Tuesday 7 January 2020

பொன்சிரிப்பில் பூத்தவளே!

பொன்சிரிப்பில்  பூத்திருக்கும் பூரணி வசந்தாளை வாழ்த்திடவே
அம்மான்கள் நாங்கள் இனைந்து வருகின்றோம் 
தேனமுதாய் இனிக்கின்ற தென்பாண்டி சங்கத் 
தமிழ்கொண்டு  வண்ணமுற  வாழ்வாங்கு வாழ்த்துகிறோம் !! 

கோதைமீனாள் அருள் சுரக்கும் ஆ.தெக்கூரின் நற்குடியில்
மதுவநேசன் ஐயா  விசாலாட்சி ஆயாவும் 
அட்டி ஆண்டில்  உதித்த பொற்கொடியாளாம் 
எங்கள் வாலைச்சிறுமி வாழ்வாங்கு வாழ்ந்திடவே !! 

கற்பகத்தான் புகழ்பாடும் சிராவயலின் பெருங்குடியாம்
கதிரேசன் ஐயா வசந்தா அப்பத்தாவின் 
பேராக நாகப்பன் சிவநத்தினி பெற்றமகள்
பூரணிவசந்தாவேனும் பேரழகியதேரின் எழில்சொல்லும் சிராவயல் நகர்..

இல்லத்தின் தலைமகளே அருகுபோல் வேரூன்றி
மருதாணிக்  கைசிவக்க மல்லிகைபோல் மணம்பரப்பி
வண்ணமகள்  எண்ணமதில் வசந்தங்கள் நிறைந்திருக்க 
உலகத்தார்மெச்ச திருவினாள்வாழ தில்லைசிவகாமியை வேண்டுகிறோம்..
பூத்தமுகத் தாமரையாய் புன்னகைக்கும் பொன்மயிலே 
பட்டங்கள் பலபெற்று வின்முட்ட வளர்ந்தாளும் 
பகட்டின்றி எளிமையுடன் செட்டாக சிக்கனமாய் 
செயலாற்றும் செட்டிநாட்டவரின் செல்வக் களஞ்சியமே !! 

வேணும் மலையாளத் தொட்டியத்து கருப்பர் துணை

அன்புடைய அம்மான்
இராம.நா.இராமநாதன்..

-- று.நா.இராமு
30மே2019 எழுதியது

No comments: