Tuesday 14 January 2020

தை மகளே வருக!

வருக! வருக! தைமகளே வருக!
தமிழர்கள் கொண்டாடும் தலைமகளே வருக!
நாணிச்சிவந்த நெற்கழனிகளின் 
 உவகை காண வருக!!.

நின்வரவை புத்தாடை உடுத்திப் புத்தரிசி கொண்டு புதுமுட்டியிலே பொங்கல் வைத்து தமிழர்கள் கொண்டாடும் உயர்ந்த திருமகளே வருக!!..

ஆதவனின் வலசையினை  காட்டும் திருநிறையே வருக! வருக! வருக! தைமகளே எங்கள் வாழ்வில் குன்றாத வளமையைத் தந்திடுக!!..
 
தமிழரின் இல்லங்களில் பால்பொங்கி 
பட்டிகள் பெருகி  கழனிகள் செழிக்க 
தைமகளே மங்களசங்கு ஒலித்து வருக!!!  வருக!!..

 அனைவருக்கும் தித்திக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் 
 நல்வாழ்த்துகள்

--று.நா.இராமு(15/1/20)

No comments: