Wednesday 8 April 2020

கம்பராமாயணமும் நாகேசுவரன் கோவில் குறுஞ்சிற்பமும் 9


விசுவாமித்திரர் இராமனுக்குப் படைக்கலம் வழங்குதல் (1 ,2) இராமன் ஏவலுக்கு படைகள் அமைந்து நிற்றல் (3)

#கம்பராமாயணம் #பால_காண்டம்
#வேள்விப்_படலம்

 


விண்ணவர் போய பின்றை, விரிந்த பூமழையினாலே
தண்ணெனும் கானம் நீங்கி, தாங்க அருந் தவத்தின் மிக்கோன்,
மண்ணவர் வறுமை நோய்க்கு மருந்து அன சடையன் வெண்ணெய்
அண்ணல்தன் சொல்லே அன்ன, படைக்கலம் அருளினானே. 1

ஆறிய அறிவன் கூறி அளித்தலும், அண்ணல்தன்பால்,
ஊறிய உவகையோடும், உம்பர்தம் படைகள் எல்லாம்,
தேறிய மனத்தான் செய்த நல்வினைப் பயன்கள் எல்லாம்
மாறிய பிறப்பில் தேடி வருவபோல், வந்த அன்றே. 2



'மேவினம்; பிரிதல் ஆற்றேம்; வீர! நீ விதியின் எம்மை
ஏவின செய்து நிற்றும், இளையவன் போல' என்று
தேவர்தம் படைகள் செப்ப, 'செவ்விது' என்று அவனும் நேர,
பூவைபோல் நிறத்தினாற்குப் புறத்தொழில் புரிந்த அன்றே. 3


Rama  Lakshmana and  Vishwamitra finally, reached the place where Vishwamitra  planed to perform his sacred ritual. The young princes safe guarded the ritual for six days and nights.

#Chola_miniatures  #panels #Ramayana #kamba_ramayana #nageswaran_temple #kumbakonam

--Ramu.RmN

No comments: