் நடைபயிற்சியும் செய்த்கின்றனர் .சிலர் கைகளை முன்னுக்கும் பின்னுக்கும் வேகமாக வீசக் கொண்டு நடந்தனர் .மற்றும் சிலர் கைகளை சுழற்றிய படியும் நடந்தனர் . வெவ்வேறு விதமாக மக்கள் நடைபயிற்சி செய்துகொண்டு இருந்தார்கள்.

இந்த சலசலப்புக்கும் மத்தியில் சிலர் வானமே கூரையாக கொண்டு கடல்காற்றையே தங்களின் வீட்டு குளிர்சாதனமாக காற்றுக் கருவியாக கொண்டு போர்வையை இழுத்திப் போர்த்திக் கொண்டு தூங்கும் சாமானியர்களும் உள்ளனர் . மேலும் சில முதியவர்களும் ஆங்காங்கே எடை கருவியை வைத்துக்கொண்டு ஆங்காங்கே நிழலில் ஓரமாக அமர்ந்துகொண்டு இருந்தார்கள்.

கடற்கரை ஓரம் மணல்பரப்புகளில் ஆடவர்களும் யுவதிகளும் தனித்தனியாக ஆங்காங்கே கடற்கரை கைபந்து (பீச் வாலிபால் ) மிகுந்த கரகோசத்துடன் விளையாடி மகிழ்கிறார்கள் .சற்றுதொலைவில்புரவிகளின் மீது காவல்த்துறையினரின் குதிரைபடியினர் ஆங்காங்கைங்கே புரவியில் மீது  உலாவி கண்காணிப்பில் இடுபட்டு கொண்டிருந்தனர் .சிலர்விளையாட்டுப் போட்டியில் பயன்படுத்தப்படும் மிதிவண்டிகள் ஓட்டி பயிற்சி செய்துகொண்டிருந்தனர் .மேலும் சிலர் குழுவாக நின்று குலுங்கி குலுங்கி சதம்மாக சிரித்து கொண்டிருந்தனர் .அதன் பெயர் சிரிப்பு யோகாவாம் (லாபிங் தெரபி ) என்று இதுபோன்றும் ஆங்காங்கே செய்து கொண்டிருந்தனர்

மேலும் சிலர்  கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் காட்சி (ஸ்கேட்டிங் )சாலையின் ஓரத்தில் கூட்டம் கூட்டமாக மக்கள் சூழ்ந்து நின்றுகொண்டு இருந்தனர் .மக்கள் சற்றுநகர்ந்த பொது அங்கு ஒரு தள்ளுவண்டியில் கத்தாளை சாறு , அருகம்புல் சாறு மற்றும் பல இயற்கை மூலிகை சாறுகள் கண்முன்னே தயாரித்து குறைந்த விலைக்கும் தருகிறார்கள். உடன் அருகில் பச்சை தேநீர் , மூலிகை பொடிகள் விற்பனையகம் இதுபோன்ற கடைகள் அங்காங்கே கடற்கரை சாலையோரம் இருந்தன .

மேற்கொண்டு பயணத்தின் பொது சில யுவதிகளும் ஆடவர்களும் கடற்க்கரை மணலில் சிலம்பு பயிற்சிகள் செய்து கொண்டிருந்தனர் . சற்று தொலைவில் கராத்தே பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள் .அதன் சற்று தொலைவில் கபடி பயற்சியும் நடந்துகொண்டிருந்தது  மேலும் சிலர் மணற்பரப்பில் விரிப்பு விரித்து அதன் மேல் யோகாசன பயற்சியும் செய்துகொண்டிருந்தனர் .
கடற்கரை ஓரத்தில்

கடற்கரை சாலையோரம் பல ஈருருளிகள் , மகிழுந்துகள் என்று பல வாகனங்களில் மக்கள் வந்தும் போனதுமாக இருகின்றனர் .இப்படி பலதரப்பட்ட மனிதர்கள் ஒரு கடற்கரை ஓரமாக பலதரப்பட்ட மக்கள் தங்கள் உடல்நலத்தை பேணவும் தங்களை ஆரோக்கியமாக வைத்துகொள்ளவும் இங்கு  இந்த 6 கிலோமீட்டர் பரப்பலவும் கொண்ட கடற்கரை சாலையோர பகுதியை பயன்படுத்துகின்றனர் .என் பயணத்தில் ஈருருளியை வேகமாக செலுத்தி இருந்தால் நாங்கள் அந்த பகுதியை விரைவாக கடந்து சென்றிருப்போம் . ஆனால் தலைமை செயலகத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை வண்டியை மெதுவாக செலுத்தி வாடைகாற்றின் ஸ்பரிசத்தை அனுபவித்தபடி பொறுமையாக வித்தியாசமான மனிதர்களின் செய்கைகளை கண்டு ரசித்தபடி நிதானமாக இருபது நிமிடம் பொறுமையாக பயணித்தோம் .ஆரவாரமான இந்த சென்னையில் இப்படியும் தங்களை பேணி பாதுகாத்துக் கொள்ள இத்தனை ஆயிரம் மக்கள் இங்கு குழுமுகிறாகள் காலை 5 மணிக்கு தொடங்கி   9 மணிக்கு குள் இந்த ஆரவாரம் அடங்கி விடுகிறது .எனது பயணதில் 7.30மணியளவில் நான் கடந்த பொது இவற்றை கண்டு ரசிக்க நேர்ந்தது .

கலங்கரைவிளக்கம்
                                                                  ---- ஆ.தெக்கூர் கரு.கண.இராம.நா.இராமு


                                                                              




No comments: