Saturday 4 April 2020

கம்பராமாயணமும் நாகேசுவரன் கோவில் குறுஞ்சிற்பமும் 6

கம்பராமாயணத்தில் தடகையை வதைக்கும் முன் கீழ் காணும் பாக்களின் மூலம் இராமனுக்கு விசுவாமித்திரர் மந்திரங்களை தான் உபதேசிக்கின்றதாக கம்பர் குறிப்பிடுகின்றார் ஆனால் நமது நாகேசுவரன் கோவில் சிறப்ப தொகுப்பிலோ வில்வித்தையின் நுணுக்கத்தை பயிற்றுவிக்கும் வகையில் அமைந்துள்ளது.


வெம்மையை தாங்கும் ஆற்றல் பெற இராம இலக்குவருக்கு இரண்டு மந்திரங்களை முனிவன் உபதேசித்தல்


 #கம்பராமாயணம் #பால_காண்டம்
 #தாடகை_வதைப்_படலம்

 
எரிந்து எழு கொடுஞ் சுரம் இனையது எய்தலும்,
அருந் தவன், 'இவர், பெரிது அளவு இல் ஆற்றலைப்
பொருந்தினர் ஆயினும், பூவின் மெல்லியர்;
வருந்துவர் சிறிது' என மனத்தின் நோக்கினான். 17


நோக்கினன் அவர் முகம்; நோக்க, நோக்குடைக்
கோக் குமரரும் அடி குறுக, நான்முகன்
ஆக்கின விஞ்சைகள் இரண்டும் அவ் வழி
ஊக்கினன்; அவை அவர் உள்ளத்து உள்ளினார். 18


#Chola_miniatures  #panels #Ramayana #kamba_ramayana #nageswaran_temple #kumbakonam

In their course of travel Sage #Vishvamitra gives  the knowledge of the #Devastras or celestial weaponry [bala and adi bala] to #Rama and #Lakshmana he trains them in advanced religion and guides them to kill powerful demons.


In this miniature panel sculptor had shown beautifully how Sage Viswamitra giving Rama some additional training in wielding the bow


-- Ramu.RmN

No comments: