Friday 21 November 2014

பொன்னனும் துறவியின் சுருக்கு பையும்

                                 ஒரு ஊரில் பொன்னன் என்ற ஒரு செல்வந்தன் வாழ்ந்து வந்தான் அவனுக்கும் திடிரென ஒரு சந்தேகம் எழுந்துதது. நம் ஊரில் மக்கள் மூன்று பிரிவாக வாழ்கிறார்கள்  வறியவன் , செல்வந்தன் மற்றும் ஓர் பிரிவு இரண்டிற்கும் இடையில் உள்ள நடுதரமானனவர்கள் இவர்களில் யார் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள விரும்பினான். பொன்னன் மனதில் ஒரு எண்ணம் வந்தது இரவு மக்கள் தூங்குவதை  வைத்து முடிவுக்கும் வரலாம் என்று நினைத்தான்  

                   பொன்னன் அன்று இரவு அந்த ஊரை சுற்றி பார்த்தான். முதலில் செல்வந்தர்கள் குடியிருக்கும் பகுதிக்குள் சென்றான் அங்கு அவர்கள  மாளிகைகள் விளக்கொளியில் மின்னியது . அங்கு வீட்டில்  ஏற்றி வைக்கப் பட்டிருந்த ஊதுபத்தி வாசனை தெருவரைக்கும் வீசியது.மற்றும் விருந்து உணவு சமைக்கும் வாடை கமகமத்தது உடன் நாட்டியம் இசை யென கலைகட்டியது அங்கு இதையெல்லாம் மனதில் கணக்கும் பொட்டுவைத்துக்கொண்டார்.



                    
                     அடுத்து உள்ள  வீதி நடுத்தர மக்கள் வாழும் வீதிக்கும் சென்றான்.அங்கு வீடுகள் மிகப்பெரிய ஆளவில் இல்லாமல் சற்று நடுத்தரமான அளவில் இருந்தன ஓரிரு தீபங்கள் ஏற்றப்பட்டும் சற்று ஆரவாரம் குறைந்து காணப்பட்டது . இவற்றையும் பொன்னன் மனதில் வைத்துக்கொண்டு அடுத்த பகுதிக்கும் சென்றான் . 

                           மூன்றாவது பகுதி வறியவர்கள் வாழும் பகுதிக்கும் சென்றான் .அங்கு வீடுகள் புனையோலை , தென்னை ஓலையால் முடியப்பட்ட வீடுகள் மிகவும் எளிய வாழ்க்கையை வாழ்ந்தனர். இவற்றையும் மனதில் எற்றிகொண்டான் . பொன்னன் இந்த மூன்று காட்சியையும் கண்டுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது  அங்கு வழியில் ஒரு மரத்தடியில் ஒரு துறவியை கண்டான் .
  
                        பொன்னன் அந்த துறவியை பார்த்து தனக்கு வந்த சந்தேகத்தை கூறினான்.உடன் அவன் கண்ட காட்சியையும் துறவியிடம் கூறினான். நீங்கள் தான் விளக்கம் தரவேண்டும் என்றான் .துறவி  பொன்னனிடம் நீ எனக்கும்  ஒரு உதவி செய்யவேண்டும் என்றான். பொன்னன் என்ன உதவி நான்  செய்கிறேன் என்றான் .துறவி தன் பையில் வைத்திருந்த ஒரு கைப்பையை எடுத்து இதில் 5 கை பிடி மண்ணை நிரப்பி தரவேண்டும்  என்று  சொன்னார் .  பொண்ணா நீ பையை பிடித்துக்கொள் நான் மண்ணை நிரப்புகிறேன் என்றார் . 

                      ஒரு கைப்பிடி மண்ணை நிரப்பினர் உள்ளே சென்றது. அடுத்த கைப்பிடி மண்ணை நிறப்ப பை நிரம்பியது . மூன்றாவது கை மண்ணை நிரப்பினார் கீழே கொட்டியது. அடுத்து நான்காவது கை மண்ணையும் பையில் போட முயன்றார் மண் கீழே சிந்தியது . இதை கன்னட பொன்னன் துறவியை பார்த்து  பை தான் கொள்ளவில்லையே ஏன் மீண்டும் முயற்சி செய்துகொண்டு நேரத்தை விரையமாக்குகிறோம் என்றான் பொன்னன்.

                                துறவி  சிரித்த படியே சொன்னார் நீ தெரிந்துகொள்ள நினைக்கும் கேள்விக்கு  பதில் நீயே ஒன்றை மனதில் இதுதான் என்று  நினைத்துக்கொண்டு என்னிடம் பதில் கேட்பது அது எப்படி ஏற்புடையதாக இருக்கும் . சிலரிடம் கலந்து ஆலோசனை செய்து விட்டு முடிவுசெய்தால் சிறப்பான ஒன்று .ஆனால் நீயே  ஒரு கருத்தை மனதில் வைத்துகொண்டு மற்றவரிடம் நீ யூகித்து வைத்தது சரியென்ற மனநிலையில் பிறரிடன் கேட்கும் அவர்கள் பதில் எப்படி உள்ளே உனக்கு சென்றடையும் என்றார் .



           உங்கள் கருத்து முற்றிலும் உண்மை தான் இனி இது போல் யாரிடமும் நடந்து கொள்ள மாட்டேன்  மன்னியுங்கள் என்றான் பொன்னன் . சரி ஐயா பதில் சொல்லுங்கள் என்றான் .அதற்கு துறவி நீ மக்களை மூன்று வகையாக பிரித்து பார்க்காதே . அனைவரும் ஒன்று தான் .அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்கின்றார்கள் என்றால் செல்வந்தன் மேலும் செல்வதை சேர்க்கவும் பாதுகாக்கவும் நினைப்பு . வறியவன் செல்வம் சேரக் ஆசைபடுகிறான் . இரண்டிற்கும் இடையில் உள்ளவன் தான் தாழ்ந்துவிடக்கூடாது மேலே உயரிய நிலைக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறான் . இருப்பதை வைத்து எவன் ஒருவன் வைத்து நிறைவா வாழ்கிறானோ அவனே மகிழ்ச்சியுடன் வாழ்கிறான் என்றார் துறவி .   
                                                                                                     ---- ஆ.தெக்கூர் கரு.கண.இராம.நா.இராமு

                                                                                    

No comments: