Tuesday 28 April 2020

சின்ன சாலி ஆச்சி..

சித்திரை திங்களில் குழிபிறையில்  தானதருமங்கள் செய்து புகழோடு வாழ்ந்த  ஆதினம் அண்ணாமலை ஐயா வீட்டில்  பிறந்த திருவினாள்...

 நம்  குழிபிறை பெரிய சாலியாச்சியின் பெயருமிட்டார்கள்..

 பெரியசாலியாச்சி போல் உள்ளமும் குணமும் கொண்ட எங்கள் சின்ன சாலியாச்சி ...
பூலாங்குறிச்சி சேது ஐயாவின் செல்லமாய் வளர்ந்த இளையமகளாம் அப்பச்சி வார்த்தைக்கு மறுப்பேதும் கூறாத நன்மொழியாள் ...

அப்பசியின் சொல்லுக்கு இனங்க முதுகலைபட்டமும் பெற்று அப்பச்சியை மகிழ்வித்த மாதரசி.. 

மலேயாவில் இருந்த அப்பச்சிக்கு இங்கு பங்குசந்தையில் முதலிடுசெய்ய பேருதவியாய் நின்ற சித்திரப்பாவை... 

1992 ளில் தெக்கூரில்  ககலைத்தந்தை கரு.முத்து.தினா பங்காளி குடும்பத்தில் கரு.கண வீட்டில் வந்து வாழ்ந்து வரும் பதுமை..

வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று மனதில் பட்டதை சொல்லிடும் எங்கள் சாலியாச்சி.. 

அம்பிகையின் மீது அளவற்ற காதலுடன் அவள் புகழ்பாடுவதை கடமையாய் கொண்ட பைங்கொடியாள்.. 

இல்லதார் உயர்வடைய தன் ஆசைகள் திறமைகளில் கவனம் செலுத்தாது தன்னையே அற்பணித்த இல்லதை கட்டிகாத்து வரும் வாழ்வரசி..  

 உற்றார்கள் கை  தளர்தியபோதும் உறுதியாய் மகளின் திருமணத்தை இனிதே முடித்த பொன்மயிலாள்.. 

மற்றார் கையை எதிர்நோக்காது உள்ளதை வைத்து இன்பமாய் வாழ்ந்திட கற்றுக்கொடுத்த நன்மொழியாள்..

 நின்மடியில் யான் உதிக்க என்ன தவம் செய்தேன்..

---- Rm.N.Ramu.

ashtabhuja Vishnu

Ashtabhuja Vishnu comparison


Ashtabhuja Vishnu  (in Sanskrit, ashta is eight and bhuja is hand). He is worshipped as Attabhuyakaram in Tamil.Vishnu in a standing posture with eight hands,
 Ashtabhuja Perumal holds the conch (sanku), bow (dhanusu), shield (khetakam) and mace (gada), while in the right hands, this deity holds the discus (sudarshana chakram), sword (asiu), lotus (padmam) and arrow (banam).
Pic 1
6 th century Ashtabhuja vishnu relief from #Badami cave3  by Chalukya kings at badami Karnataka. Badami, formerly known as Vatapi it was the regal capital of the Badami Chalukyas from AD 540 to 757. It is famous for its rock cut structural temples. Badami has been selected as one of the heritage cities of India.
Pic 2
  Ashtabhuja Perumal Temple located in #Kanchipuram this temple is located in Vishnu Kanchi or Chinna Kanchipuram in Hodgosonpet, located 2 km away from Varadaraja Perumal Temple. The temple have been renovated by the Pallavas of the late 8th century. And this temple is glorified in the Divya Prabandham the early medieval Tamil canon of the Azhwar saints ,  PeyAzhwar and Thirumangai Azhwar in one hymn during the 6th–9th centuries.
Pic 3 
10th Century Eight Handed Vishnu in Angkor Wat Temple in #Cambodia, here Vishnu is sculpted as the Supreme God with Eight Arms.he is worshipped as main deity by Buddhists and Hindus. This temple is maintained by Buddhist and the exhibit is strong resemblances  to the living/worshipped ancient temples of Tamilnadu Ashtabhujakaram is a temple situated in Kanchipuram & badami cave ashtabhuja vishnu is not a functioning temple its a monument site. In Cambodia Buddhists worship astajabuja Vishnu as Bodhisattva Avalokiteshvara Amoghapasha .At Prasat Kravan also we can see a relief of eight handed Vishnu and four hand vishnu.
PC: Google

Hair ornamental comparison

Pic1:8-9th century Agastya with grand ornamented jadamakuta an finely chiseled tiara, with a beard and mustache
from Cando Banon, Magelang, Central Java, now at National Museum Jakarta, #Java

Pic2: 8-9 th century #pallava bronze  rishabaharanar a form of Shiva with grand ornamented jadamakuda without beard and mustache  at chennai museum #India

Pic3: 10th century Head of Shiva wearing a high Mukuta bun set with the crescent moon and a finely chiseled tiara, with a beard and mustache from  Bakheng #Khmer. #Cambodia.

Thursday 23 April 2020

கம்பராமாயணமும் நாகேசுவரன் கோவில் குறுஞ்சிற்பமும் 11

கல்லின்மேல் இராமனது பாத தூளி பட, அகலிகை பழைய வடிவம் பெற்று எழல் (14)அகலிகையை கௌதமரிடம் சேர்த்த பின் மூவரும் மிதிலையில் புறமதிலை அடைதல் (26,27,28)
 #கம்பராமாயணம் #பால_காண்டம்
 #அகலிகை_படலம்

கண்ட கல்மிசைக் காகுத்தன் கழல்-துகள் கதுவ,-
உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு, உருவம்
கொண்டு, மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப,-
பண்டை வண்ணமாய் நின்றனள்; மா முனி பணிப்பான்: 14

அருந்தவன் உறையுள்தன்னை அனையவர் அணுகலோடும்,
விருந்தினர்தம்மைக் காணா, மெய்ம் முனி, வியந்த நெஞ்சன்,
பரிந்து எதிர் கொண்டு புக்கு, கடன் முறை பழுதுறாமல்
புரிந்தபின், காதி செம்மல் புனித மா தவனை நோக்கி, 26
'அஞ்சன வண்ணத்தாந்தன் அடித் துகள் கதுவாமுன்னம்,
வஞ்சிபோல் இடையாள் முன்னை வண்ணத்தள் ஆகி நின்றாள்;
நெஞ்சினால் பிழைப்பு இலாளை நீ அழைத்திடுக!' என்ன,
கஞ்ச மா மலரோன் அன்ன முனிவனும், கருத்துள் கொண்டான். 27

குணங்களால் உயர்ந்த வள்ளல் கோதமன் கமலத் தாள்கள்
வணங்கினன், வலம் கொண்டு ஏத்தி, மாசு அறு கற்பின் மிக்க
அணங்கினை அவன் கை ஈந்து, ஆண்டு அருந் தவனோடும், வாச
மணம் கிளர் சோலை நீங்கி, மணி மதில் கிடக்கை கண்டார். 28
Chola_miniatures
  #panels #Ramayana #kamba_ramayana #nageswaran_temple #kumbakonam

 Ahalya, the most beautiful of all women, who was married to the sage Gautama, known for the power of his austerities. Once, when Gautama was away, Indra took on his form and seduced Ahalya. When Gautama learned what had happened, he cursed both Indra and his wife. Ahalya was turned to stone, destined to stay that way until she was released from her curse by the touch of Rama’s foot.

Centuries later, Lord Rama, on his way to Mithila for Sita’s swayamvar passes through the hermitage, the dust from his feet touches the stone that is Ahalya. The curse is broken and Ahalya returns to her human form. Lord Rama touches her feet, proclaiming her innocence. Gautama is moved when he hears Lord Rama’s proclamation and takes her back as his wife. 
--- Ramu.RmN

Monday 13 April 2020

சித்திரை திங்கள்

பங்குனித் திங்கள் பாங்குடன் செல்ல
குன்றா வளமை  உவகையுடன் பெருக !
இல்லாமை நீங்கி! வெள்ளாமை ஓங்க!
முத்தமிழ்ப் பாடி எழுந்திடும் பொங்கு தமிழ் மகள் பொலிவுடன் மெல்ல!
பொன்னடியெடுத்து தரணியில்  மின்ன செய்திடும் சித்திரை மகளே ! ஏனோ ?!குறைமதி  நாளில் வந்தாயோ !!?
இனிய சித்திரை திங்கள் வாழ்த்துகள்

--இராமு.RmN



Saturday 11 April 2020

கம்பராமாயணமும் நாகேசுவரன் கோவில் குறுஞ்சிற்பமும் 10

இராமன் போர் செய்யத் தொடங்குதல் (39,40)இராமனின் அம்பு சுபாகுவைக் கொன்று, மாரீசனைக் கடலில் சேர்த்தல்(41,42)பிற போர்க்கள நிகழ்ச்சிகள் (43)தேவர்கள் இராமனை வாழ்த்துதல்(44,45)வேள்வியை இனிது முடித்த முனிவன் இராமனைப் பாராட்டுதல்(46)
 
#கம்பராமாயணம் #பால_காண்டம்
 #வேள்விப்_படலம்

நஞ்சு அட எழுதலும் நடுங்கி, நாள்மதிச்
செஞ் சடைக் கடவுளை அடையும் தேவர்போல்,
வஞ்சனை அரக்கரை வெருவி, மா தவர்,
'அஞ்சனவண்ண! நின் அபயம் யாம்' என்றார். 39

தவித்தனன் கரதலம்; 'கலங்கலீர்' என,
செவித்தலம் நிறுத்தினன், சிலையின் தெய்வ நாண்;
புவித்தலம் குருதியின் புணரி ஆக்கினன்;
குவித்தனன், அரக்கர்தம் சிரத்தின் குன்றமே. 40

திருமகள் நாயகன் தெய்வ வாளிதான்,
வெருவரு தாடகை பயந்த வீரர்கள்
இருவரில் ஒருவனைக் கடலில் இட்டது; அங்கு
ஒருவனை அந்தகபுரத்தின் உய்த்ததே. 41

இறவாது எஞ்சிய அரக்கர்கள் அஞ்சி ஓடுதல்
துணர்த்த பூந் தொடையலான் பகழி தூவினான்;
கணத்திடை விசும்பினைக் கவித்துத் தூர்த்தலால்,
'பிணத்திடை நடந்து இவர் பிடிப்பர் ஈண்டு' எனா
உணர்த்தினர், ஒருவர்முன் ஒருவர் ஓடினார். 42

ஓடின அரக்கரை உருமின் வெங் கணை
கூடின; குறைத் தலை மிறைத்துக் கூத்து நின்று
ஆடின; அலகையும், ஐயன் கீர்த்தியைப்
பாடின; பரந்தன, பறவைப் பந்தரே. 43

பந்தரைக் கிழித்தன, பரந்த பூ மழை;
அந்தர துந்துமி முகிலின் ஆர்த்தன;
இந்திரன் முதலிய அமரர் ஈண்டினார்;
சுந்தர வில்லியைத் தொழுது வாழ்த்தினார். 44


புனித மா தவர் ஆசியின் பூ மழை பொழிந்தார்;
அனைய கானத்து மரங்களும் அலர் மழை சொரிந்த;
முனியும், அவ் வழி வேள்வியை முறைமையின் முற்றி,
இனிய சிந்தையன், இராமனுக்கு இனையன இசைத்தான்; 45

'பாக்கியம் எனக்கு உளது என நினைவுறும் பான்மை
போக்கி, நிற்கு இது பொருள் என உணர்கிலென் - புவனம்
ஆக்கி, மற்றவை அனைத்தையும் அணி வயிற்று அடக்கி,
காக்கும் நீ, ஒரு வேள்வி காத்தனை எனும் கருத்தே.' 46

The young princes safeguarded the ritual for six days and nights. On the sixth day of Yajna, Marich and Subahu again came there with a large number of their followers. They were determined to desecrate the holy site of Yajna.Rama and Lakshmana were standing alert to guard the place. Rama drew his bow and instantly Subahu was killed and Maricha was hit by the arrow which took and threw him and instantly Marich was hit by the arrow which took and threw him in the ocean a hundred miles away. The Yajna was completed without any further disturbance. 

#Chola_miniatures  #panels #Ramayana #kamba_ramayana #nageswaran_temple #kumbakonam

--Ramu.RmN

Wednesday 8 April 2020

கம்பராமாயணமும் நாகேசுவரன் கோவில் குறுஞ்சிற்பமும் 9


விசுவாமித்திரர் இராமனுக்குப் படைக்கலம் வழங்குதல் (1 ,2) இராமன் ஏவலுக்கு படைகள் அமைந்து நிற்றல் (3)

#கம்பராமாயணம் #பால_காண்டம்
#வேள்விப்_படலம்

 


விண்ணவர் போய பின்றை, விரிந்த பூமழையினாலே
தண்ணெனும் கானம் நீங்கி, தாங்க அருந் தவத்தின் மிக்கோன்,
மண்ணவர் வறுமை நோய்க்கு மருந்து அன சடையன் வெண்ணெய்
அண்ணல்தன் சொல்லே அன்ன, படைக்கலம் அருளினானே. 1

ஆறிய அறிவன் கூறி அளித்தலும், அண்ணல்தன்பால்,
ஊறிய உவகையோடும், உம்பர்தம் படைகள் எல்லாம்,
தேறிய மனத்தான் செய்த நல்வினைப் பயன்கள் எல்லாம்
மாறிய பிறப்பில் தேடி வருவபோல், வந்த அன்றே. 2



'மேவினம்; பிரிதல் ஆற்றேம்; வீர! நீ விதியின் எம்மை
ஏவின செய்து நிற்றும், இளையவன் போல' என்று
தேவர்தம் படைகள் செப்ப, 'செவ்விது' என்று அவனும் நேர,
பூவைபோல் நிறத்தினாற்குப் புறத்தொழில் புரிந்த அன்றே. 3


Rama  Lakshmana and  Vishwamitra finally, reached the place where Vishwamitra  planed to perform his sacred ritual. The young princes safe guarded the ritual for six days and nights.

#Chola_miniatures  #panels #Ramayana #kamba_ramayana #nageswaran_temple #kumbakonam

--Ramu.RmN

Monday 6 April 2020

கம்பராமாயணமும் நாகேசுவரன் கோவில் குறுஞ்சிற்பமும் 8

தாடகை கல் மழை பொழிய, இராமன் அம்பு மழையால் தடுத்தல் ( 48 ) இராம பாணம் தாடகையின் நெஞ்சில் ஊடுருவ, அவள் மாய்ந்து மண்ணில் வீழ்தல் ( 49,50,51,52,53 )


#கம்பராமாயணம் #பால_காண்டம்
#தாடகை_வதைப்_படலம்

அல்லின் மாரி அனைய நிறத்தவள்,
சொல்லும் மாத்திரையின், கடல் தூர்ப்பது ஓர்
கல்லின் மாரியைக் கைவகுத்தாள்; அது
வில்லின் மாரியின், வீரன் விலக்கினான்
மின்னொடும் அசனியோடும் வீழ்வதே போல-வீழ்ந்தாள். 48

சொல் ஒக்கும் கடிய வேகச் சுடு சரம், கரிய செம்மல்,
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும், வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது, அப்புறம் கழன்று, கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என, போயிற்று அன்றே! 49

பொன் நெடுங் குன்றம் அன்னான், புகர் முகப் பகழி என்னும்
மன் நெடுங் கால வன் காற்று அடித்தலும், -இடித்து, வானில்
கல் நெடு மாரி பெய்யக் கடையுகத்து எழுந்த மேகம்,
மின்னொடும் அசனியோடும் வீழ்வதே போல-வீழ்ந்தாள். 50


பொடியுடைக் கானம் எங்கும் குருதிநீர் பொங்க வீழ்ந்த
தடியுடை எயிற்றுப் பேழ் வாய்த் தாடகை, தலைகள்தோறும்
முடியுடை அரக்கற்கு, அந் நாள், முந்தி உற்பாதம் ஆக,
படியிடை அற்று வீழ்ந்த வெற்றி அம் பதாகை ஒத்தாள். 51

கான் திரிந்து ஆழி ஆகத் தாடகை கடின மார்பத்து
ஊன்றிய பகழி வாயூடு ஒழிகிய குருதி வெள்ளம்
ஆன்ற அக் கானம் எல்லாம் பரந்ததால்-அந்தி மாலைத்
தோன்றிய செக்கர் வானம் தொடக்கு அற்று வீழ்ந்தது ஒத்தே! 52


வாச நாள் மலரோன் அன்ன மா முனி பணி மறாத,
காசு உலாம் கனகப் பைம் பூண், காகுத்தன் கன்னிப் போரில்,
கூசி, வாள் அரக்கர்தங்கள் குலத்து உயிர் குடிக்க அஞ்சி,
ஆசையால் உழலும் கூற்றும், சுவை சிறிது அறிந்தது அன்றே. 53

#Chola_miniatures  #panels #Ramayana #kamba_ramayana #nageswaran_temple #kumbakonam


Ram was ready for this a fierce battle ensued between the huge Rakshasi  tadaga and Rama. Finally, Rama pierced her heart with a deadly arrow current of hot blood flowed from her chest. Without giving any more chance for attack to her, Ram left another arrow which rooted into her chest. Suffering from dizziness Tadaka crashed down to the earth. A Seeing fighting skills of Ram and death of Tadka Viswamitr was pleased.

--Ramu.RmN

Sunday 5 April 2020

கம்பராமாயணமும் நாகேசுவரன் கோவில் குறுஞ்சிற்பமும் 7

#தாடகையின் தோற்றம் ( 29,30,31 )இராமன் கருத்தறிந்த முனிவன், 'இவள் பெண் அல்லள்; கொல்லுதி' எனல்( 40,41,42,43)
முனிவனின் ஏவலுக்கு இராமன் இசைந்து கூறுதல்(44) தாடகை சூலப் படையை ஏவ, இராமன் அம்பால் அதனைத் துணித்தல் (45,46,47)

#கம்பராமாயணம் #பால_காண்டம்
 #தாடகை_வதைப்_படலம்

 

சிலம்புகள் சிலம்பிடை செறித்த கழலோடும்
நிலம் புக மிதித்தனள்; நெளித்த குழி வேலைச்
சலம் புக, அனல் தறுகண் அந்தகனும் அஞ்சிப்
பிலம் புக, நிலக் கிரிகள் பின் தொடர, வந்தாள் 29

இறைக்கடை துடித்த புருவத்தள், எயிறு என்னும்
பிறைக் கடை பிறக்கிட மடித்த பில வாயள்,
மறைக் கடை அரக்கி, வடவைக் கனல் இரண்டு ஆய்
நிறைக் கடல் முளைத்தென, நெருப்பு எழ விழித்தாள். 30

கடம் கலுழ் தடங் களிறு கையொடு கை தெற்றா,
வடம் கொள, நுடங்கும் இடையாள், மறுகி வானோர்
இடங்களும், நெடுந் திசையும், ஏழ் உலகும், யாவும்,
அடங்கலும் நடுங்க, உரும் அஞ்ச, நனி ஆர்த்தாள். 31

 'கறங்கு அடல் திகிரிப் படி காத்தவர்
பிறங்கடைப் பெரியோய்! பெரியோரொடும்
மறம்கொடு, இத் தரை மன்னுயிர் மாய்த்து, நின்று,
அறம் கெடுத்தவட்கு ஆண்மையும் வேண்டுமோ? 40

'சாற்றும் நாள் அற்றது எண்ணி, தருமம் பார்த்து,
ஏற்றும் விண் என்பது அன்றி, இவளைப் போல்,
நாற்றம் கேட்டலும் தின்ன நயப்பது ஓர்
கூற்றும் உண்டுகொல்?-கூற்று உறழ் வேலினாய்! 41

'மன்னும் பல் உயிர் வாரி, தன் வாய்ப் பெய்து
தின்னும் புன்மையின் தீமையது ஏது? -ஐய!-
"பின்னும் தாழ் குழல் பேதைமைப் பெண் இவள்
என்னும் தன்மை, எளிமையின் பாலதே! 42

'ஈறு இல் நல் அறம் பார்த்து இசைத்தேன்; இவட்
சீறி நின்று இது செப்புகின்றேன் அலேன்;
ஆறி நின்றது அருள் அன்று; அரக்கியைக்
கோறி' என்று, எதிர் அந்தணன் கூறினான். 43


ஐயன் அங்கு அது கேட்டு, 'அறன் அல்லவும்
எய்தினால், "அது செய்க!" என்று ஏவினால்,
மெய்ய! நின் உரை வேதம் எனக் கொடு
செய்கை அன்றோ! அறம் செயும் ஆறு' என்றான். 44

கங்கைத் தீம் புனல் நாடன் கருத்தை, அம்
மங்கைத் தீ அனையாளும் மனக்கொளா,
செங் கைச் சூல வெந் தீயினை, தீய தன்
வெங் கண் தீயொடு மேற்செல வீசினாள். 45

புதிய கூற்று அனையாள் புகைந்து ஏவிய
கதிர் கொள் மூஇலைக் கால வெந் தீ, முனி
விதியை மேற்கொண்டு நின்றவன்மேல், உவா
மதியின்மேல் வரும் கோள் என, வந்ததே. 46

மாலும், அக் கணம் வாளியைத் தொட்டதும்,
கோல வில் கால் குனித்ததும், கண்டிலர்;
காலனைப் பறித்து அக் கடியாள் விட்ட
சூலம் அற்று வீழ் துண்டங்கள் கண்டனர். 47


#Chola_miniatures  #panels #Ramayana #kamba_ramayana #nageswaran_temple #kumbakonam

Vishwamitra and the two princes came to Tataka's forest and the sage ordered Rama to kill the demoness to free the area from her terror. Rama was hesitant to kill her as she was a woman and initially maimed her, chopping off her hands so that she could not attack him further. Using her demonic powers, she changed form, disappeared and continued to attack them . 


In this story Tataka is described as a huge ogre, who sports a string of elephants as her girdle. So, to show her size   the sculptor allocates to her half the panel to tataka Rama, Lakshmana and Viswamitra are  in the remaining space. 

--- Ramu.RmN

Saturday 4 April 2020

கம்பராமாயணமும் நாகேசுவரன் கோவில் குறுஞ்சிற்பமும் 6

கம்பராமாயணத்தில் தடகையை வதைக்கும் முன் கீழ் காணும் பாக்களின் மூலம் இராமனுக்கு விசுவாமித்திரர் மந்திரங்களை தான் உபதேசிக்கின்றதாக கம்பர் குறிப்பிடுகின்றார் ஆனால் நமது நாகேசுவரன் கோவில் சிறப்ப தொகுப்பிலோ வில்வித்தையின் நுணுக்கத்தை பயிற்றுவிக்கும் வகையில் அமைந்துள்ளது.


வெம்மையை தாங்கும் ஆற்றல் பெற இராம இலக்குவருக்கு இரண்டு மந்திரங்களை முனிவன் உபதேசித்தல்


 #கம்பராமாயணம் #பால_காண்டம்
 #தாடகை_வதைப்_படலம்

 
எரிந்து எழு கொடுஞ் சுரம் இனையது எய்தலும்,
அருந் தவன், 'இவர், பெரிது அளவு இல் ஆற்றலைப்
பொருந்தினர் ஆயினும், பூவின் மெல்லியர்;
வருந்துவர் சிறிது' என மனத்தின் நோக்கினான். 17


நோக்கினன் அவர் முகம்; நோக்க, நோக்குடைக்
கோக் குமரரும் அடி குறுக, நான்முகன்
ஆக்கின விஞ்சைகள் இரண்டும் அவ் வழி
ஊக்கினன்; அவை அவர் உள்ளத்து உள்ளினார். 18


#Chola_miniatures  #panels #Ramayana #kamba_ramayana #nageswaran_temple #kumbakonam

In their course of travel Sage #Vishvamitra gives  the knowledge of the #Devastras or celestial weaponry [bala and adi bala] to #Rama and #Lakshmana he trains them in advanced religion and guides them to kill powerful demons.


In this miniature panel sculptor had shown beautifully how Sage Viswamitra giving Rama some additional training in wielding the bow


-- Ramu.RmN

கம்பராமாயணமும் நாகேசுவரன் கோவில் குறுஞ்சிற்பமும் 5


தயரதன் அரியணையில் வீற்றிருக்க, விசுவாமித்திர முனிவனின் வருகை ( 3 ,4 ) தயரதன் கை கூப்பித் தொழுது, 'யான் செய்வது அருளுக!' என வேண்டுதல் (10)வேள்வி காக்க தயரதனிடம் கரிய செம்மலை முனிவன் வேண்டல்(11) தயரதன் இராம இலக்குவரை முனிவனிடம் ஒப்புவித்தல் ( 17, 18 )

 #கம்பராமாயணம் #பால_காண்டம்
#கையடைப்_படலம்

தூய மெல் அரியணைப் பொலிந்து தோன்றினான்;
சேய் இரு விசும்பிடைத் திரியும் சாரணர்,
'நாயகன் இவன்கொல்?' என்று அயிர்த்து, நாட்டம் ஓர்
ஆயிரம் இல்லை என்று ஐயம் நீங்கினார். 3

மடங்கல்போல் மொய்ம்பினான் முன்னர், 'மன்னுயிர்
அடங்கலும் உலகும் வேறு அமைத்து, தேவரோடு
இடம் கொள் நான்முகனையும் படைப்பென் ஈண்டு' எனாத்
தொடங்கிய, துனி உறு, முனிவன் தோன்றினான். 4

உரைசெய்யும் அளவில், அவன் முகம் நோக்கி, உள்ளத்துள் ஒருவராலும்
கரை செய்ய அரியது ஒரு பேர் உவகைக் கடல் பெருக, கரங்கள் கூப்பி,
'அரைசு எய்தி இருந்த பயன் எய்தினென்; மற்று, இனிச் செய்வது அருளுக!' என்று,
முரைசு எய்து கடைத்தலையான் முன் மொழிய, பின் மொழியும் முனிவன், ஆங்கே: 10

'தரு வனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு இடையூறு, தவம் செய்வோர்கள்
வெருவரச் சென்று அடை காம வெகுளி என, நிருதர் இடை விலக்கா வண்ணம்,
"செருமுகத்துக் காத்தி" என, நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி' என, உயிர் இரக்கும் கொடுங் கூற்றின், உளையச் சொன்னான்.11

குருவின் வாசகம் கொண்டு, கொற்றவன்,
'திருவின் கேள்வனைக் கொணர்மின், சென்று' என,-
'வருக என்றனன்' என்னலோடும், வந்து
அருகு சார்ந்தனன், அறிவின் உம்பரான். 17

வந்த நம்பியைத் தம்பிதன்னொடும்
முந்தை நான்மறை முனிக்குக் காட்டி, 'நல்
தந்தை நீ, தனித் தாயும் நீ, இவர்க்கு;
எந்தை! தந்தனென்; இயைந்த செய்க!' என்றான். 18
#Chola_miniatures  #panels #Ramayana 
#kamba_ramayana #nageswaran_temple #kumbakonam

When #Rama was about 16 years old, sage #Vishwamitra came to visit #Dasharatha in search of help against #rakshsas (demons), who were disturbing his #Vedic_rituals . He asked King Dasharatha to send Rama for protection against two powerful demons called #Maareecha and #Subaahu. Considering Rama’s age, King Dasharatha became very upset at the sage’s request and refused to send him. Sage Vishwamitra became very angry but was finally pacified by the intervention of Vasishtha. He convinced Dasharatha to send Rama with Vishwamitra, ensuring him that Vishwamitra’s powers and Rama’s own capabilities would make him successful. Finally, Dasharatha agreed, and Rama and #Lakshmana were dispatched with Vishwamitra.

Friday 3 April 2020

கடகம் அன்றும் இன்றும்



கடகம் / கடகப்பெட்டி /காடாப்பெட்டி
என்பது, பனையோலையால் செய்யப்படும் அளவில் பெரிய ஒரு வகைப் பெட்டி. இது தானியங்கள், பல வகையான பொருட்களை சேகரிக்கவும் நீண்ட நாட்கள் வைத்திருக்கவும் பயன்படுத்துவர். குறிப்பாக, பயறுவகைகள், வெல்லம், புளி, மிளகாய், கறிக்காய்கள் போன்ற பொருட்களை இட்டு வைப்பதற்கும், ஓரிடத்தில் இருந்து இன்னோரிடத்திற்கு எடுத்துச் செல்வதற்கும் தென்மாவட்டங்களிலும் யாழ்பாணத்திலும்  பயன்படுத்தப்படுகின்றன பனையோலையால் செய்யப்ப ஒருவித காதற்ற கூடை .


படம்1 : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயிரம் கால் மாண்டபத்தில் உள்ள நாயக்கர் கால தூண் சிற்பம். இந்தப் பெண் சிற்பத்தில் மூன்று குழந்தைகளை தாங்கி கொண்டு ஒரு குழந்தையை தான் தோள்பட்டையில் சுமந்து கொண்டும்  மற்றொரு கைகுழந்தையை நெஞ்சில் தன் துணியால் தொட்டில் போன்று கட்டி பாதுகாப்பாக வைத்துக்கொண்டு கையில் ஒரு பிள்ளையை அழைத்துக்கொண்டு சந்தைக்க நடந்து செல்வது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு இடையில் அவள் கையில் பனை ஓலையில் முடையப்பட்ட கடகம் வைத்துள்ளாள். அதில் பனைஓலையின் வடிவம் மிக நுணுக்கமாகவும் அப்படி ஒரு தத்துருவமாக வடித்துள்ளார்.


படம் 2: புதுச்சேரி ஆரோவில்லில் வசிக்கும் ராஜ்குமார் ஸ்தபதி அவர்கள் 2007/2008 களில் வரைந்த நீர்வண்ண ஓவியம். கடகத்தில் கறிக்காய்கள் கொண்டுவரும் பெண்கள். இந்த காட்சியை பல தென்மாவட்டங்களில் கூடும் வார சந்தைகளில் நம்மால் இன்றும் காணமுடியும் சற்றும் குறைந்த எண்ணிக்கையில்.


படம்3: கடகம் சென்னை MRC நகரில் உள்ள மஞ்சள் அறக்கட்டளையில் விற்பனைக்கு  காட்சிபடுத்தப்பட்டிருந்த கடகம்.தென் மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பனை மரங்கள் அதிகம் உள்ளன. இப்பகுதிகளில் பனையோலைகளில் பெட்டி, கூடை, கொட்டான், அஞ்சறைப் பெட்டி, மிட்டாய் பெட்டி, பர்ஸ், விசிறி, முறம், தட்டு, கிலுகிலுப்பை, தொப்பி என விதம்விதமான கைவினைப் பொருட்கள் செய்யப்பட்டுவந்தன இவ்விடங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் பனையோலையால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். இதெல்லாம் இருந்தாலும், நாகரிக மோகம் காரணமாகப் பனையோலைக் கைவினைப் பொருட்கள் தற்போது மோசமான பின்னடைவைச் சந்தித்து வருகின்றன. பாரம்பரியமாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தனை சேர்ந்த  திருமதி. விசாலாட்சி ராமசாமி ஆச்சி அவர்களால் 20 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட மஞ்சள் அறக்கட்டளை ( M.Rm.M culture foundation ) என்ற பெயரில் சிவகங்கை மாவட்டம்  செட்டிநாட்டு பகுதி  பெண்களை கொண்டு  அப்பகுதியில் புழக்கத்தில் இருந்த கொட்டான், கடகம் , தடுக்கு ,கூடை  போன்ற பனையால் செய்த பொருட்களை தற்காலத்திற்கு ஏற்ற வகையில் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும்  சென்னையில் உள்ள இவரது( M.Rm.M culture foundation MRC Nagar Main Road, No. 70, MRC Nagar 1st Ln, MRC Nagar, Raja Annamalai Puram, Chennai, Tamil Nadu 600028 https://chettinadculture.wixsite.com/mrmrmcf ) நிறுவனத்தில் விற்பனையும் செய்கின்றார்கள். இந்த நிறுவனத்திற்கு 2012 ஆண்டு தெற்காசிய நாடுகளுக்காக UNESCO நடத்திய கைவினைப்பொருட்களுக்கான  நிகழ்ச்சியில்   சிறந்த  கைவினைப்பொருளுக்கான விருதினை இந்நிறுவனத்தினர் பெற்றுள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது

--று.நா.இராமு

கம்பராமாயணமும் நாகேசுவரன் கோவில் குறுஞ்சிற்பமும் 4



இராமன், பரதன், இலக்குவன், சத்துருக்கன், என நால்வருக்கும் பெயர் வைத்தல்  #கம்பராமாயணம் #பால_காண்டம்  #திருஅவதாரப்_படலம்


சுரா மலைய, தளர் கைக் கரி எய்த்தே,
'அரா-அணையில் துயில்வோய்!' என, அந் நாள்,
விராவி, அளித்தருள் மெய்ப்பொருளுக்கே,
' #இராமன் ' எனப் பெயர் ஈந்தனன் அன்றே. 115

சுரதலம் உற்று ஒளிர் நெல்லி கடுப்ப
விரத மறைப் பொருள் மெய்ந்நெறி கண்ட
வரதன், உதித்திடு மற்றைய ஒளியை,
' #பரதன் ' எனப் பெயர் பன்னினன் அன்றே. 116

உலக்குநர் வஞ்சகர்; உம்பரும் உய்ந்தார்;
நிலக் கொடியும் துயர் நீத்தனள்; இந்த,
விலக்க அரு மொய்ம்பின் விளங்கு ஒளி நாமம்,
' #இலக்குவன் ' என்ன, இசைத்தனன் அன்றே, 117

'முத்து உருக்கொண்டு செம் முளரி அலர்ந்தால்
ஒத்திருக்கும் எழிலுடைய இவ் ஒளியால்,
எத் திருக்கும் கெடும்' என்பதை எண்ணா,
' #சத்துருக்கன் ' எனச் சாற்றினன் நாமம். 118
Dasharatha gives the #porridge (kheer) to his three queens (his three main wives), and they give birth to four sons between the three of them: Queen #Kaushalya gives birth to baby #Rama, Queen #Kaikeyi gives birth to baby #Bharata, and Queen #Sumitra gives birth to twins: baby #Shatrughna and baby #Lakshmana. The miraculous birth of Rama and his brothers Lakshmana, Bharata and Shatrughna, their early life in Ayodhya and education with Rishi Vasishtha.
#Chola_miniatures  #panels #Ramayana 
#kamba_ramayana #nageswaran_temple #kumbakonam
---Ramu.RmN

கம்பராமாயணமும் நாகேசுவரன் கோவில் குறுஞ்சிற்பமும் 3

#கோசலை வயிற்றில் #திருமால் அவதரித்தல் #கம்பராமாயணம் #பால_காண்டம்
 #திருஅவதாரப்_படலம்


ஆயிடை, பருவம் வந்து அடைந்த எல்லையின்,
மா இரு மண்மகள் மகிழ்வின் ஓங்கிட,
வேய் புனர்பூசமும், விண்ணுளோர்களும்,
தூய கற்கடகமும், எழுந்து துள்ளவே, 99

சித்தரும், இயக்கரும், தெரிவைமார்களும்,
வித்தக முனிவரும், விண்ணுளோர்களும்,
நித்தமும், முறை முறை நெருங்கி ஆர்ப்புற,
தத்துறல் ஒழிந்து நீள் தருமம் ஓங்கவே. 100

ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து,
அரு மறைக்கு உணர்வு அரும் அவனை, அஞ்சனக்
கரு முகிற் கொழுந்து எழில் காட்டும் சோதியை,
திரு உறப் பயந்தனள் - திறம் கொள் #கோசலை. 101

#Kausalya / kosalai was  the mother of Lord Rama  the eldest queen of #Ayodhya and the eldest consort of King Dasharatha among his three wives. In this panel where Kausalya feeds baby Rama she is reclining on a cot, holding the baby so that it does not fall off.The foreshortening of her limbs to fit into the panel

#Chola_miniatures  #panels #Ramayana 
#kamba_ramayana #nageswaran_temple #kumbakonam

---Ramu.RmN

கம்பராமாயணமும் நாகேசுவரன் கோவில் குறுஞ்சிற்பமும் 2

முனிவன் பணித்தபடி, தயரதன் தம் மனைவியர் மூவர்க்கும் பிண்டத்தைப் பகிர்ந்து அளித்தல் (86,87,88)பிதிர்ந்து வீழ்ந்ததையும் தயரதன் சுமித்திரைக்கு அளித்தல் (89)

மா முனி பணித்திட, மன்னர் மன்னவன்,
தூம மென் சுரி குழல் தொண்டைத் தூய வாய்க்
காமரு கோசலை கரத்தில், ஓர் பகிர்,
தாம் உற அளித்தனன், சங்கம் ஆர்த்து எழ. 86

கைகயன் தனையைதன் கரத்தும், அம் முறைச்
செய்கையின் அளித்தனன், தேவர் ஆர்த்து எழ-
பொய்கையும், நதிகளும், பொழிலும், ஓதிமம்
வைகுறு கோசல மன்னர் மன்னனே. 87

நமித்திரர் நடுக்குறு நலம் கொள் மொய்ம்புடை
நிமித் திரு மரபுளான், முன்னர், நீர்மையின்
சுமித்திரைக்கு அளித்தனன் - சுரர்க்கு வேந்து, 'இனிச்
சமித்தது என் பகை' என, தமரொடு ஆர்ப்பவே. 88

பின்னும், அப் பெருந்தகை, பிதிர்ந்து வீழ்ந்தது-
தன்னையும், சுமித்திரைதனக்கு நல்கினான் -
ஒன்னலர்க்கு இடமும், வேறு உலகின் ஓங்கிய
மன்னுயிர்தமக்கு நீள் வலமும், துள்ளவே. 89
#கம்பராமாயணம் #பால_காண்டம்
 #திருஅவதாரப்_படலம் 

Dasharatha gives the porridge (kheer) to his three queens Kaushalya ate half the porridge ( kheer ) Sumitra ate a quarter of it. Kaikeyi ate some and passes back to Sumitra who consumed for the second time. Thus the princes were conceived after the consumption of the porridge (kheer). Since Kaushalya had consumed the largest portion she gave birth to Rama. Kaikeyi gave birth to Bharata. Sumitra gave birth to Lakshmana and Shatrughna.
#nageswaran_temple #kumbakonam
#Chola_miniatures  #panels #Ramayana 
#kamba_ramayana

-- Ramu.RmN

கம்பராமாயணமும் நாகேசுவரன் கோவில் குறுஞ்சிற்பமும் 1

During the 9th century Nageswaran temple was  constructed by  Adithya Chola I. It is great marvel of architecture building technology. It bears another name called Kottam or Keezha Kottam.  The orientation is structured in such a way that it allows sunlight inside the temple right on the sanctum only during the Tamil month (April/May).The entire Ramayana had been depicted on the athirstanam region of the temple sanctum. “There is continuity in the depiction. Every inch is beautiful and the sculptures are known for perfect lining, bhava and craftsmanship.The miniatures are admirable in terms of dramatic representation, body language and architectonic construction. And in addition to all these, they also have minute decorations.


#கம்பராமாயணம் #பால_காண்டம்
 #திருஅவதாரப்_படலம் 

வேள்வித் தீயில் பூதம் எழுந்து, சுதை நிகர் பிண்டத்தைத் தரையில் வைத்து மறைதல்



ஆயிடை, கனலின் நின்று, அம் பொன் தட்டினில்
தூய நல் சுதை, நிகர் பிண்டம் ஒன்று, - சூழ்
தீ எரிப் பங்கியும், சிவந்த கண்ணும் ஆய்,
ஏயென, பூதம் ஒன்று எழுந்தது - ஏந்தியே. 84

வைத்தது தரைமிசை, மறித்தும் அவ் வழி
தைத்தது பூதம். அத் தவனும், வேந்தனை,
'உய்த்த நல் அமுதினை, உரிய மாதர்கட்கு,
அத் தகு மரபில்நின்று, அளித்தியால்' என்றான். 85

The glorious #Dasharatha, king of the equally glorious #Ayodhya, cannot conceive a son with his three wives Kaushalya, Kaikeyi or Sumitra. His minister and Guru Sage Vasishta advises him of a solution: ask the sage Rishyasringa to perform a son-getting ceremony. 

The king gets #Rishyasringa who performs the ceremony. The ceremony goes off very gloriously and well. A #gana emerged out with  celestial porridge and has himself handed to Dasharatha during Rishyasringa's sacrificial fire.

#Chola_miniatures  #panels #Ramayana 
#kamba_ramayana #nageswaran_temple #kumbakonam
 --Ramu.RmN